Flash News

Saturday, April 17, 2010

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே





முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே




கருணாநிதியின் துரோகங்களுக்கு அளவேயில்லாமல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. உலகத் தமிழர் வரலாற்றிலேயே, மிகப் பெரும் அவமானச்சின்னமாக கருணாநிதி உருவெடுத்து இருக்கிறார். ஆனால் வெட்கமேயில்லாமல் தன்னை இன்னும் தமிழினத் தலைவன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்

முதல் துரோகம்.

செங்கல்பட்டில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. பெயருக்குத்தான் முகாமே தவிர, அது ஒரு கொடுஞ்சிறை. இந்தியத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும், கொடுமைக்கு ஆளாக்குவதற்காகவே, தமிழ்நாட்டிலுள்ள ஒரு காவல்துறை பிரிவுதான் க்யூ ப்ரான்ச். ஈழத் தமிழர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டு, அந்த வழக்குகளில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யாமல் அவர்களை செங்கல்பட்டு கொடுஞ்சிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கும் க்யூ பிரிவு காவல்துறையின் தலைவர் கருணாநிதியே.




செங்கல்பட்டிலுள்ள ஈழ ஏதிலிகள் தங்களை வேறு முகாம்களுக்கு மாற்றுங்கள் என்றும், வழக்குகளில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுங்கள் என்றும் உண்ணாவிரதம் இருந்தனர். இவ்வாறு அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தவர்களை, பிப்ரவரி மாதத்தில் 150 காவல்துறையினரை விட்டு, கடுமையாக தாக்கி, அவர்கள் மீது பொய் வழக்கும் போட்டு, சிறையில் அடைத்தவர், தமிழினத் தலைவர் கருணாநிதி.


இரண்டாவது துரோகம்

அடுத்த நிகழ்வு நளினி தொடர்பானது. சிறை விதிகளின் படி, ஆண்டுதோறும், பத்தாண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனைக் குழுமம் அமைக்கப் பட வேண்டும். ஆனால் நளினி விஷயத்தில் 2006ம் ஆண்டுக்குப் பிறகு ஆலோசனைக் குழுமம் அமைக்கப் படவேயில்லை. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு வேறு வழியில்லாமல் 2009ல் ஆலோசனைக் குழுமம் அமைக்கப் பட்டது.

இக்குழுமத்தில் உள்ள ஏறத்தாழ அனைவருமே, நளினி முன் விடுதலைக்கு தகுதியானவர் என்று அறிக்கை அளித்து விட்டனர். குறிப்பாக நன்னடத்தை அதிகாரி, 31.07.2009 நாளிட்ட தனது அறிக்கையில் நளினி விடுதலைக்குப் பிறகு ராயப்பேட்டையில் உள்ள தனது தாயாரோடும், தம்பியோடும் வசிக்கப் போகிறார். அவர் அவ்வாறு வசிப்பதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது, எனவே நளினி முன் விடுதலைக்கு பரிந்துரை செய்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அதிகாரியை மிரட்டி வேறு வகையில் அறிக்கை கொடுக்க வைக்க இயலாத கருணாநிதி நளினியை விடுதலை செய்யாமல் இருக்க வேறு ஒரு தந்திரத்தை கையாண்டார்.






அது என்னவென்றால், திடீரென்று 19.08.2009 அன்று சிறை விதிகளில் ஒரு புதிய திருத்தத்தை வெளியிட்டார். அத்திருத்தத்தின் படி, ஒரு சிறைக் கைதியை முன் விடுதலை செய்வது தொடர்பாக அரசு, எந்த அதிகாரியிடமோ, எந்த நபரிடமோ அறிக்கை பெற்று விடுதலை தொடர்பான முடிவை எடுக்கலாம். எளிமையாகக் கூறினால், நளினியை விடுதலை செய்யலாமா கூடாதா என்பது குறித்து, கருத்துக் கூறும்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், சுதர்சனம், ஞானசேகரன் போன்றோரிடமோ, அல்லது, கோபாலபுரத்தில் கொய்யாப் பழம் விற்பவரிடமோ, நளினியை விடுதலை செய்யலாமா கூடாதா என்று அறிக்கை கேட்கலாம்.




தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காகவும், தன்னுடையதும், தமிழர்களுடைய மானத்தையும், காங்கிரஸ் காலடியில் அடமானம் வைத்துள்ளார் கருணாநிதி.

மூன்றாவது துரோகம்

நேற்று (வெள்ளி) தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அவர்கள் சிகிச்சை எடுக்கும் பொருட்டு, இந்தியாவுக்கு முறையான விசா பெற்ற பின் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.




80 வயதாகி படுத்த படுக்கையாக உள்ளவர் அவர். பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்டுள்ளார். சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது காவல்துறை. இது மத்திய அரசு முடிவாயிற்றே. இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும். கருணாநிதியின் கண்ணசைவு இல்லாமல், தமிழ்நாட்டில் ஒருவன் சிறுநீர் கூட கழிக்க முடியாது என்பது யதார்த்தம்.




விமான நிலையத்திற்குச் சென்று அவரைக் காண முயற்சி எடுத்த அய்யா பழ.நெடுமாறன் மற்றும், வைகோ ஆகிய இருவரையும், கருணாநிதியின் காவல்துறை கடுமையாக பிடித்துத் தள்ளி வதை செய்திருக்கிறது. இருந்தும், தள்ளு முள்ளோடு விமான நிலைய பார்வையாளர் பகுதி வரை சென்றவர்களை, தேசியத் தலைவரின் தாயாரை கடைசி வரை காண முடியாமலேயே சென்று விட்டனர். இதைக் கண்டித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்த சம்பவங்கள் அத்தனைக்கும் கருணாநிதியே காரணம் என்று கூறியிருக்கிறார்.





இத்தனை துரோகங்கள் இழைத்தும், இத்தனை தாய்மார்களின் வயிற்றெரிச்சலையும், சாபங்களையும் பெற்று, சக்கர நாற்காலியில் ஒரு புழுவைப் போல, நகர்ந்து வரும் கருணாநிதியை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. ஏசுவை காட்டிக் கொடுத்த யூதாசை விட, மோசமான ஒரு துரோகியாகவே கருணாநிதி வரலாற்றில் பதிவு செய்யப் படுவார்.



சவுக்கு

2 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆட்சி, மற்றும் பதவி வெறி , கண்ணை மறைக்கிறது..
மக்களே.. மனிதனாக இருந்தால், நல்ல பாடம் புகட்டுங்கள்..

Anonymous said...

வாழ வைத்து பார்ப்பதில் சிலருக்கு ஆனந்தம்.
அழ வைத்து பார்ப்பதில் சிலருக்கு ஆனந்தம்.

Post a Comment