Flash News

Sunday, August 10, 2014

பேய்கள் அரசாண்டால் ?


முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததும், அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, முதலில் சொன்னது "சிஎம்டிஏ அதிகாரிகள் மீது எந்தத் தவறும் இல்லை" என்பதே.   எந்த விதமான விசாரணையும் நடக்கும் முன்னரே இப்படி ஒரு சான்றளிக்கும் முதலமைச்சர் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் என்ன நடக்காது ?

ஒரு சதுர மீட்டர் கூட அனுமதி பெறாமல் பல ஆயிரம் சதுர அடியில், ஒரு மருத்துவக் கல்லூரியை 5 ஆண்டுகளாக நடத்த முடியுமா ?   முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன். முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் இணையதளத்தில் அக்கல்லூரியைப் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

A public charitable trust called Sri Muthukumaran Educational Trust was founded as early as March 1984 as Thirumathi. R.Gomathy as Chairperson, Mr. A. Radhakrishnan as Managing Trustee and Thirumathi Meenakshiammal as the trust with the sole aim and object of providing education to the poor in the rural areas in the spire of schooling, arts, science, engineering, educational institutions, medical, dental, nursing and other paramedical courses.

In the line of objects the trust has, the following institutions of repute have been established over the years.

A Hospital with 300 beds at present and to be expanded with 850 beds ultimately was established at Chikarayapuram with all laboratories, others investigation and inpatient treatment facilities and it started functioning catering to the medical needs of the area from September 2008. A medical College was established in the year 2009 in the name and style of Sri Muthukumaran Medical College Hospital and Research Institute, at Chikkarayapuram near Mangadu and has been approved by the Authorities to function from 2010-2011.this institute will fall under the category of Telugu Minority Institution.

This Medical College has been approved by the Ministry of Health and Family Welfare, Govt. of India, New Delhi for admission of150 students in the 1st year MBBS from the Academic year 2010-2011 vide letter No. F.No.U12012/822/2008 -Me (P-II) Dated 14th May 2010.

இந்தக் கல்லூரி ஏறக்குறைய 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 



இது மைனாரிட்டி கல்வி நிலையம் என்பதால், மொத்தம் உள்ள 150 சீட்டுகளில் 75 சீட்டுகள் அரசுக்கு மீதம் உள்ள 75 இடங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு.   இந்தக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் இடம் சராசரியாக 40 முதல் 45 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதே கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமாக மீனாட்சி மருத்துவக் கல்லூரி என்று மற்றொரு கல்லூரியும் உண்டு.   இதன் உரிமையாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலும் ஒரு மருத்துவர். இந்த கோகுல் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் மொத்தம் 12 ஆண்டுகள் படித்தார்.   12 ஆண்டுகள் படித்த பொழுது இவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா ?   2, 6, 8 இது போல ஒற்றை இலக்க மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். 

கோகுல்
ஒரு வழியாக 12 ஆண்டுகள் கழித்து எம்பிபிஎஸ் பாஸ் செய்தார் கோகுல். கோகுல் படித்த பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, தொடங்கப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.  பின்னாளில், அது நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறியது.  கோகுல் படித்த காலத்தில் அது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தோடுதான் இருந்தது.   ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் கோகுல் எந்த காலத்திலாவது எம்பிபிஎஸ் பாஸ் செய்வாரா ?  அவரை பாஸ் செய்ய வைக்க, கோகுலின் தந்தை ஏ.என்.ராதாகிருஷ்ணன் அணுகிய நபர்தான் ஜலீஸ் அகமது கான் தரீன் என்ற ஜேஏகே தரீன்.  இவர் அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார்.  தற்போது, க்ரெசன்ட் பொறியியல் கல்லூரியில் இருக்கிறார்.   இவருக்கு கோகுலை பாஸ் செய்ய வைக்க கொடுக்கப்பட்ட தொகை 25 லட்சம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள். 

பேராசிரியர் ஜேஏகே. தரீன்
துணை வேந்தரின் உதவியோடு மட்டும் எம்.பி.பிஎஸ் பாஸ் செய்து விட முடியுமா ? மற்றவர்களின் உதவி வேண்டாமா ?  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள டாக்டர் ஜே.சம்பத் மற்றும் துணைப் பதிவாளர் டாக்டர்.முரளிதாசன் ஆகியோரின் உதவியோடு ஒரு வழியாக பாஸ் செய்து முடித்தார் கோகுல்.  

எம்பிபிஎஸ் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் படிக்கையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்ற வேண்டும்.  ஐந்தாம் ஆண்டு படிக்கும் கோகுல், நான் எங்களது கல்லூரியான மீனாட்சி கல்லூரியிலேயே ஹவுஸ் சர்ஜன் பணியாற்றிக் கொள்கிறேன் என்று வந்துவிட்டார்.    ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நாள் கூட ஒரு பேஷன்டைக் கூட கோகுல் பார்த்தது கிடையாது.    இப்படி இறுதியாண்டு கோகுல் படித்துக் கொண்டிருந்தபோதே, முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரியின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.   இதற்கு மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம். 

சரி தற்போது கோகுல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்பீர்கள். தற்போது கோகுல், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.   

கோகுலை பத்து ஆண்டுகள் கழித்து பாஸ் செய்ததற்கு பிரதிபலனாக, துணைப் பதிவாளர் டாக்டர் முரளிதாசனின் மகள் அபிராமி என்பவருக்கு, ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வழங்கப்பட்டது.  இந்தப் பெண் தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். 

இந்த கோகுல்தான், இந்த ஆண்டு ஜனவரி மாதம், குடி போதையில், ராகவேந்திரா மருத்துவமனையின் உரிமையாளரை நண்பர்களோடு சென்று தாக்கி, மருத்துவமனையை அடித்து நொறுக்கி, காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி, பின்னர் கைது செய்யப்பட்டவர்.   

அடித்து நொறுக்கப்பட்ட ராகவேந்திரா மருத்துவமனை
ஏ.என்.ராதாகிருஷ்ணன் ஒரு மிகப்பெரிய கல்வித்தந்தை.   1983ம் ஆண்டு முதன் முதலாக ஒரு பாலிடெக்னிக்கை மட்டுமே தொடங்குகிறார்.  கல்வித்தந்தைகளின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதைத்தான் நாம் ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், ஜெகதரட்சகன் ஆகியோரின் வழியாக பார்க்கிறோமே.  அதே போல அசுர வளர்ச்சி.   அதன் பின் வரிசையாக கல்வி நிலையங்களை தொடங்குகிறார். 

1983-Meenakshi ammal polytechnic college.
1985-Arulmigu Meenakshi Amman college of engineering.
1990-Meenakshi Amman Dental college.
1993-M.G.R. Institute of Hotel management &techmology.
1995-Sri Muthukumaran institute of technology.
1998-Meenakshi Ammal Matriculation Hr.sec.school,
Meenakshi college of Nursing,
Meenakshi college of physiotheraphy.
2001-Meenakshi college of engineering,
Meenakshi ammal Arts and science college,
Sri Muthukumaran Arts and science college.
2002-Vani Vidhyalaya sr.secondary & junior college.
2003-Meenakshi Medical College Hospital & Research institute.
2005-Meenakshi ammal Teacher Training Institute.
2006-Arulmigu Meenakshi college of Education,
Sri Muthukumaran College of Education.
2010-Sri Muthukumaran Medical college Hospital & Research Institute.
2011-Mangadu Public school.
2012-Arulmigu Meenakshi amman public school,
Meenakshi ammal Global school.

எப்படிப்பட்ட கல்வித் தந்தை பார்த்தீர்களா ?  தற்போது இவரது முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு, மத்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.   இதை எதிர்த்து தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார், இதன் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன். 

ஏ.என்.ராதாகிருஷ்ணன்.
இந்த ஏ.என்.ராதாகிருஷ்ணன், மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.  இவர் காமர்ஸ் டிப்ளமா படித்து விட்டு, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு தட்டச்சு மற்றும் அக்கவுன்டன்சி வாத்தியாராக இருந்தார்.  இதுதான் இவரது கல்வித் தகுதி.  இந்தப் பல்கலைக்கழகத்தின் தாளாராக இருப்பவர் ஏ.என்.சந்தானம்.  இவர் ராதாகிருஷ்ணனின் சொந்த சகோதரர்.    இவர் ஓய்வு பெற்ற முனிசிபல் கமிஷனர். இவர்களெல்லாம் சேர்ந்துதான் மேலே பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

தற்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.  அதில் முதல் பத்தியிலேயே அவர் குறிப்பிடுவது, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற அடிப்படையில் நடத்தப்படுவது.   மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற தகுதி எப்படி வருகிறது ?  

1983ம் ஆண்டு, மீனாட்சி அம்மாள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் பதிவு செய்யப்படுகிறது.  இந்த ட்ரஸ்ட், தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காக என்று தொடங்கப்படுகிறது.  இந்த ட்ரஸ்டின் பதிவுப்படி, இதன் நோக்கம், இந்து மதத்தை பரப்புவது, கல்வி நிலையங்கள் நடத்துவது, இந்து கலாச்சாரத்தை பரப்புவது ஆகியன.   

பதிவு செய்யப்பட்ட ட்ரஸ்ட் ஆவணம்.
ஏ.என்.ராதாகிருஷ்ணன், 1958ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்தவர்.  சென்னையைச் சேர்ந்தவர்.  அவர் மனைவியும் சென்னையில் ஆசிரியையாக பணியாற்றியவர்.  இவர்கள் இருவருக்கும் ஒரு வார்த்தை கூட தெலுங்கு பேச வராது.  அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி தெலுங்கு மைனாரிட்டியாக முடியும் ? 
ராதாகிருஷ்ணனின் எஸ்எஸ்எல்சி சான்றிதழ்

தெலுங்கு மைனாரிட்டி என்ற அடையாளத்தை பெற்றால்தான், அரசின் சலுகைகளை பெற முடியும் என்பதற்காக, 1995ம் ஆண்டு, அசலாக 1983ம் ஆண்டு பதிவு செய்த ட்ரஸ்ட் பத்திரத்தில் திருத்தம் கொண்டு வருகின்றனர்.  அதாவது, தெலுங்கு மக்களுக்காக பாடுபடுவது போல.  இது போன்ற திருத்தங்களை செய்ய, இந்திய சிவில் நடைமுறைச் சட்டப் பிரிவு 92 (3)ன் படி சில விதிமுறைகள் உள்ளன.  அந்த விதிமுறைகளின்படி, நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே, ட்ரஸ்டின் அசல் நோக்கங்களை மாற்ற முடியும்.  அப்படி எந்த மாற்றமும், ஏ.என்.ராதாகிருஷ்ணனின் இரு ட்ரஸ்டுகளும் செய்யவில்லை.  ஆனால், தங்கள் வசதிப்படி, தெலுங்கு மைனாரிட்டி ட்ரஸ்ட் என்று மாற்றிக் கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

ஏ.என்.ராதாகிருஷ்ணனின் தந்தையின் பெயர் நடேச பிள்ளை.  நடேச பிள்ளை எப்படி தெலுங்கரானார் என்பது புரியவில்லை.   மைனாரிட்டி கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பான சட்டம் கீழ்கண்டவாறு கூறுகிறது. 

(a)  The educational institution should have been established by a member / members of the minority community.

(b) The educational institution should have been established for the benefit of minority (Religious / Linguistic) Community they belong and in furtherance to the objective of the Original Trust deed and

(c) that the educational institution is being administered / maintained by the minority community.

மைனாரிட்டி சமூகத்தை சேராத ஏ.என்.ராதாகிருஷ்ணன் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு மைனாரிட்டி ஸ்டேட்டஸ் எப்படி வந்தது என்பதே தனி விசாரணைக்குரிய விஷயம். 

இப்படி மைனாரிட்டி ஸ்டேட்டஸ் பெறுவதற்காக, 1995ம் வருடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆர்டிஓ மூலமாக ஒரு சான்றிதழை பெறுகிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.   ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மாள்,  மற்றும் கோமதி ஆகியோரின் தாய்மொழி தெலுங்கு என்று ஆர்டிஓ சான்றிதழ் அளிக்கிறார்.  ஒருவரின் தாய்மொழி என்ன என்பது குறித்து, ஆர்டிஓ சான்றிதழ் அளித்தது வரலாற்றிலேயே முதன்முறையாக இருக்கும். இந்த சான்றிதழின் அடிப்படையில்தான், தனது ட்ரஸ்டுகளுக்கு மைனாரிட்டி ஸ்டேட்டஸ் பெறுகிறார் ராதாகிருஷ்ணன். சென்னையில் உள்ள ஒரு ட்ரஸ்ட் உறுப்பினர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள ஆர்டிஓ எதற்காக மொழி சான்றிதழ் வழங்குகிறார் என்பதும் வியப்புக்குரிய விஷயம். 

ராதாகிருஷ்ணன் தெலுங்கு மொழி பேசுபவர் என்று ஆர்டிஓ அளித்த சான்றிதழ்

சரி.   முத்துக்குமரன் கல்லூரியையாவது ஒழுங்காக நடத்துகிறாரா என்றால் அதுவும் இல்லை.  ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கென்று, அடிப்படையான சில விதிகள் உண்டு.  அந்த மருத்துவக் கல்லூரிக்கென்று சொந்தமாக இடம் இருக்க வேண்டும்.  அந்த மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்கள் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும்.  போதுமான உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் வேண்டும் என்று பல்வேறு விதிகள் உள்ளன.  

நீல சட்டை அணிந்து உட்கார்ந்திருக்கும் நபர்தான் மூத்த மருத்துவர் கோகுல்
இவற்றில் அடிப்படையான விதி கட்டிடங்கள் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே.  இந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை, மருத்துவக் கவுன்சிலின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள்.  அவர்கள் வருகையில், நோயாளிகள், அல்லது ஆசிரியர்கள் ஆகியவற்றில் ஏதாவது குறை இருந்தால், அனுமதி மறுக்கப்படும்.  

2010ம் ஆண்டு முதல் முத்துக்குமரன் கல்லூரி இயங்கி வருகிறது.  மாணவர்கள் படித்து வருகிறார்கள்.    16 மே 2011 அன்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, இந்தக் கல்லூரியை ஆய்வு செய்ய வந்தது.   அப்போது, இந்தக் கல்லூரி அனுமதி பெற்ற கட்டிடத்தில் இயங்குகிறதா என்ற கேள்விக்கு, அந்தப் படிவத்தில் சிஎம்டிஏ உத்தரவு TN/CMDA/HB  2077 dated 2008 என்ற கோப்பில் அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவக் கவுன்சில் ஆய்வாளர்களின் படிவம்


அந்த மருத்துவ ஆய்வாளர்களிடம், இது குறித்த ஒரு ஒப்புதல் வரைபடமும் வழங்கப்பட்டுள்ளது.    டிசம்பர் 2009ல், முத்துக்குமரன் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டதா என்று சிஎம்டிஏவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திக் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, "முத்துக்குமரன் கல்வி நிறுவனத்துக்கு எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை" என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.  சரி 2009ல்தான் அனுமதி இல்லை. அதற்குப் பிறகாவது அனுமதி வழங்கப்பட்டதா என்றால், இன்று வரை அனுமதி பெறப்படவில்லை.  ஆனால் அனுமதி பெறப்படாத இந்தக் கட்டிடத்தில் நான்கு ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.  

மருத்துவக் கவுன்சில் ஆய்வாளர்களிடம் வழங்கப்பட்ட போலி ஆவணம்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிஎம்டிஏ அளித்த பதில்

சிஎம்டிஏ அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஜெயலலிதா சொன்னார் அல்லவா ?   அந்த சிஎம்டிஏ அதிகாரிகள், 28 ஏப்ரல் 2011 அன்று கல்லூரியை நேரில் ஆய்வு செய்கின்றனர்.   ஆய்வு செய்கையில், கட்டிடம் எவ்வித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டு வருவதை காண்கின்றனர்.  உடனடியாக 9 மே 2011 அன்று, கட்டுமான வேலையை நிறுத்துமாறு, அதுவும் மூன்று நாட்களுக்குள் நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.   அதுவும் நோட்டீஸில் எழுதியுள்ளதைப் பார்த்தால் டெர்ரராக இருக்கிறது.   "மூன்று நாட்களுக்குள் கட்டுமானப்பணிகளை நிறுத்தாவிட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, பில்டிங்குக்கு சீல் வைக்கப்படும்.  கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.   மேலும், உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கப்படும்".  இந்த ஓப்பனிங் நன்றாகத்தான் உள்ளது.   

வேலையை நிறுத்துமாறு சிஎம்டிஏ அளித்த நோட்டீஸ்
கட்டிடங்களை இடிக்கப் போகிறோம் என்று டெமாலிஷன் நோட்டீஸ் மீண்டும் வழங்கப்படுகிறது.  ஏப்ரல் 2011ல் கட்டுமானத்தை நிறுத்துங்கள் என்று வழங்கப்பட்ட நோட்டீஸ், அதுவும் மூன்று நாட்களுக்குள் கட்டுமானத்தை நிறுத்துங்கள் என்று வழங்கப்பட்ட நோட்டீஸுக்கு அடுத்த நடவடிக்கை சரியாக ஒரு வருடம் கழித்து எடுக்கப்படுகிறது. 

உங்கள் கட்டுமானம் சட்டவிரோதமான கட்டுமானம்.   26.03.2012 அன்று உங்களிடம் கட்டுமான ஒப்புதல் கேட்டு எழுதிய கடிதத்துக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை.   ஆகையால் உடனடியாக மூன்று நாட்களுக்குள் கட்டிடத்தை பழைய நிலைக்கு திருப்பாவிட்டால், கட்டிடம் இடிக்கப்படும்.  இது அனுப்பப்பட்ட நாள் 25.04.2012.  தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.  இன்னும் அந்தக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.  

கட்டிடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ்

இதையடுத்து 1 ஆகஸ்ட் 2013 அன்று இந்திய மருத்தவக் கவுன்சில்,  சிஎம்டிஏவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.    அந்தக் கடிதத்தில் முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் மற்றும் மருத்துவமனை கட்டிடம் ஆகியவை அனுமதி பெறாமல் உள்ளதாகவும், அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.   இதன் உண்மை நிலையை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதம் எழுதுகின்றனர். 



இதற்கு என்ன பதில் அளிக்க வேண்டும் ?   கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது உண்மைதான்.   அந்தக் கட்டிடங்கள் இன்னும் அனுமதி பெறவில்லை என்றுதானே எழுதவேண்டும் ?  ஆனால், ஜெயலலிதா, உச்சி முகர்ந்து கொஞ்சிப் பாராட்டிய சிஎம்டிஏ அதிகாரிகள், 4 டிசம்பர் 2013 அன்று, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதில் அனுப்புகிறார்கள்.    அந்த பதிலில், எதுவுமே சொல்லாமல், முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது பரிசீலனையில் உள்ளது.   கவுண்டமணி செந்திலை வாழைப்பழம் வாங்கி வரச் சொன்னதற்கு சொன்ன பதில் போல இல்லை ? 

மருத்துவக் கவுன்சிலுக்கு சிஎம்டிஏவின் பதில் கடிதம்
சரி.  இந்த ஊழல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் இல்லை. இந்த ஒப்புதல் இல்லாத கட்டிடத்திற்காக, இந்தியன் வங்கியிலிருந்து 130 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.   அது எப்படி ஒப்புதல் இல்லாத கட்டிடத்துக்கு 130 கோடி கடன் என்கிறீர்களா ?   அதற்கென்று தாராள மனம் படைத்த இந்தியன் வங்கி பொதுமேலாளர் ஒருவர் இருந்தார்.  அவர் பெயர் கே.நடராஜன்.    அவர் எதற்காக ஒப்புதல் இல்லாத கட்டிடத்துக்கு 130 கோடி கடன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுமே ?  அதற்கான விடை தற்போது நடராஜன் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டீர்கள் என்றால் புரியும். 

டை கட்டிக் கொண்டு இருப்பவர்தான் நடராஜன்.
தற்போது நடராஜன் மீனாட்சி கல்வி குழுமங்களின் இயக்குநர்.  ஓய்வு பெற்ற பிறகு, ராதாகிருஷ்ணனின் கல்விக் குழுமத்துக்கு இயக்குநராகி விட்டார். இதற்கு பெயர்தான் ஆங்கிலத்தில் QUID PRO QUO. 130 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வாரி ராதாகிருஷ்ணன் போன்ற கல்விக் கொள்ளையனுக்கு கொடுத்து விட்டு, சொகுசாக அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 


தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய மருத்துவக் கவுன்சில் தன் கல்லூரிக்கு 2014-2015 கல்வி ஆண்டுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.    இந்த வழக்குக்காக இவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களுள் ஒன்று, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை எழுதிய கடிதம் ஒன்று.   அந்தக் கடிதம், மத்திய அரசு வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்திக்கு எழுதப்பட்டது. 

8 ஜுலை 2014 அன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஹாஜா மொய்தீன் கிஸ்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில், முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி தாக்கல் செய்திருக்கும் ரிட் மனு எண் 17154/2014 என்ற மனுவுக்கு மத்திய அரசின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு எழுதப்பட்ட கடிதம்.   இது ஒரு ரகசிய கடிதம் என்று தாராளமாக சொல்லலாம்.  ஒரு கட்சிக்காரர், தன் வழக்கறிஞருக்கு எழுதும் கடிதம் ADVOCATE CLIENT PRIVILEGE என்ற அடிப்படையில் ரகசியமானதே. இந்தக் கடிதத்தை ராதாகிருஷ்ணன், தான் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஆவணமாக இணைத்து தாக்கல் செய்துள்ளார்.   

இந்த ரகசிய ஆவணம் எப்படி ராதாகிருஷ்ணன் கைக்கு வந்தது என்பது மற்றொரு சுவையான கதை.    ஹாஜா மொய்தீன் கிஸ்தி என்ற வழக்கறிஞர் மத்திய அரசின் பட்டியலில் உள்ள 60 வழக்கறிஞர்களில் ஒருவர்.   ஆனால், மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் அத்தனை வழக்குகளையும் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், ஹாஜா மொய்தீன் கிஸ்தி மட்டுமே ஆஜராகியிருப்பார்.    மத்திய அரசில் பல்வேறு துறைகள் இருக்கும்.   அந்தத் துறைகள் தொடர்பான வழக்குகள் வருகையில், சென்னையில் உள்ள மத்திய அரசின் சட்டத்துறை அந்த வழக்குகளை பரிசீலித்து, எந்த வழக்கு எந்த மத்திய அரசு வழக்கறிஞருக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும்.   

ஹாஜா மொய்தீன் கிஸ்தி (இன்னா ஸ்டைலா கீறாரு பாத்தீங்களா)
ஆனால் ஹாஜா மொய்தீன் கிஸ்தி என்ன செய்வார் தெரியுமா ?  வருமானம் உள்ள வழக்குகள் எதுவென்பதை முன்கூட்டியே நீதிமன்ற அலுவலகம் மூலம் தெரிந்து கொள்வார்.   அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சட்டத் துறைக்கு செல்வதற்கு முன்பாகவே, இவர் அதன் நகல்களை எடுத்துக் கொள்வார்.  வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், இவரே எழுந்து, மத்திய அரசு சார்பாக நான் ஆஜராகிறேன் என்று நோட்டீஸை எடுத்துக் கொள்வார்.   நீதிபதிக்கு எந்த மத்திய அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் எடுத்துக் கொண்டால் என்ன ?   அவர்கள் உடனே, மத்திய அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் எடுத்துக் கொண்டார் என்று பதிவு செய்து விடுவார்கள். 

ஹாஜா மொய்தீன் கிஸ்தி அடுத்ததாக என்ன செய்வார் தெரியுமா ? சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைக்கு, நீதிமன்றம் என்னை இந்த வழக்கில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.  அதனால், இது தொடர்பான அதிகாரியை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறுவார்.    

ஹாஜா மொய்தீன் கிஸ்தி 2013ல் ஆஜரான வழக்குகளில் சில

மத்திய அரசின் சட்டத்துறை நியமிக்காமல் இவராகவே ஆஜராவாதால், இவர் ஆஜராவதற்கான கட்டணம், மத்திய அரசிலிருந்து வராது.   ஆனால், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தானாக முன்வந்து, மத்திய அரசின் அனைத்து வழக்குகளிலும் ஆஜராவார் ஹாஜா மொய்தீன் கிஸ்தி.  இப்படி ஒரு சேவை மனப்பான்மை உள்ள வழக்கறிஞரா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  

ஏன் என்று பார்ப்போம். ஹாஜா மொய்தீன் கிஸ்தி, மத்திய கப்பல் துறை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராவார். கிட்டத்தட்ட கப்பல்துறைக்கு அவர் மட்டுமே வழக்கறிஞர் என்பது போல, எல்லா வழக்குகளிலும், அவர்தான் ஆஜராவார்.   ஏன் கப்பல் மற்றும் மருத்துவக் கல்லூரி வழக்குகளில் ஆஜராவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்றால், இந்த வழக்குகளில்தான் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.  பணம் கோடிகளில் கொட்டும். 

இப்படி கோடிகளில் பணம் சம்பாதித்தால்தானே, நீதிபதி தனபாலன் போன்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்கையில், அதன் செலவுகளை ஏற்றுக் கொள்ள முடியும் ?    இப்போது புரிகிறதா ?

சரி.  முத்துக்குமரன் கல்லூரி வழக்கு இவரிடம் எப்படி வந்தது.  மத்திய அரசு இவருக்கு எழுதிய கடிதம், கல்லூரி உரிமையாளரிடம் எப்படி சென்றது என்பது, இன்னொரு கிளைக் கதை.   

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் விஜயன் என்பவர்.    இவரை ஊழல் பெருச்சாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் மீது, சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.     இந்த விஜயனும், முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரி நிறுவனர் ஏ.என்.ராதாகிருஷ்ணனும் சம்பந்திகள்.   ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலுக்கு, விஜயனின் மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார். 

டாக்டர் விஜயன்.
இந்த விஜயனும், ஹாஜா மொய்தீன் கிஸ்தியும் நெருங்கிய நண்பர்கள்.   ஒரு நாளைக்கு பல முறை தொலைபேசிகளில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.  சம்பந்தியின் மருத்துவக் கல்லூரிக்கு ஒரு பிரச்சினை என்றால், விஜயன் சும்மா இருப்பாரா ? அவர் சொல்லியபடியே, மத்திய அரசின் சார்பாக, ஹாஜா மொய்தீன் கிஸ்தி, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். அந்த அடிப்படையில்தான், மத்திய அரசு இவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து ராதாகிருஷ்ணனிடமே கொடுத்துள்ளார். 

இது மட்டுமல்ல.   கல்விக் கொள்ளையன் பச்சமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கி எப்படி தனக்கென்று ஒரு தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டாரோ, அதே போல நாமும், ஒரு பத்திரிக்கை அதிபர் ஆகி விட்டால், அரசியல் செல்வாக்கு கிடைக்கும் என்று நினைத்து, ஏ.என்.ராதாகிருஷ்ணன் தொடங்கிய பத்திரிக்கைதான் "தின இதழ்".   இதை வைத்துக் கொண்டு, ஜெயலலிதா யாரையாவது பார்த்து "டாட்டா"  காட்டினால் கூட, அதை முதல் பக்கத்தில் "முதல்வர் கையசைத்தார்" என்று போட்டால், அரசு விளம்பரமும் கிடைக்கும்.   முதல்வரின் கடைக்கண் பார்வையும் கிடைக்கும்.  எதிர்த்து செய்தி போடும் ஊடகங்களின் மீதெல்லாம், அவதூறு வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு, இது போன்ற பத்திரிக்கைகள் இனிக்கத்தானே செய்யும். 


இந்த விவகாரத்தில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான ராமசுப்ரமணியத்திடம் வருகிறது.  அவருக்கு ஹாஜா மொய்தீன் கிஸ்தி யாரென்றும் தெரியும்.  ஏ.என்.ராதாகிருஷ்ணன் யாரென்றும் தெரியும்.  கர்ணன், தனபாலன், அருணா ஜெகதீசன், சி.டி.செல்வம் போல, அவ்வளவு எளிதாக, ராமசுப்ரமணியத்தை வளைத்து விட முடியாது என்பது ஏ.என்.ராதாகிருஷ்ணனுக்கும் நன்கு தெரியும். 

நீதியரசர் ராமசுப்ரமணியம்
இது போன்ற மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்து கிளை விடுவதற்கு காரணம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதிகள்தான்.   இவர்களே, இது போன்ற கல்விக் கொள்ளையர்களை தாலாட்டி, சீராட்டி வளர்க்கிறார்கள். இது போன்ற தரமற்ற கல்லூரிகளில் படித்து வெளி வரும் மருத்துவர்களிடம்தான், நாம் நமது பிள்ளைகளையும், பெற்றோர்களையும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் போகிறோம். 

பேய்கள் அரசாண்டால், சாத்திரங்கள் பிணம்தானே திண்ணும் ? 

31 comments:

Anonymous said...

ippave kanna kattuthe? Only hope is God will punish them.

Anonymous said...

Savukku team should be appreciated. You must have `courage' to keep fighting against corruption even after tortured by selvam

Anonymous said...

well done.-

Anonymous said...

//ஏ.என்.ராதாகிருஷ்ணனின் தந்தையின் பெயர் நடேச பிள்ளை. நடேச பிள்ளை எப்படி தெலுங்கரானார் என்பது புரியவில்லை.// - ஏ.என்.ராதாகிருஷ்ணனின் SSLC சான்றிதழில் ஹிண்டு யாதவா என்று வேறு இருக்கிறது? என்னடா இது. அப்ப, கோகுல் யாராடா?

Anonymous said...

I salute your efforts in collecting the information and publishing it. Great

விஜய் said...

சூப்பர்

Anonymous said...

Hi sir,

In the Computer science dept of Jerusalem college of engineering, velachey (which belongs to Jegathrachagan and family), a guy named 'Rene robin' is working as H.O.D for more than 5 years and he is the son-in-law of aynavaram 'bethel matriculation school' owner.

His original name was not Rene robin but 'Balalmuraugan' -which he changed to 'rene robin' when he married a christian girl (the girl's name is 'doreen' -who is the daughter of bethel matriculation school, ayanavaram, owners).

This guy has obtained fake M.E degree certificate from anna university and with that he has completed P.h.D also.

Knowing each and every malpractices of him, the Jegathrachagan family is still retaining him in their college because they are getting many students for admission in their colleges from 'bethel matricualtion school' and other known schools of Rene robin&family.

The following are the steps and highlights of Rene robin....

1] He finished his degree in B.Sc physics in the year 1997.

3] After that he completed his M.C.A in the year 2000 but in SECOND CLASS.

4] He then joined as a programmer in 'ramanujam computing center' of anna university and worked there till 2006.

[The experience certificate he has got from anna university clearly says that he worked there form 2000-2006.

Some people even say that he was not a programmer, but a lab attender in RCC -which i'm not sure]

5] Using his influence he then obtained M.E. full time degree from anna university and his certificate says that he studied M.E. in anna university from 2004-2006 in Full time.

[HOW CAN A PERSON WORK IN ANNA UNIVERSITY FOR FULL TIME AND ALSO DO M.E. IN THE SAME UNIVERSITY IN FULL TIME? i.e. in 2004-2006]

6] After this he came an joined in Jerusalem college of engineering as a lecturer with the help of Mr.Pannerselvam, who is the relative of former minister Velu, and also who was the principal of JCE at that time. (Mr.Pannerselvam appointed him even after knowing that his M.E. degree certificate is a fake)

7] He then enrolled for P.hD in anna university with the same fake M.E degree certificate as base and then completed his Ph.D in the year 2011 -by presenting a honda city car to his guide G.V. Uma which is another story :)

8] While doing P.hD, he fell in love with 'doreen' who was studying full time ph.D in anna univeristy at that time and then for marriage he changed his name C.R.BALAMURUGAN to C.R.RENE ROBIN.

By this he became the son-in-law of the bethel matriculation school owner.

9] After marriage the next principal of JCE (after pannerselvam) Mr. Samabandam, got some benefits like school admissions to relatives and more from robin, and BECAUSE OF THAT HE PROMOTED ROBIN TO H.O.D EVEN AFTER KNOWING THAT HIS CERTIFICATES ARE FAKE.

[Mr.Sambandam is currently the director of JCE]

10] And right now this fellow is still in JCE as H.O.D with the support of Dr.Sambandam (director), Mala (jegaths wife and CEO of the college), and also the whole jegaths family -as they are getting the benefit of college and school admissions

Even though CBI is taking actions against people like this, this guy is still escaping because his is not exposed till now

ref1 for CBI action: https://in.news.yahoo.com/cbi-arrests-five-nationwide-raid-against-fake-doctors-182409323.html

ref2 for CBI action: http://timesofindia.indiatimes.com/city/mumbai/Over-51K-fake-degrees-issued-in-state-CBI-tells-HC/articleshow/6825330.cms


Shankar sir, i wish you expose this guy to the world and get him punishment so that the world knows that 'bad people can't stand long.'

Anonymous said...

Your article shows with money and power anything is possible in India. you must be brave to fight with these forces. Keep going

Anonymous said...

An investigative report with full of documentary evidences. Keep it up Savukku.

Anonymous said...

"Thiru seven hills polytechnic college" also under Meenakshi Ammal Trust, I studied there. The college and teaching was Good(other than occasional floods caused by rain), Actually Mrs.Premalatha Kanikannan (D/o of A.N.Radhakrishnan) was principal of TSHPC at that time (I think she is a director now in Meenakshi multi-speciality hospital) helped me to study in Meenakshi college of Engineering K.K. Nagar by signing as security for my educational loan(kind natured person), But i never know any background works of Mr.Radhakrishnan.(i met and remember mr.gokul as once he sweard indignantly(Gotha,Gomma,Badu) at a MCE security for not opening the gate at time) A shock and reality now in tamilnadu Bribe politics. Iam posting it anonymous because now iam in the education field and expecting (legal)favors from many colleges including Meenakshi trust

Anonymous said...

இதைப் போலவே குரோம்பேட் மற்றும் பெருங்களத்துரில் இயங்கும் சுந்தரவள்ளி பள்ளியும் நூதன வழியில் கொள்ளை அடிக்கிறார்கள். பள்ளியில் சேர்க்க விண்ணப்ப படிவம் ஐயாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விண்ணப்பம் வாங்கிய பின் பள்ளியில் சேர்க்க வில்லையெனில் நான்காயிரம் ரூபாய் திருப்பி தரப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் மூவாயிரம் ரூபாய் மட்டுமே திருப்பி தரப்படும். மீறி கேள்வி கேட்டால் உங்களை அங்கேயே பெண்களை விட்டு அசிங்கப்படுத்தி அனுப்புவார்கள்

Anonymous said...

Bravo

Anonymous said...

Ungalukkin thunichalukku thalai vanangugiren thalaiva.

Anonymous said...

உங்க லிஸ்ட்ல 2008ல் ஆரம்பிக்கப்பட்ட "Faculty of engineering and technology" கல்லூரியையும் சேர்த்துகோங்க...இதுவும் "Meenakshi Academy of Higher Education and Research"ல ஒரு அங்கம்...இந்த கல்லூரியும் இதுவரையில் அப்ரூவல் வாங்கல...

Ravikutty said...

தோண்ட தோண்ட எத்தனை படு பயங்கர கூட்டணிகள் இப்போது நம் தமிழகத்தின் இளஞ்ர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று மயக்கமே வருதே...இந்த நாட்டை இனி ஆணடவன் கூட காப்பாத்த முடியாது போலிருக்கு...

Unknown said...

12 வருடமாக மருத்துவம் படித்தார் என்றால் மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எல்லாம் பிரித்து மேய்ந்திருப்பாரோ? அல்லது எல்லா மருத்துவ புத்தகங்களையும் பக்கத்திற்கு பக்கம் மனப் பாடம் செய்திருப்பார்.

Unknown said...

Well Don savukku.Keep Rocking

Anonymous said...

Mr. Savukku,
Congrats, “Neenga Oru Thairiyasali”. Fighting for justice. Your article exposed many things. We heard that Mr. A.N. Radhakrishnan will pick up the powerful doctors whose father, mother will be ministers. Mrs. Manamalli, D/o. Mr. Anbhazagan, Leader DMK then Minister was working as Dean. Now Dr. Durairaj, elder brother of Vijay, ADMK Former Health Minister is working as a Dean. Always he used to select the doctors whose background is very strong politically. The salary, facilities offered to them was very very high. Three times more to other doctors. Now only we came to know that Radhakrishnan used to keep Politicians, Ministers, VIPs in good humour to hide all the forgeries and to escape from the problems. Other than that medical seats every year. Dr. Durairaj salary is Four Lakhs with other facilities. All the doctors of Anbhazagan Family, DMK is working at Muthukumaran Medical College and Meenakshi Medical College. Arcot Veerasamy and his brother Devaraj are brain of Radhakrishnan. One Kumar, typist is representing Arcot Veerasamy and Devaraj is the chief advisor, director, dean, etc. etc. for these colleges. Without him nothing will move. All forgery documents are prepared under his guidance. People used to tell these colleges are binamy of Arcot Veerasamy. The Muthukumaran Medical College is built on the river bed only. None of his institutions are approved by competent authorities. The article reveals many things. Need more investigation also. Fit case for CBI investigation. We heard some MCI officials also helped him. Need strong action against this “Kalvi Thanthai”. Please probe how many “Kalvi Thanthai”s are doing similar forgery? Savukku Sir you cannot be purchased. Our nation needs you.

Prem said...

Thalaiva, unga sevai is Mass...

Anonymous said...

all mla.mp having colleges.tn pavamada samy

Anonymous said...

i think u missed thiru seven hills polytechnic college

T.V.Srinivasan said...

If the statements were true-This is a sample fraudulent activities by big bosses. The same is done by politicians with the help of bureaucrats. Only a dictator can save India.

Anonymous said...

நல்ல பதிவுகள். இனி தமிழ்நாட்டின் தலைஎழுத்தை யார் மாற்றுவது? கேடுகெட்ட பணக்கார முதலைகளிடமிருந்து மருத்துவ துறையை காக்க வேண்டும்.

SYED BASHEER said...

வாய்ப்பே இல்லை மிகவும் அருமை யான பதிவு
www.rahmanproperties1.blogspot.in

Baboo said...

Most of the comments here are anonymous - including mine - even though with a name and emailid. This is the reality of "India Today" We all want to fight corruption, injustice and what not. But we are not prepared to spend time & efforts. We are scared of the consequences. We ahve our personal priorities. So invariably we end up going anonymous which is what is exploited to the core by such elements. They know very well most of us are spineless and clueless. We think we are fighting the good fight by just posting comments and there ends our civic duty. They know they can run over us and keep doing whatever they feel like. Eventually might and money has a field day. Will this ever change?? That is anybody's guess !!!!!

Anonymous said...

Chencey Illa.. ! Hats off to your boldness ! Therikka vidreenga. I am an advocate by profession was watching a case against you last day in HC. After which read the entire story. Great guts to speak the truth. Louder. Salute.

Anonymous said...

Really...a Great Investigation... How these Media...propagate these guys ...

Anonymous said...

Wish you get into mainstream media, to enlighten greater audience

COOL HARI said...

Wonderful Savukku...

saivekat said...

This statement is completely fake if u know about gokul u speak or else shut

Saivenkat said...

For your information he has adopted 10 kids and paying fees for them so u iindly mention his Good characters lso savuku

Post a Comment