Flash News

Monday, September 28, 2009

ராஜீவ் கொலையாளிகள் அரசை மிரட்டுகிறார்களா ?


நளினி


சமீபத்தில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களான ராபர்ட் பயாஸ் மற்றும் நளினி ஆகியோர், முன்விடுதலை கோரி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

ராபர்ட் பயஸ்

இதையொட்டி, தேசிய ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்றது. இவ்விவாதங்களில் பங்கு பெற்ற பெரும்பாலானோர் இந்த தேசத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவைக் கொன்ற கொலையாளிகளுக்கு எவ்வித கருணையும் காட்டக் கூடாது, இவர்கள் உண்ணாவிரதம் இருந்து அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று பலவாறு கருத்துச் சொன்னார்கள்.
இந்த விஷயத்தில் என்னதான் நடந்தது ? நளினியும் ராபர்ட் பயாசும் உண்ணாவிரதம் இருக்கக் காரணம் என்ன ?


வேலூர் சிறை


1991ல் ராஜீவ் கொலை, இந்தியாவை உலுக்கியது என்பது யாரும் மறுக்க முடியாததே. ஆனால், ராஜீவ் மரணத்தை தனியாக ஒரு அரசியல் கொலை என்று பார்க்க இயலாது. ராஜீவ் மரணம், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையோடும், இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய படுகொலைகளோடும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையிலிருந்து திரும்பி வரும் அமைதிப்படை


ராஜீவ் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இன்று முள்வேளிக்குள் மூன்றரை லட்சம் தமிழர்கள் அடைப்பட்டிருக்கமாட்டார்கள். உங்கள் வீட்டிற்குள் ரவுடிகளை அனுப்பி உங்கள் அக்காவையும், தங்கையையும் பலாத்காரம் செய்த ராணுவத்தை அனுப்பியவரிடம், நீங்கள் சமாதானம் பேசுவீர்களா என்று சிந்தித்து பாருங்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்திய அட்டூழியத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் விரிவாக விவரித்திருக்கிறது.


அமைதிப்படை அட்டூழியங்களை விவரிக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை


இது தவிர பல்வேறு ஊடகங்களில் இந்த விஷயம் தெளிவாகவே பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
ராஜீவ் மரணம் குறித்து, வருத்தத்தோடு பேசும் அறிவு ஜீவிகள், இந்திய ராணுவத்தால், அழிக்கப் பட்ட ஆயிரக்கணக்கான உயிர்களைப் பற்றி வாய்த்திறக்க மறுக்கிறார்களே ஏன் ? அவர்களின் உயிர், ராஜீவ் உயிரைவிட மதிப்புக் குறைவானதா என்ன ?

இலங்கை கடற்படை வீரரால் தாக்கப் பட்ட ராஜீவ்

ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது என்று கூப்பாடு போடும் ஊடகங்கள், இந்திரா படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டத்தில், இறந்த 4000 சீக்கிய உயிர்களுக்காக இன்னும் ஒருவர் கூட தண்டிக்கப் படவில்லை என்று தெரியுமா ? 4000 சீக்கியர்கள் படுகொலை செய்யப் படுகையில், ராஜீவ் அளித்த விளக்கம் நினைவிருக்கிறதா ? “ஒரு பெரிய ஆலமரம் விழுகையில், பூமி அதிரத்தான் செய்யும்“ சீக்கியப் படுகொலைகளுக்காக இது வரை 10 விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

1984 சீக்கியர்கள் படுகொலை


1984ல் நவம்பரில் “மார்வா“ கமிஷன் அமைக்கப் பட்டது. ராஜீவ் காந்தி, இந்தக் கமிஷனை உடனடியாக கலைத்தார். மே 1985ல் “மிஸ்ரா“ கமிஷன் அமைக்கப் பட்டு, அது இன்னும் மூன்று கமிஷன்கள் அமைக்க வேண்டும் என்று பரிந்துரை அளித்தது. நவம்பர் 1985ல் தில்லோன் கமிஷன் அமைக்கப் பட்டு, இறந்த சீக்கியர்களுக்கான நிவாரணத் தொகையை பரிந்துரை செய்தது. ஆனால் ராஜீவ் அரசாங்கம், இந்தக் கமிஷனின் பரிந்துரையை நிராகரித்தது. பிப்ரவரி 1987ல், “கபூர்-மிட்டல்“ கமிஷன் அமைக்கப் பட்டு, 72 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது. ஆனால், அரசு ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. பிப்ரவரி 1987ல் அமைக்கப் பட்ட “ஜெயின்-பானர்ஜி“ கமிட்டி, ஜக்தீஷ் டைட்லர் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகிய இரு காங்கிரஸ் பிரமுகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யச் சொல்லி பரிந்துரைத்தது. டெல்லி உயர்நீதிமன்றம், இக்கமிஷன் அமைக்கப் பட்டதே செல்லாது என்று தீர்ப்பளித்தது. “மிஷ்ரா“ கமிஷன் பரிந்துரையின் படி அமைக்கப் பட்ட “அஹுஜா“ கமிட்டி, கலவரத்தில் இறந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 2733 என்று உறுதி செய்தது. இதற்குப் பின் மார்ச் 1990ல் அமைக்கப் பட்ட “பொட்டி-ரோஷா“ கமிட்டி சஜ்ஜன் குமார் மற்றும் ஜெக்தீஷ் டைட்லர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்தது. டிசம்பர் 1990ல் அமைக்கப் பட்ட “ஜெயின்-அகர்வால்“ கமிஷனும் ஜெக்தீஷ் டைட்லர், எஜ்.கே.எல்.பகத் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும் பரிந்துரையை உறுதி செய்தது.


ஜெகதீஷ் டைட்லர்

ஆனால் அப்போது இருந்த நரசிம்ம ராவ் அரசு இந்த கமிட்டியை கலைத்து விசாரணையை நிறுத்தி 1993ல் உத்தரவிட்டது. பிறகு டிசம்பர் 1993ல் அமைக்கப் பட்ட “நாருல்லா“ கமிஷனும், இந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யும் பரிந்துரையை உறுதி செய்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இறுதியாக பிஜேபி அரசாங்கத்தால் அமைக்கப் பட்ட “நானாவதி“ கமிஷனும் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்வதை உறுதி செய்தது.
ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் என்ன செய்தது ? ஜெக்தீஷ் டைட்லருக்கு டெல்லியில் பாராளுமன்றத் தொகுதியில் நிற்க டிக்கெட் அளித்தது. பொதுமக்கள் எதிர்ப்பால், பிறகு டைட்லர் வாபஸ் பெற்றார்.
4000 சீக்கிய மக்கள் படுகொலை செய்யப் பட்டதற்கு இது வரை ஒருவரை கூட தண்டிக்காத தேசம் இது. ! ஆனால் ராஜீவ் கொலையாளிகள் மட்டும் சிறையை விட்டு வெளியே வரவே கூடாதாம்.


ராஜீவ் சோனியா

நளினி மற்றும் ராபர்ட் பயாஸ் ஒன்றும் நியாயமற்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. 2001ம் ஆண்டிலேயே நளினி 10 ஆண்டுகள் தண்டனை முடித்து விட்டார். ஆனால் 2001ம் ஆண்டிலிருந்து, நளினியை விட குறைந்த தண்டனை காலத்தை கழித்தவர்கள் (7 ஆண்டுகள் முடித்தவர்கள் உட்பட) 2000 பேரை, தமிழக அரசு முன்விடுதலை செய்துள்ளது.

ஆயுள் தண்டனை பெற்ற மற்ற கைதிகளை 7 ஆண்டுகளுக்குள் விடுதலை செய்கையில், 18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்யுங்கள். எங்கள் மீது மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது ?

சிபிஎம் கவுன்சிலர், லீலாவதி அழகிரியின் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டார். அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப் பெற்று, உயர்நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இவர்கள் அனைவரையும் 7 ஆண்டுகள் முடிந்ததால், அண்ணா பிறந்தநாளையொட்டி 2008ம் ஆண்டு தமிழக அரசு விடுதலை செய்தது. லீலாவதி கொலையாளிகளுக்கு மட்டும் 7 ஆண்டுகள் தண்டனை. ராஜீவ் கொலையாளிகளுக்கு 18 ஆண்டுகள் கடந்த பிறகும் எப்போது விடுதலை என்று சொல்ல இயலாது என்று மத்திய அரசும் மாநில அரசும் சொல்லுகிறது. இந்த அநியாயத்தையும் பாரபட்சத்தையும் எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தால் அது தவறா ?

செப்டம்பர் 2008ல் சென்னை உயர்நீதிமன்றம், நளினி முன் விடுதலை செய்வதற்காக கூட்டப்பட்ட ஆலோசனைக் குழுமம் செல்லாது, புதிதாக ஒரு ஆலோசனைக் குழுமத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. ஒரு வருடம் கழிந்தும் இந்த ஆலோசனைக் குழுமம் தமிழக அரசால் கூட்டப் படவேயில்லை. நளினியும் ராபர்ட் பயாசும் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதும், அரசு அவசர அவசரமாக அக்டோபர் 10க்குள் ஆலோசனைக் குழுமத்தை கூட்டுகிறோம் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கே, உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் தேசிய ஊடகங்கள் ராஜீவ் கொலையாளிகள் வெளியே வரவே கூடாது என்று முழங்குகின்றன.

என்டிடிவி சேனலில், நளினி உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றி குஷ்பூ-விடம் கருத்து கேட்கப் பட்டபோது “ஏற்கனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைத்ததன் மூலம் சோனியா நளினிக்கு கருணை காட்டிவிட்டார், இப்போழுது நளினி உண்ணாவிரதம் இருப்பது தவறானது“ என்று கூறுகிறார். ஒரு அரசியல் கொலை வழக்கில் தண்டனை பெற்று முன் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கும் ஒருவரைப் பற்றி “மானாட மயிலாட“ நிகழ்ச்சியில் அரை நிர்வாண நடனத்திற்கு நடுவராக இருப்பவரிடம் கருத்து கேட்கும் என்டிடிவி நிருபர் சஞ்சய் பின்டோவையும், என்டிடிவியையும் என்னவென்று சொல்வது. ?

நளினி

18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலையாளிகளை மேலும் சிறையில் வைத்திருப்பது, மிக மிக கடுமையான மனித உரிமை மீறலாகும். எனவே அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும்.




/ஒப்பாரி/

Thursday, September 24, 2009

பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு !




ஒரு மொழி என்பது யாரால் சிறப்பு பெறுகிறது ? மக்களால் சிறப்பு பெறுகிறது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி... “ என்றெல்லாம் பழம்பெருமை பேசி வருகிறோமே. இத்தனை ஆண்டுகாலம், மக்கள் இந்த மொழியை பேசி வருவதால்தான் இன்னும் தமிழ் என்ற மொழி வாழ்ந்து வருகிறது. மக்களால் பேசப்படாத சமஸ்கிருதம், இன்று ஏட்டளவில்தான் உள்ளது என்பதை மறக்கவியலாது.

மொழியைவிட, அம்மொழி பேசும் மக்களால்தான் எந்த மொழிக்குமே சிறப்பு. 4 நாட்கள் பட்டினியாய் இருக்கும் ஒருவனிடம், “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்“ என்று கூறினால், “போடா மயிறு“ என்று திட்டுவான். எல்லாவற்றிலும், மக்களே பிரதானம். மக்களால்தான், கடவுளுக்குக் கூட சிறப்பு. மக்கள் கூட்டம் செல்லாத கோயிலுக்குக் கூட பெருமையில்லை.

இன்று 9வது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்கும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டு அறிவிப்புக்கு, தினமணி நாளேடு, கீழ்க்கண்டவாறு தலையங்கம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளது.

“14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி! “

இந்த 9ம் உலகத் தமிழ் மாநாடு, நடைபெறும் இந்தச் சூழ்நிலையை, ஆராய்ந்து பார்ப்பது, சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரின் கடமை.

இன்று தமிழர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் ? தமிழர்கள் என்றதும், ஈழத்தை நினைக்காமல் இருக்க இயலாது.

ஈழத்தில், தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?



ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், காயங்களுக்கு மருந்தில்லாமலும், உணவில்லாமலும், ஈசல்களைப் போல செத்து மடிந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
அக்டோபர் 2008லிருந்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனுதினமும் உண்ணாவிரதங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?


“போரை நிறுத்து“ என்ற முழக்கம் தமிழத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?



மனிதச் சங்கிலி நடத்தி, “காப்பாற்றுங்கள் தாயே“ என்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு, இப்போரை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்துக் கொள்ள தெரியவில்லை. 4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, “போர் நின்று விட்டது“ என்று போலி அறிவிப்பு வெளியிடத் தெரிந்த கருணாநிதிக்கு, இந்தியா தலையிடாவிட்டால், ஆதரவு வாபஸ் என்று சொல்லத் தெரியவில்லை.


உண்ணாவிரதத்திற்குப் பின் இன்னும் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு, மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்று பசப்பத் தெரிந்த கருணாநிதிக்கு ரத்தக் கரங்களுக்குச் சொந்தமான காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என்று சொல்லத் தெரியவில்லை. மகனுக்கும் மகளுக்கும் மந்திரி பதவி வேண்டி, டெல்லி சென்று, தள்ளு வண்டியில், சோனியா வீட்டுக்குச் சென்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்துங்கள் என்று மிரட்டத் தெரியவில்லை.


கேட்ட பதவி கிடைக்கவில்லை என்றதும், பதவியேற்பு விழாவில் பங்கெடுக்காமல், கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொள்ளத் தெரியவில்லை.
பிரிந்த குடும்பம் இணைந்தவுடன் “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது“ என்று மகிழ்ந்த கருணாநிதிக்கு தமிழர்களின் மரணமும் இதயத்தில் இனித்ததோ என்னவோ ?



போர் முடிந்ததுமாவது, முகாம்களுக்குள் அடைபட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தாரா இந்தக் கருணாநிதி ?




டெல்லிக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு எனது கடமை முடிந்து விட்டது என புதிதாக கட்டப் பட்டு கொண்டிருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றிப் பார்க்க தனது தள்ளு வண்டியில் கிளம்பி விடுகிறார்.



ஈழத்தில் இருக்கும் தமிழர்களை விடுங்கள். இந்தியத் தமிழர்களான மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே .... ! 300க்கும் மேற்பட்டவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்களே; என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்தக் கருணாநிதி ? முன்புதான் விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கொன்றார்கள். இப்பொழுது இவர்கள் கணக்குப்படிதான் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டுவிட்டார்களே. நாள்தோறும் தமிழக மீனவர்கள், கச்சத் தீவு அருகிலும், இந்திய எல்லைக்குள்ளாகவும் துரத்தித் துரத்தித் தாக்கப் படுகிறார்களே.... என்ன செய்கிறார் இந்தக் கருணாநிதி ?

உலகத் தமிழர்கள் கருணாநிதியால் ஏமாந்து போனார்கள் என்று நெடுமாறன் அறிக்கை விட்டால், என் உயிரைப் பிரிக்க சதி என்று பதிலறிக்கை விடுகிறார். கருணாநிதியின் உயிரை எடுப்பதால் யாருக்கு என்ன லாபம் ? கருணாநிதியின் குடும்பத்தில் வேண்டுமானால் யாராவது சதி செய்யலாம். என் உயிரைப் பறிக்க சதி என்று அறிக்கை விட்டால், கருணாநிதியின் துரோகங்கள் மறைந்து, மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள் என்று கருணாநிதி பகல் கனவு காணுவாரேயானால் அவரது கனவு பலிக்காது.


தமிழர்கள் இத்தனை துயரத்தில் இருக்கையில், தமிழுக்கு மாநாடு நடத்துவது யார் காதில் பூச் சுற்ற ? இத்தனை தமிழர்களின் பிணங்களின் மேல் தன் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, கருணாநிதி நடத்தும் இந்த மாநாட்டை தமிழன்னை விரும்பமாட்டாள். இந்த உலகத் தமிழ் மாநாடு, தமிழர்களுக்கு நடத்தப்படும் கருமாதியே தவிர வேறு இல்லை.


/ஒப்பாரி/

Wednesday, September 23, 2009

அதிகாரிகளை நம்பி மோசம் போன ஜெயலலிதா !



1991ல் ராஜீவ் மரணத்திற்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையால், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் தனக்கு திடீரென தந்த பதவியை சரிவர பயன்படுத்தத் தவறினார். தமிழகம் வரலாறு காணாத ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் சந்தித்தது. எதிர்த்துக் குரல் கொடுத்த அனைவரும், அப்போது அமலில் இருந்த “தடா“ என்ற “ஆள் தூக்கிச் சட்டத்தால் சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஜெயலலிதா, அம்மன் மற்றும் புனித மேரியாக சித்தரிக்கப் பட்டார். நிரந்தர முதல்வர் என்ற அடைமொழி வழங்கப் பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சியினர், குண்டுக் கட்டாக வெளியேற்றப் பட்டனர். எதிர்ப்புக் குரல் அனைத்தும் ரவுடிகள் மற்றும் காவல்துறையினரால் அடக்கப் பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் திராவகம் வீசித் தாக்கப் பட்டனர். தேர்தல் ஆணையர், விமானநிலையத்தை விட்டு வெளியே வரமுடியாமல் சிறை வைக்கப் பட்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக வளர்ப்பு மகன் திருமணம் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு நடத்தப் பட்டது. காவல் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும், அதிமுக மாவட்டச் செயலாளர்களைவிட விசுவாசமாக நடந்து கொண்டனர்.



இத்தனை காரணங்களால், கடும் எரிச்சலுக்குள்ளான மக்கள், 1996ல் கருணாநிதியை தேர்ந்தெடுத்தனர். கருணாநிதியும், ஓரளவுக்கு நன்றாகவே ஆட்சி செய்தார். இப்போது இருப்பது போல், ஊழல் குற்றச் சாட்டுகள் பெரிதாக இல்லாத அளவுக்கே அந்த ஆட்சி இருந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், மற்றும் அதிகாரிகள் மேல், பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

நன்றாக ஆட்சி செய்தாலும், 2001ல் அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், திமுக தோற்று, ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதா செய்த அத்தனை தவறுகளையும் மக்கள் மன்னித்து, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தார்கள். ஆனால், நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல், ஜெயலலிதா 1991ல் இருந்ததைவிட மோசமான ஆட்சியை நடத்தத் தொடங்கினார். 1991ல் “தடா“ என்ற ஆள்தூக்கிச் சட்டம் இருந்தால், 2001ல் ஜெயலலிதாவுக்கு வசதியாக, “போடா“ என்ற கொடுங்கோல் சட்டம் அமலில் இருந்தது. இச்சட்டத்தின் கீழ், ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், என பலரையும் சிறையில் அடைத்தார். மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி வெட்ட தடை, ராணி மேரி கல்லூரி இடிக்க முயற்சி என்று பல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே, பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப் பட்டனர். கஜானா காலி கருணாநிதி கடன் வைத்து விட்டார் என்று அறிக்கை விட்டார். கருணாநிதி, நான் அரிசியாக கிடங்கில் வைத்து விட்டேன் என்று பதில் அறிக்கை விட்டார். அந்த அரிசி புழுத்த அரிசி, என்று பதில் குற்றச் சாட்டு கூறி விசாரணைக்கு உத்தரவிட்டார்.



இது எல்லாவற்றையும் விட, பின்விளைவுகளை அறியாமல் ஜெயலலிதா எடுத்த மிக மிக முட்டாள்த்தனமான நடவடிக்கை அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டதுதான். அரசு ஊழியர்கள் என்பவர்கள், இந்நாட்டின் மிக மிக சுயநலமான கூட்டத்தில் ஒரு பகுதியினர். நாட்டில், என்ன அநியாயம் நடந்தாலும், “நான், எனது குடும்பம்“ என்று மட்டுமே சிந்திக்கும் ஒரு கூட்டம் உண்டென்றால், அது அரசு ஊழியர்கள் தான். சராசரியாக ஓரளவு நியாயமான ஊதியம் பெற்று வந்தாலும்,

இது போதாது, வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் அதிகம், எப்படி கூடுதல் வருமானம் பெறுவது என்று மட்டுமே சிந்திக்கும் கூட்டத்தினர் அவர்கள். இந்த அரசு ஊழியர்களை கடுமையாக பகைத்துக் கொண்டார் ஜெயலலிதா.


ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே, “அரசு ஊழியர்கள் வெறும் 2 சதவிகிதம் தான், அவர்கள், அரசு வருவாயில், 94 சதவிகிதத்தை ஊதியமாக பெறுகிறார்கள்“ என்று அறிக்கை வெளியிட்டு, அரசு ஊழியர்களின், சரண் விடுப்பு, ஓய்வூதியப் பயன்கள், பயணப்படி, விடுப்புக் கால பயணப்படி, இன்னும் பல சலுகைகளை ரத்து செய்தும் குறைத்தும் ஆணையிட்டார் ஜெயலலிதா.


இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள் ஜுலை 2002 ஆண்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வேலை நிறுத்தத்தை, பேச்சு வார்த்தை மூலம் தவிர்க்க எந்த முயற்சியையும் ஜெயலலிதா எடுக்கவில்லை. அப்போது, தலைமைச் செயலாளராக இருந்த, சங்கர், நிதிச் செயலாளர் நாராயணன், மாநகர ஆணையாளர் விஜயக்குமார், உளவுப் பிரிவு தலைவர் நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம் என ஆலோசனை கூறினர். இவர்கள் பேச்சைக் கேட்ட ஜெயலலிதா, வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவித்தார். அதை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, நள்ளிரவில், காவல்துறையினரை விட்டு கைது செய்தார். நாகரிகமாக நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள் இந்த நள்ளிரவு கைது கண்டு, நடுங்கிப் போயினர்.



இதையும் தாண்டி, காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த அரசு ஊழியர்களை இரவோடிரவாக காலி செய்ய சொல்லி மிரட்டினர். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்கும் மேலாக, ஏறக்குறைய 1.7 லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப் பட்டனர். கடும் அதிர்ச்சிக்கு ஆளான ஊழியர்கள், நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றால், அனைவரின் டிஸ்மிஸ் உத்தரவையும் ரத்து செய்வதாக தெரிவித்ததையடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு இரவோடு இரவாக தலைமை நீதிபதி வீட்டில், மேல்முறையீடு செய்து, அவ்வுத்தரவுக்கு தடை பெற்றது. அரசு ஊழியர்கள் 1.7 லட்சம் பேர் டிஸ்மிஸ் செய்யப் பட்டது செல்லும் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

இதற்கிடையில், தற்காலிகமாக அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப் பட்டது. இதற்குப் பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், மூன்று குழுக்களை அமைத்து, அரசு ஊழியர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப் பட்டன.
சிறந்த அரசியல்வாதியான கருணாநிதி, அரசு ஊழியர் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், “கழக அரசு வந்ததும், அனைவருக்கும் உடனடியாக வேலை“ என்று அறிவித்தார். அடுத்து 2004ல் வந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.


அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, தனது மக்கள் விரோத உத்தரவுகள் அனைத்தையும், வாபஸ் பெற்றார். அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டது மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தவர், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் அளித்தார். ஆனாலும், கடும் நெருக்கடிக்கு ஆளான அரசு ஊழியர்கள் ஜெயலலிதாவை மன்னிக்கத் தயாராக இல்லை. 2006ல் மீண்டும் ஜெயலலிதா தோல்வியையே சந்தித்தார்.



2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, சொன்னது போலவே, வேலை இழந்த அனைவருக்கும் மீண்டும் வேலை அளித்தார். அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்தார்.

அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்று உணர்ந்த கருணாநிதி, மீண்டும் மீண்டும் சலுகைகளை அள்ளி வழங்கினார். மத்திய அரசு பஞ்சப்படி வழங்கிய உடனே தாமதமில்லாமல் பஞ்சப்படி வழங்கப் பட்டது. ஊதியக்குழு நிலுவைகள் அனைத்தும் உடனடியாக வழங்கப் பட்டன. ஒரு ஆண்டுக்குள் மூன்று பஞ்சப்படிகள் வழங்கப் பட்டன. இதற்கான விசுவாசத்தை, அரசு ஊழியர்கள் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியதன் மூலம் நிரூபித்தனர். திமுக அரசு ஈடுபடும் அனைத்து முறைகேடுகளிலும் பங்கெடுப்பதன் மூலமும், தேர்தலில் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்தனர்.



அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலாலும், தனது ஆணவத்தாலும், அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்ட ஜெயலலிதா, இன்று வரை அதற்கான பயனை அனுபவித்து வருகிறார்.

/ஒப்பாரி/


Tuesday, September 22, 2009

அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்





கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,

செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.

தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“ என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.

வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.



ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.




67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், தமிழக மக்களை நாம் ஏமாற்றி வந்தோம். ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.

எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.

பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.



“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.

இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !


மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.

ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.

/ஒப்பாரி/



Tuesday, September 8, 2009

ராஜன் லாக்கப் மரணம் காவல்துறையின் கோர முகம்



சென்னையை அடுத்த பனையூரில், கடந்த 24.08.2009 அன்று இளங்கோவன் செட்டியார் மற்றும் அவரது மனைவி ரமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள், காயமடைந்தார். இக்கொலை வழக்கில், ராஜன் எனும் சண்முகசுந்தரம் என்பவர், இக்கொலையை செய்ததாக சந்தேகிக்கப் பட்டு பொதுமக்களால் பிடிக்கப் பட்டு, காவல்துறை வசம் ஒப்படைக்கப் பட்டார்.

இச்சம்பவத்தில் ராஜன் எப்படி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப் பட்டார் என்பது பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. காவல்துறையினர், ஆரம்பம் முதலே இவ்விஷயத்தில் உண்மை வெளிவராவண்ணம் கவனமாக செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது.

சம்பவம் நடந்த தினமான 24.08.2009 மாலை 6 மணிக்கு சண்முகராஜனின் வீட்டுக்கு ஜே.1 சைதாப்பேட்டை காவல்நிலையத்திலிருந்து இருவர் வந்து ராஜனின் மனைவி அமுதவல்லியை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அமுதவல்லி தனியாக அனுப்ப விருப்பமில்லாமல், ராஜனின் தம்பி வெங்கடேஷ் மற்றும் அவரது தாயார் ஆகியோர் சைதை காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர். அமுதவல்லி, முதுநிலை பொறியியல் பட்டதாரி. காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள், தொடர்ந்து கடுமையாக விசாரிக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே நடந்த “டாமின்” நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி சரவணனுக்கும், ராஜனுக்கும் தொடர்பு என்னவென்று கேட்டு துன்புறுத்தியுள்ளனர்.


இரவு 09.30 மணிக்கு ராஜனின் தம்பி வெங்கடேஷை மட்டும் ஒரு போலீஸ் ஜீப்பில் வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டுள்ளனர். ராஜன் அறை முழுவதும் 1 மணி நேரம் சோதனையிட்டபின் எதுவும் கிடைக்காமல் போகலாம் என முடிவெடுத்தபின் அந்த அறையை பூட்ட வெங்கடேஷ் எத்தனித்தபோது, பூட்ட வேண்டாம் என தடுத்த போலீசார், மீண்டும் ஒரு முறை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர்.

அப்பொழுது வெங்கடேஷை அருகில் இருந்த அறைக்குச் சென்று கலைந்திருந்த பொருட்களை எடுத்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பெண்கள் வந்ததும் எடுத்து வைத்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளதற்கு “போய் எடுத்து வைடா “ என்று மிரட்டியுள்ளார்கள்.

வெங்கடேஷ் பொருட்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வெங்கடேஷை அழைத்து அங்கே பார் என்று உயர இருந்த அலமாரியைக் காட்டியுள்ளனர். அங்கே ஒரு பை இருந்தது. “சார் அது காலியாத் தானே இருந்தது, அது எங்க பை இல்ல சார்“ என்று கூறியதற்கு “வாய மூடுடா, அதுல துப்பாக்கி இருக்குது, அத இங்கதான் எடுத்தோம், புரிஞ்சுதா ? “ என்று மிரட்டியுள்ளனர்.

பிறகு பீரோவில் இருந்த அமுதவல்லியின் நகைகளை எடுத்து தரையில் அடுக்கி போட்டோ எடுத்தனர்.

பிறகு இரவு 10.30 மணிக்கு மீண்டும் வெங்கடேஷ் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் அண்ணி மற்றும் தாயாரோடு விசாரிக்கப் பட்டார். இரவு 12.30 மணிக்கு மூவரும் அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு, ராஜனோடு பேச வைத்துள்ளனர்.

ராஜனை பார்த்த குடும்பத்தினர், ராஜன் பேன்ட் மட்டும் அணிந்து, உடல் முழுவதும் காயங்களோடு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜனோடு அமுதவல்லியை பேசவைத்த போலீசார், ராஜன் பேச முற்படுகையிலேயே, கடுமையாக வாய் மீது தாக்கியுள்ளனர். தன் மனைவி முன்னிலையில் கடும் தாக்குதலுக்கு உள்ளான ராஜன், தொடர்ந்து அடிவாங்கியபடி இருந்துள்ளார்.


அப்போது அடையாறு காவல் நிலையத்தில் இணை ஆணையர் ரவிக்குமார், துணை ஆணையர்கள் திருஞானம், சம்பத் குமார், மவுரியா மற்றும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் அங்கோ குழுமியிருந்தனர்.

எந்தவித புகாரிலும், குற்றச் சாட்டிலும் சிக்காத தன் கணவர் ராஜன், இப்படி காவல்துறையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி நிலைகுலைந்து இருப்பதைப் பார்த்த அமுதவல்லி கதறி அழுதார்.


பின்னர் ராஜனின் இன்னொரு தம்பி குருமூர்த்தியும் காவல்நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். ராஜன், அவரது தம்பிகள் குருமூர்த்தி, மற்றும் வெங்கடேஷ் ஆகிய மூவரும், கடும் தாக்குதலுக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளனர். ராஜனை, அசோக் நகர் உதவி ஆணையர், தலையிலேயே முஷ்டியால் குத்தியுள்ளார். ஐந்து முறை குத்தியவுடன், ராஜன் அதிர்ச்சி அடைந்து தரையில் உட்கார்ந்துள்ளார்.

சுமார் 3.30 மணிக்கு ராஜன் வாந்தி எடுத்துள்ளதாக குரல் வந்துள்ளது. அப்போது வெள்ளை உடை அணிந்த ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அதற்குப் பிறகு, காவல்நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் ஒவ்வொருவராக வெளியேறியுள்ளனர். காலை சுமார் 430 மணிக்கு, ராஜன் குடும்பத்தாரை நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று அனுப்பியுள்ளனர்.

மறுநாள் மாலை 7 மணிக்கு மீண்டும் ராஜன் வீட்டுக்கு வந்த போலீசார், ராஜன் வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப் பட்டதாக சோதனைப் பட்டியலில் கையொப்பம் இடச் சொல்லி ராஜன் தம்பி வெங்கடேஷை வற்புறுத்தியுள்ளனர். மறுத்த வெங்கடேஷை கடுமையாக தாக்கி கையொப்பம் பெற்றுள்ளனர்.

வீட்டுக்கு வந்த ராஜன் குடும்பத்தினர், தொலைக்காட்சியைப் பார்த்தே, ராஜன் கொல்லப்பட்ட விவகாரத்தை அறிந்துள்ளனர். ராஜன் உடல் ராயப்பேட்டை போஸ்ட் மார்ட்டத்திற்காக ராயப்பேட்டையில் இருந்தபோது, ராஜன் உறவினர்களை, ராயப்பேட்டையில் இருந்து நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். உறவினர்கள் வரவேண்டியுள்ளது என்று கூறியதற்கு 3 மணி நேரம் அவகாசம் தருகிறோம், அதற்குள் எரிக்க வேண்டும் என்று கடும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

பயந்து போன ராஜன் குடும்பத்தினர், வேறு வழியில்லாமல், ராஜன் உடலை உடனடியாக காவல்துறையினர் கட்டளையிட்டவாறு எரித்துள்ளனர். உடல் சரியாக எரிந்துள்ளதா என்று துணை ஆணையர் ஒருவர் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
பீகார் மற்றும் ஆந்திரா சென்று வந்ததற்கான ஆவணங்கள் ராஜன் வீட்டிலிருந்து கைப்பற்றப் பட்டது என்று செய்தி வெளியானதை அறவே மறுக்கின்றனர் ராஜன் குடும்பத்தார். அவ்வாறு சோதனையும் நடக்கவில்லை, ராஜன் வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இல்லை என்று கூறுகின்றனர்.


சி.பி.சிஐடி போலீசார், இன்று வெளியிட்ட அறிக்கையில், நீலாங்கரை இரட்டைக் கொலையில், ராஜன் மட்டும்தான் குற்றவாளி, இதில் வேறு யாருக்குமோ, அரசியல் தொடர்போ அறவே இல்லை என்று வெளியிட்டதிலிருந்து முழுப் பூசணிக்காயை சேற்றில் மறைக்க முயற்சித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

மேலும், இவ்விஷயத்தில், கதிரவன் என்ற நபரின் பங்கு போலீசாரால் விசாரிக்கப் படாமலேயே மறைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. கதிரவன் என்ற நபர்தான் ராஜனின் நண்பர், அவருக்குத் தான் ராஜனின் நடவடிக்கைகள் பற்றிய முழு விபரம் தெரியும் என்று கூறுகின்றனர் ராஜன் குடும்பத்தார்.

ஆனால், இந்தக் கதிரவன் பற்றி காவல்துறையினர் விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது கடும் முரணாக உள்ளது. இந்த மர்ம முடிச்சுகள் அவிழாமல் பார்த்துக்கொள்ள, காவல்துறைக்கு அதிகார வட்டங்களில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்த இரட்டைக் கொலை வழக்கில், இத்தனை மர்மங்கள் இருந்தும், காவல்துறையின் மெத்தனமான, ஏனோ தானோ என்ற விசாரணை கடும் ஐயங்களை எழுப்புகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதிதான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும், ஆனால், அறிக்கை விட்டதற்கெல்லாம் சம்மன் அனுப்பி, எதிர்ப்புக் குரல்களை நெறிக்கத்தான் பார்க்கிறார் கருணாநிதி.

ஒப்பாரி

Monday, September 7, 2009

நீலாங்கரை இரட்டைக் கொலை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி !



சென்னையை அடுத்த பனையூரில், கடந்த 24.08.2009 அன்று இளங்கோவன் செட்டியார் மற்றும் அவரது மனைவி ரமணி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது மருமகள், காயமடைந்தார். இக்கொலை வழக்கில், ராஜன் எனும் சண்முகசுந்தரம் என்பவர், இக்கொலையை செய்ததாக சந்தேகிக்கப் பட்டு பொதுமக்களால் பிடிக்கப் பட்டு, காவல்துறை வசம் ஒப்படைக்கப் பட்டார்.

சம்பவம் நடந்த இடம், நீலாங்கரை காவல்துறை சரகத்துக்குள் வந்தாலும் ஏனோ ராஜன் அடையாறு காவல் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டார். அடையாறு காவல்நிலையத்தில், ராஜன் இணை ஆணையர் வி.ஏ.ரவிக்குமார், துணை ஆணையர்கள் மவுரியா, சம்பத்குமார், திருஞானம் மற்றும், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்களால் சராமரியாக தாக்கப் பட்டுள்ளார். இது போதாதென்று ராஜனின் மனைவி மற்றும் தம்பியை காவல்நிலையத்துக்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையிலேயே ராஜன் கடுமையாக தாக்கப் பட்டுள்ளார். காவல்துறையின் கொடும் தாக்குதலில், ராஜன் அடையாறு காவல் நிலையத்திலேயே இறந்தார்.

ராஜன் இறந்தவுடன், செய்வதறியாது திகைத்த காவல்துறையினர், அவரை அடையாறு மலர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார் என்று அறிவிக்கப் படுகிறார்.

இதற்குப் பிறகுதான் காவல்துறையினரின் “அந்தர் பல்டி“ ஆரம்பமாகிறது. ராஜன் மற்றும் நீலாங்கரை இரட்டைக் கொலை பற்றி காவல்துறை எடுத்து விட்ட புளுகுகளில் சில....

1) ராஜனை வளைத்துப் பிடித்த பொதுமக்கள் அவரை கடுமையாக தாக்கியதால் இறந்தார் (அப்போ போலீஸ் ஸ்டேஷனுக்கு டெட் பாடியவா தூக்கிட்டு போனீங்க...)

2) ராஜன் ஒரு பெரும் குற்றவாளி.
(அதுனால அடிச்சு கொல்வீங்களா ?)

3) இந்த விஷயத்தில், நில பேரங்கள் எதுவும் இல்லை. ராஜன் பணத்தையும் நகைகளையும் கொள்ளையடிக்கவே வந்தார் (அப்புறம் எதுக்கு கொள்ளையடிச்சு முடிச்சும் கூட, தப்பிச்சு போகாம அங்கேயே சுத்திக்கிட்டு இருந்தார்)

4) ராஜன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன (கேச நடத்தி தண்டனை வாங்க வேண்டியதானே ? எதுக்கு அடிச்சுக் கொன்னீங்க ?)

5) ராஜன் இதய நோயாளி (இது ராஜன் செத்தபுறம் தான் தெரிஞ்சுதா ?)

6) ராஜன் பொதுமக்களை நோக்கி சுட்டார், குண்டுகள் தீர்ந்ததால், பொதுமக்கள் அவரை வளைத்துப் பிடித்தனர் (கைல கத்தி இருந்தாலே நம்ப ஜனங்க கிட்ட போக மாட்டாங்க, துப்பாக்கி வைச்சு இருக்கற ஆளு கிட்ட போவாங்களா,,, ? என்னா பாசு ?)


7) ராஜனிடம் இருந்தது நாட்டுத் துப்பாக்கி (அப்போ வீட்ல இருந்து போலீஸ் எடுத்தது அயல்நாட்டுத் துப்பாக்கியா ?)


8) ராஜனிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன (மொத்தமா எத்தனை துப்பாக்கின்னு சொல்லிட்டீங்கன்னா எழுதி வைச்சுக்கிறோம்)

9) காவல்துறையினர் ராஜனை துன்புறுத்தவேயில்லை (அப்புறம் எப்படித்தாங்க அவர் இறந்தார்)

10) கைது செய்யப் படுகையில், ராஜன் உடல்நிலை சரியில்லை என்று தெரிவிக்கவில்லை (நீங்கதானே பொதுமக்கள் அவர அடிச்சாங்கன்னு சொல்றீங்க, அப்போ நீங்கதோனே அவர ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகனும்.)

11) பொதுமக்கள் தாக்கியதால் ராஜனுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர் இறந்தார் (உள்காயம் இருக்கற ஆள, போலீஸ் அடிச்சா என்னங்க ஆகும் ?)

12) ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (தமிழ்நாட்டுல என்னைக்குங்க ஆர்.டி.ஓ விசாரணை உண்மைய சொல்லிருக்கு ?)

13) இரண்டாவது முறை ராஜன் வீட்டில் சோதனை செய்தபோது பீகார் மற்றும் ஆந்திரா சென்று வந்ததற்கான ரயில் டிக்கட்டுகள் கிடைத்தன (அப்போ மொதல் முறை சோதனை செய்யும்போது ஒழுங்கா பண்ணலையா ?)

14) இரட்டைக் கொலை வழக்கில் ஒரே சாட்சியான மருமகள் வசந்தி, போலீசாரால் பாதுகாப்போடு பிரான்ஸ் அனுப்பி வைக்கப் பட்டார் (உண்மை எப்படியும் வெளியே வந்திடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கீங்க)

15) வசந்தி சிகிச்சைப் பெற்ற மலர் மருத்துவமனை 4வது தளத்தில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை (யாராவது வசந்திக்கிட்ட பேசினா உண்மை வந்துடும்னு தானே யாரையும் விடலை.....)


இவ்வழக்கில், காவல்துறையினர், ராஜனை அடித்து கொன்று விட்டார்கள் என்பதுதான் உண்மை. இதை மறைக்க முன்னுக்குப் பின் முரணாக பல தகவல்களை அளித்து வருகின்றனர் காவல்துறையினர்.

சிறைபட்டோர் உரிமை மையத்தின் இயக்குநர் புகழேந்தி, ராஜனின் லாக்கப் மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரிகளின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் கோகலே மற்றும் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பின் பதில் என்ன என்று கேட்டபோது, ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது. வழக்கு காவல்துறையினர் மீது பதிவு செய்யப்படவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப் பட்டபோது இதை நாங்கள் எளிதான விஷயமாக பார்க்கவில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், பதிவு செய்யப் பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் விபரங்களை உடனடியாக வரும் செவ்வாயன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


ஒப்பாரி