Flash News

Saturday, January 30, 2010

இரும்புக் கோட்டை திரைப்பட விமர்சனம்




அறிவாலயம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் புதிதாக வெளி வந்திருக்கும் திரைப்படம்தான் இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

படத்தின் தலைப்பிற்கேற்றார்போல், கதாநாயகன் சிறு வயது தொடங்கி, தள்ளாத வயது வரை, எவ்வளவு வயதானாலும் விடாப்பிடியாக நான்தான் கதாநாயகனாக இருப்பேன் என்று பிடிவாதமாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வரும் முதல் கௌபாய் படம் இது. ஆங்கிலத்தில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற 100 Rifles, The Good, The Bad, The Ugly, McKenna’s Gold போன்ற படங்களை விஞ்சும் விதத்தில் எடுக்கப் பட்டுள்ளது.

கதாநாயகநாக நடித்திருக்கும் கருணாநிதி பாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாநிதியே தேர்ந்தெடுப்பதால், அநேகமாக இவ்வாண்டின் சிறந்த நடிப்புக்கான மாநில அரசின் விருது கருணாநிதிக்கே வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கௌபாய் படத்தை எதிர்ப்பார்த்து செல்லும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்கு காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு நிறைந்து எடுக்கப் பட்டிருக்கிறது இரும்புக் கோட்டை கிழட்டுச் சிங்கம்.

சாதாரணமாக தன் வாழ்க்கையை தொடங்கும் ஒருவன் எப்படி மிகச்சிறந்த துப்பாக்கி வீரனாகி தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் படத்தின் “ஒன் லைன்“.

கதாநாயகம் கருணாநிதி குழந்தையாக ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்கிறான். சிறிது விபரம் தெரிந்தவுடன் அண்ணாதுரை என்ற ஒருவர் துவக்கும் கொள்ளைக் கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அண்ணாத்துரை தான் துவக்கும் “கேங்“ மிகப்பெரிய அளவில் வளரப் போகிறது என்பது தெரியாமலே கேங்கை துவக்குகிறார். தமிழ்நாட்டில் அது வரை இருந்து வந்த காங்கிரஸ் கேங்கை தனது சாமர்த்தியத்தால் விரட்டி அடிக்கிறார்.
அன்று அண்ணாத்துரையால் விரட்டியடிக்கப் பட்ட காங்கிரஸ் கேங், படத்தின் இறுதி வரை பலம் பெறாமலேயே இருப்பதாக கதை அமைக்கப் பட்டிருப்பதால் இப்படத்தில் வில்லனாக இருப்பதற்கு காங்கிரஸ் கேங்குக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

காங்கிரஸ் கேங்கை விரட்டியடித்து மொத்த தமிழ்நாட்டையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வரும் அண்ணாத்துரை நீண்ட நாள் தன் கொள்ளைக் கூட்டத்தை வழிநடத்தாமல் உடல் நலிவடைந்து இறந்து போகிறார்.



கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிய அண்ணாத்துரை


அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு ரசிகர்கள் கொள்ளைக் கூட்டத்தின் இரண்டாம் கட்ட தலைவராக, அண்ணாதுரைக்கு நெருக்கமாக இருக்கும் நெடுஞ்செழியன் தலைவராக ஆகப் போகிறார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் இயக்குநர்.

கருணாநிதி கொள்ளைக் கூட்டத்தில் சேரும் முன்பே இரண்டாம் கட்ட தலைவர்களாக அக்கூட்டத்தில் இருக்கும் சீனியர்களையெல்லாம் ஓரங்கட்டி விட்டு கொள்ளைக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை பிடிப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இருந்தாலும் இந்த இடத்தில் திரைக்கதை விறுவிறுப்பை அடைகிறது.

கொள்ளைக் கூட்டத்தின் உறுப்பினர்களின் மத்தியில் தன் சாகசங்களால் பாப்புலராக உள்ள எம்ஜிஆரின் துணையுடன் கருணாநிதி தலைவர் பொறுப்பை பிடிக்கிறார். நெடுஞ்செழியனை ஓரங்கட்டிவிட்டு அநாயசமாக, தலைமை பொறுப்பை பிடித்து விட்டு, கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு கருணாநிதி ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கும் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.



கதாநாயகன் வாழ்வில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லை. மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டே ஆனந்தமாக கதாநாயகன் பொழுதைக் கழிக்கையில் திடீரென்று நண்பனாக இருந்த எம்ஜிஆர் உருவில் பிரச்சினை உதிக்கிறது. எம்ஜிஆர் கொள்ளைக் கூட்ட உறுப்பினர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை கண்டு பொறுக்காத கதாநாயகன், குரங்கு ஆப்பசைத்த கதையாக, கொள்ளைக் கூட்டத்தில் மொத்தம் எத்தனை துப்பாக்கிகள் என்று எம்ஜிஆரைப் பார்த்து கணக்கு கேட்கிறார்.

துப்பாக்கி கணக்கு கேட்டதால் கடும் கோபம் அடையும் எம்ஜிஆர் கதாநாயகக் கருணாநிதியிடம் இருந்து பிரிந்து தனியே ஒரு கொள்ளைக் கூட்டத்தை தொடங்குகிறார்.

எம்ஜிஆர் தொடங்கிய கொள்ளைக் கூட்டம் மிகவும் பிரபலமாகி தமிழ்நாட்டின் நம்பர் கூட்டமாகிறது. இதனால் கதாநாயகன் கருணாநிதி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறார். அவருக்கு தேவையான ஆயுதங்கள் குறைந்து கொள்ளைக் கூட்டத்தை நடத்த முடியாமல் திணறுகிறார். தினந்தோறும் கொள்ளையடித்துப் பழகி, கொள்ளையடிக்க வாய்ப்பே இல்லாமல் கதாநாயகன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப் படும்போது, கொள்ளைக் கூட்ட தலைவன் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், எம்ஜிஆர் என் நண்பர், அவர் இல்லையென்றால் நான் கொள்ளைக் கூட்டத் தலைவன் ஆகியிருக்க முடியாது என்று மழுப்புகிறார்.

எம்ஜிஆர் இறந்ததும் போட்டிக்கு ஆளே இல்லாமல் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஆகிறார் கதாநாயகன் கருணாநிதி. நிம்மதியாக கொள்ளையடித்து பொழுதை ஓட்டலாம் என்று இருக்கையில் களத்தில் குதிக்கிறார் ரிவால்வர் ரீட்டா.

எம்ஜிஆரின் கொள்ளைக் கூட்டத்தில் நீண்ட காலம் இருந்த ரிவால்வர் ரீட்டா நலிவடைந்திருந்த எம்ஜிஆரின் கேங்குக்கு புத்துணர்ச்சி ஊட்டி, கேங்குக்கு தலைமை ஏற்கிறார்.

இதைக் கண்டு கதாநாயகன் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இதனால் தனக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பது போல இருக்கிறார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவர்கள் சம்மேளனத்தில் புகார் செய்து கருணாநிதியின் தலைவர் பதவியை பறிக்கிறார் ரிவால்வர் ரீட்டா. செய்வதறியாது திகைக்கும் கருணாநிதி மீண்டும் எப்படியாவது தலைவர் ஆகி விடலாம் என்று நினைக்கையில் அகில இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் ராஜீவ் காந்தி ஒரு வெடி விபத்தில் மரணமடைகிறார்.

இதனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு அடிக்கிறது யோகம். உடனடியாக தலைமைப் பதவியை பிடித்து தமிழ்நாட்டின் நம்பர் ஒன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவியாகிறார். இவர் கொள்ளைக் கூட்ட தலைவியானதும், தன் கூட்டத்தில் உள்ள ஒருவரை வளர்ப்பு மகனாக தத்தெடுக்கிறார்.

தத்தெடுத்ததோடு நில்லாமல் கொள்ளைக் கூட்ட வரலாறிலேயே இல்லாத அளவுக்கு தான் தத்தெடுத்த வளர்ப்பு மகனுக்கு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்கிறார். இதைக் கண்ட கதாநாயகன் கருணாநிதி வயிற்றெரிச்சலில் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பும் காட்சி காண்போர் நெஞ்சை உருக்குகிறது.

ரிவால்வர் ரீட்டா நெம்பர் ஒன் பொசிஷனில் ஐந்தாண்டு இருந்த பிறகு மீண்டும் கருணாநிதி தன் சாதுர்யத்தால் நெம்பர் ஒன் பொசிஷனை தட்டிப் பறிக்கிறார். நெம்பர் ஒன் பொசிஷனுக்கு வந்த பிறகு ரிவால்வர் ரீட்டாவை சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. ஆனால் ரிவால்வர் ரீட்டாவுக்கு இருக்கும் ஆதரவை குறைத்து மதிப்பிட்டு விடுகிறார் கருணாநிதி. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நெம்பர் ஒன் பொசிஷனுக்கு ரிவால்வர் ரீட்டா வருகிறார்.

ரிவால்வர் ரீட்டா நம்பர் ஒன் பொசிஷனில் வந்தவுடன், தான் ஒரு காலத்தில் கொள்ளைக் கூட்டத்திற்கே தகுதியில்லாத பண்டாரங்கள் என்று விமர்சித்த அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தோடு கூட்டணி வைத்து சில நிர்வாகிப் பதவிகளை கைப்பற்றுகிறார் கருணாநிதி.

வந்ததும் கருணாநிதியை பழிவாங்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார் கருணாநிதி. கைது செய்யப் படுகையில் “அய்யோ கொலை பண்றாங்க“ என்று அலறுகிறார் கருணாநிதி. ஆனாலும் கருணாநிதியால் ஐந்தாண்டுகளுக்கு நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க முடியவில்லை.




அய்யோ கொலை பண்றாங்க


கருணாநிதியின் கொள்ளைக் கூட்டம் நலிவுற்றிருந்தாலும், அகில இந்திய கொள்ளைக் கூட்டத்தில் கருணாநிதியின் கூட்டத்தைச் சேர்ந்த 7 பேர் நிர்வாகிப் பதவியில் இருப்பதால் சிறிது காலம் சமாளிக்கிறார் கருணாநிதி.

சிறிது காலம் போராடிய பிறகு, தமிழ்நாட்டில் உள்ள உதிரி கொள்ளைக் கூட்டம் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்து மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனுக்கு வருகிறார் கருணாநிதி.




கருணாநிதியிடம் நம்பர் ஒன் பொசிஷனை தவற விட்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைக்கிறார். எப்படியாவது மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை பிடிக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் ரீட்டா. கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் அவரை எப்படியாவது துப்பாக்கிச் சண்டையில் ஜெயித்து விட வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரீட்டா.

துப்பாக்கிச் சண்டையில் கருணாநிதியை எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்று ரீட்டா தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆனால் கருணாநிதிக்கோ வயதாகி, தள்ளு வண்டியில் போகும் நிலைக்கு ஆளாகிறார். இதனால் தைரியம் அடைந்த ஜெயலலிதா, துப்பாக்கிச் சண்டையில் ஜெயிக்கலாம் என்று தன்னை தயார் செய்து கொண்டு வரும் வேளையில் கருணாநிதி புதிய தந்திரத்தை கையாளுவதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.



துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு, குண்டடிப்பட்டு அனைவரும் செத்து விழுவார்கள் என்று எதிர்ப்பார்க்கையில், சண்டையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் 5000, 10,000 என்று கவரில் கருணாநிதி பணத்தை வழங்குகிறார். கவரில் பணத்தை பெற்றுக் கொண்ட அனைவரும், குண்டடி படாமலேயே செத்து விழுந்தது போல் நடிக்கிறார்கள்.

இதைக் கண்ட ரிவால்வர் ரீட்டா செய்வதறியாமல் திகைத்து அவரும் கவரில் பணம் வழங்கும் தந்திரத்தை கையாண்டாலும் அவரின் தந்திரம் எடுபடவில்லை. கருணாநிதி வழங்கும் கவரைத்தான் அனைவரும் விரும்பி குண்டடி பட்டது போல செத்து விழுகிறார்கள்.

இதற்கு நடுவே, கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. தன் கொள்ளைக் கூட்டத்தின் நெருக்கடி தாளாமல், தன் மகனை கொள்ளைக் கூட்டத்தின் துணைத் தலைவராக்கி நம்பர் 2 பொசிஷனுக்கு கொண்டு வருகிறார். இதைக் கண்ட இன்னொரு மகன் தான்தான் நம்பர் 2 பொசிஷனுக்கு வர வேண்டும் என்று சண்டை போடுகிறார்.



கருணாநிதியின் மகள்


இன்னொரு மகள், தனக்கு நம்பர் 3 பொசிஷன் வேண்டும் என்று வரிந்து கட்டுகிறார். ஆனால் நம்பர் 3 பொசிஷனை மகளுக்கு தர முடியாத வண்ணம், மருமகனின் பேரன்கள் சண்டை போடுகின்றனர்.

இதனால் கருணாநிதியின் கொள்ளைக் கூட்டத்தில் பெரும் கலவரம் உண்டாகிறது. தள்ளு வண்டியில் உள்ள வயது முதிர்ந்த கதாநாயகன், வயது முதிர்ந்தாலும் உடல் தளர்ந்தாலும், தன் நம்பர் ஒன் பொசிஷனை விட்டுத் தராமல் இறுதி வரை போராடுகிறார்.



தள்ளுவண்டியில் வயது முதிர்ந்த கதாநாயகன்


இறுதிக் காட்சி 2011ல் நடைபெறுகிறது. நம்பர் ஒன் பொசிஷனுக்காக தொடர்ந்து போராடும் ரிவால்வர் ரீட்டா ஜெயிக்கிறாரா, தள்ளுவண்டியில் உள்ள கருணாநிதி ஜெயிக்கிறாரா, அல்லது அவரது மகனோ அல்லது மகளோ ஜெயிக்கிறார்களா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
விறுவிறுப்பான திரைக்கதையும், சுறுசுறுப்பான எடிட்டிங்கும் படத்துக்கு சுவை கூட்டுகின்றன.

தேவையான இடத்தில் தேவைப்படாத காட்சிகளை வெட்டியெறிந்து, படத்துக்கு விறுவிறுப்பு கூட்டும் வகையில் படத்தை எடிட்டிங் செய்திருப்பவர் அந்தோனியோ மொய்னோ சோனியா காந்தி. இவர் இத்தாலியில் எடிட்டிங் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஒளிப்பதிவு பேராசிரியர் அன்பழகன். கேமரா பாய்ந்து பாய்ந்து ஒளிப்பதிவு செய்ய வேண்டிய இடங்களிலெல்லாம் மங்குணி போல நகராமல் உட்கார்ந்திருப்பது ரசிகர்களை எரிச்சலாக்குகிறது.


ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆ.ராசா. வசனங்களை கதாநாயகன் கருணாநிதியே எழுதியிருக்கிறார். சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதி ரிவால்வர் ரீட்டாவைப் பார்த்து “நீங்கள் கௌபாய் ஆக முடியாது, ஏனென்றால் பெயரிலேயே “பாய்“ இருக்கிறது, நீங்கள் பெண்“ என்று சொல்லுவதும் அதற்கு ரிவால்வர் ரீட்டா, அந்தச் சொல்லின் முதல் எழுத்தே “கௌ“ தான். கௌ என்றால் பசு என்று பொருள், பசு பெண்பால் ஆகையால் நான்தான் உண்மையான கௌபாய்“ என்ற வசனங்களுக்கு தியேட்டரே அதிர்கிறது.


பல இடங்களில் துப்பாக்கிச் சண்டை துவங்கும் முன்பே, எனக்கு, எனக்கு என்று போட்டி போட்டுக் கொண்டு கவரை வாங்கி, குண்டடி பட்டது போல மக்கள் செத்து விழும் காட்சி இந்திய சினிமா வரலாற்றில் புதுமையான காட்சி.


சண்டைக் காட்சிகள் துரை முருகன். அதிரடியாக சண்டை காட்சிகள் அமைப்பார் என்று எதிர்ப்பார்த்தால் ரிவால்வர் ரீட்டாவின் சேலையை பிடித்து இழுப்பது போல் காட்சி அமைத்திருக்கிறார். தியேட்டரில் பெண்கள் துரை முருகனை வெளிப்படையாக திட்டுவது நன்கு கேட்கிறது. இனி துரை முருகன் இது போன்ற காட்சிகளை அமைப்பதை தவிர்ப்பது நல்லது.


சவுண்ட் ஆற்காடு வீராசாமி. பல இடங்களில் ஒலி மந்தமாக இருக்கிறது ஒலிப்பதிவாளரின் கோளாறே. உடைகள் தமிழச்சி தங்க பாண்டியன். இசை அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் இசையில் பல பாடல்கள் போலியானதாகவும், காப்பியடித்தது போலவும் இருக்றது. இவர் இசையமைப்பதை விட்டு விட்டு பேசாமல் போதகர் தொழிலுக்கே போகலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.

வைரமுத்து, வாலியின் பாடல் வரிகள் கருணாநிதியை புகழ்வதை மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப் பட்டது போல் இருக்கிறது.

மக்கள் தொடர்பை கருணாநிதி மகன் அழகிரியே கவனித்துக் கொள்கிறார். நகைச்சுவைக்கு ஆவுடையப்பன் என்ற புதிய கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர். இவர் நடுநிலையோடு நடந்து கொள்வது போல் நடித்து பல நேரங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறார். ஆவுடையப்பன் தவிர்த்து கதாநாயகன் கருணாநிதியே பிரமாதமான காமெடி செய்வதால் தனி காமெடி ட்ராக் தேவையே இல்லை.


எவ்வளவு பெரிய கொள்ளைக் கூட்டத்தின் தலைவனாக இருந்தாலும், கொள்ளைக் கூட்டத்தை விட குடும்பமே பெரிது என்ற மெசேஜை படம் பார்க்கும் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.


மொத்தத்தில் நீண்ட நாட்கள் கழித்து வந்திருந்தாலும், ஒரு சிறந்த கௌபாய் படம் பார்த்த திருப்தி படம் பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும் அனைவர் முகத்திலும் தெரிந்தது.



சவுக்கு

Wednesday, January 27, 2010

சிபிஐ வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?




இப்போதைய திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி.ஜெ.ஜெயலலிதா, சட்டமன்றத்தில் “சிபிஐ என்ன வானத்தில் இருந்து குதித்து வந்ததா ?

ஜெயலலிதா கேட்டது எந்த தொனியில் என்றால் சிபிஐ வசம் ஒரு விசாரணையை ஒப்படைத்தால், அவர்கள் மட்டும் என்ன நேர்மையாகவா விசாரிக்கப் போகிறார்கள் என்ற தொனிதான் அது.

அந்தத் தொனி உண்மை என்பது இன்று தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆயிருக்கிறது.

2005ல் ஹரியானா மாநிலத்தில் கோஹானா என்ற தலித் குடியிருப்பு சக்தி வாய்ந்த ஜாட் வகுப்பு மக்களால் தீக்கிரையாக்கப் பட்டது. ஹரியானாவில் ஜாட் வகுப்பு மக்களுக்கும் தலித் மக்களான வால்மீகி இன மக்களுக்கும் நடந்த மோதலில் 60க்கும் மேற்பட்ட வால்மீகி இன மக்களின் குடிசைகள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. 1000 முதல் 1500க்கும் மேற்பட்ட ஜாட் இன மக்கள் கூட்டமாக வந்து பட்டப் பகலில் குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தியதை செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பின. அதன் பிறகு அங்கு சென்ற எழுத்தாளர்கள், நடுநிலையாளர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழுவும், இத்தகவலை உறுதி செய்தது.

செப்டம்பர் 2009ல் இவ்வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ என்ன சொல்லியது தெரியுமா ?


நஷ்ட ஈடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தலித்துகளே தங்கள் குடிசைகளை கொளுத்திக் கொண்டார்களாம். எப்படி இருக்கிறது ?


இதுதான் சிபிஐன் லட்சணம்.


மதுரையில் தினகரன் அலுவலகத்தில் பங்காளிச் சண்டையில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் தங்கள் உயிரை விட்டதை அனைத்து ஊடகங்களுமே ஒளிபரப்பின. உடனடியாக கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். கருணாநிதி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார் என்றாலே சிபிஐ ன் லட்சணம் என்னவென்பது புரியும். சிபிஐ உண்மையை கண்டுபிடித்து விடும் என்பது தெரிந்தால் கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவாரா ? தன் மகன் அல்லவா சிறைக்குப் போக வேண்டியிருக்கும்.


கருணாநிதி நினைத்தது போலவே, இவ்வழக்கில் சிபிஐ சேர்த்த மொத்தம் உள்ள 88 சாட்சிகளில் 87 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறின. வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். யார் மீதும் குற்றம் நிரூபிக்கப் படவில்லை.


அப்போ தினகரன் அலுவலக ஊழியர்கள் தாங்களாகவே தீக்குளித்து இறந்தார்களா ?


போபர்ஸ் வழக்கை சிபிஐ கையாண்ட விதம் குறித்து நாடே அறியும்.


இப்போது, கடந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று நடந்த வழக்கறிஞர் காவல்துறை மோதல் தொடர்பாக சிபிஐ “புலனாய்வு“ நடத்தி தனது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தால் நீண்ட நாட்கள் விசாரணை செய்தபிறகு குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ராதாகிருஷ்ணன், ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியம் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய நால்வர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 31 வழக்கறிஞர்கள் மேல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது சிபிஐ.


வக்கீல்கள் மட்டும் தவறு செய்யவில்லையா ? அவர்கள் மட்டும் என்ன யோக்கியமா ? என்று கேள்வி எழுப்புபவர்கள் சற்றே பொறுக்கவும்.


வக்கீல்கள் தவறு செய்திருக்கலாம். யாரும் மறுக்கவில்லை. அதற்காக அவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.


ஆனால் வழக்கறிஞர்களை கண் மூடித்தனமாக வெறிப்பிடித்தது போலத் தாக்கியது யார் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு தான் தெளிவாக ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறதே ? பிறகு வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?


4 உயர் அதிகாரிகள் மேல் இப்போது குற்றம் சுமத்தாமல், இந்த 4 அதிகாரிகளும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யுமா சிபிஐ ?


இதில் மிகப்பெரிய கூத்து எதுவென்றால், வழக்கறிஞர்களோடு சேர்ந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்று மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு மேல் தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிக்கை தான். மூத்த வழக்கறிஞரான அவர், காவல்நிலையத்தை எரிக்க சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்பதை விட ஒரு மிகப் பெரிய கட்டுக்கதையும், விஷமத் தனமும் வேறு எங்கும் பார்க்க முடியாது.

சிபிஐ ன் குற்றப் பத்திரிக்கை பத்தி vii ல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர்இ 1545 மணிக்கு கைது செய்யப் பட்டு, போலீஸ் வேனில் ஏற்றப் பட்டு அழைத்துச் செல்லப் பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பத்தி ixல் பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர் மாலை 1714 மணி வரை காவல்துறையினர் மீது மற்ற வழக்கறிஞர்களோடு சேர்ந்து கல்லெறிந்தார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.



சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி vii



சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பத்தி ix



எப்படி இருக்கிறது சிபிஐ ன் திறமை ?


சங்கரசுப்பு சதித்திட்டத்தில் ஈடுபட்டார் என்றால், முதல் நாளே திட்டமிட்டு, ஏராளமான ஆயுதம் தாங்கிய காவலர்களை நீதிமன்ற வளாகத்திற்குள் கூட்டியதற்கு பெயர் என்ன ? வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் வளைத்து வளைத்து அடித்ததற்கு பெயர் என்ன ?


சிபிஐ சொல்லும் ஒரே ஒரு சாக்கு என்ன தெரியுமா ? உச்ச நீதிமன்றம், இந்த நான்கு அதிகாரிகள் மேல் எடுக்கும் நடவடிக்கைக்கு தடை விதித்துள்ளது என்பது தான்.


இது ஒரு அப்பட்டமான புளுகு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன தெரியுமா ?
In the meanwhile, operation of Clauses (b) and (c) of direction No. 3 under the heading 'Direction to the Government' shall remain stayed till further consideration. However, it is made clear that this order shall not prevent State Government from
taking appropriate action in accordance of law.

உச்சநீதிமன்றம் தடை விதித்த Clause (b) மற்றும் (c) என்ன தெரியுமா ?

(c) நீதிமன்றத்தால் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு என்று கண்டறியப்பட்ட நான்கு உயர் அதிகாரிகளின் மீதும் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(d) துறை நடவடிக்கை எடுக்க ஏதுவாக நான்கு அதிகாரிகளும் பணி இடை நீக்கம் செய்யப் பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று எங்கே இருக்கிறது. மேலும், சட்டப் படி, இந்த நான்கு அதிகாரிகளின் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் Directions to CBI என்ற தலைப்பின் கீழ்,

In so far as, R.C.No.2(S)/2009/CBI/SCB /Chennai, registered against the Police, CBI is directed to proceed with the investigation in accordance with law

என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க வில்லையே ?

எவன் அடி வாங்கிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளெயின்ட் கொடுக்க வருகிறானோ, அவன் மேலேயே கேஸ் போடும் தமிழ்நாட்டு போலீசுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று சிபிஐ நிரூபித்து உள்ளது.

சிபிஐல் இப்போது இணை இயக்குநராக பணியாற்றி வரும், அசோக் குமாரும், வழக்கறிஞர் தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த ராதாகிருஷ்ணனும் லஞ்ச ஒழிப்புத் துறையில் 3 வருடங்கள் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்பதும், இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதும், தற்செயலாக நடந்த விஷயங்களாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே ?


சிபிஐ ல் வேலைப் பார்ப்பவர்களும் காவல்துறையினர் தானே ? மற்ற காவல்துறையினரிடம் உள்ள அதே கயமைத்தனம், அயோக்கியத்தனம், ஆளும் வர்க்கத்தை அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதம், உழைப்பாளி மக்களுக்கெதிரான துரோகம், பச்சோந்தித்தனம், சிபிஐ யிடம் மட்டும் இல்லாமல் போய் விடுமா என்ன ?

இனிமேல் சிபிஐ Central Bureau of Investigation இல்லை. அதற்கு பதிலாக

Consortium of Bloody Idiots

அல்லது

Confederation of Bureaucrats with Incompetence

என்று அழைக்கலாம் அல்லவா ?

வழக்கறிஞர்களே, உங்களையே தாக்கிவிட்டு, உங்கள் மீதே குற்றம் சுமத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கும் சிபிஐ குற்றப் பத்திரிக்கையை கொளுத்துங்கள்.

சவுக்கு

Monday, January 25, 2010

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்







ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.

என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.


திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


திமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.


அம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.

திருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.
கருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.


திருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.


கருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.


ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


திமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


ரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது

திமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.


ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது

திமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.


அரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.


அரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்

திருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.

கருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்

அம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து

கருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு

ரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.


கருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.

பங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.

கட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.


வியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.


தன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.


ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது

திமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.


திருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.


கருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.


அம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.



கருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.


திருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.


கருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.




ரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.
திமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.



திருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.


கருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.


அம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி


கருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி

அம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.

கருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.

அம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

கருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.

கருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.

திருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.


கருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.



திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.

ஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.



சவுக்கு

Saturday, January 23, 2010

நளினியை விடுதலை செய்யாதீர்கள்




நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சவுக்கு சொல்லவில்லை. தமிழக மக்கள் சொல்லவில்லை.

ஈழத் தமிழர்கள் சொல்லவில்லை. சொல்வது யார் தெரியுமா ?


முத்துவேல் கருணாநிதிதான்.


(கருணாநிதியை விமர்சனம் செய்தால், அநானியாக வந்து கெட்ட வார்த்தையில் பின்னூட்டம் போடுபவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு)


கருணாநிதி எப்போது சொன்னார் என்று யோசிக்கிறீர்களா ? விளக்கமாகவே சொல்கிறேன்.
தமிழகத்தில் கைதிகளை விடுதலை செய்வதில் இரண்டு வகை உண்டு.

ஒரு வகை ஆலோசனைக் குழுமத்தின் பரிந்துரையில் விடுதலை செய்வது. மற்றொரு வகை அண்ணா பிறந்த நாள் போன்ற தலைவர்கள் பிறந்த நாள் அன்று செய்யப் படும் விடுதலை மற்றொரு வகை.


முதல் வகையைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகள் தண்டனை கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலைக்காக பரிசீலிக்க சிறை விதிகளின் படி ஆலோசனைக் குழுமத்தை கூட்ட வேண்டும்.

அக்குழுமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மருத்துவர், நன்னடத்தை அலுவலர், அரசு சாரா உறுப்பினர்கள் இருவர் ஆகியோர் அடங்கிய குழு கூடி 10 ஆண்டுகள் சிறை முடித்த கைதிகளைப் பற்றி பரிசீலிக்க வேண்டும். 2001ல் நளினி 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிக்கிறார். ஆனால், நளினிக்கான ஆலோசனைக் குழுமும் கூடவேயில்லை.

முதன் முறையாக 2007ம் ஆண்டுதான் ஆலோசனைக் குழுமம் டிசம்பர் மாதம் கூடி, நளினியின் வழக்கை பரிசீலித்தது. அந்தக் குழு கூடி “இலங்கையில் இப்போது போர் நடந்து கொண்டு இருக்கிறது. இறந்த ராஜீவ் காந்தி மிகப் பெரிய தலைவர். நளினியை விடுதலை செய்தால் இலங்கைக்குச் சென்று, புலிகளோடு சேர்ந்து கொள்வார்“ என்ற காரணத்தைக் கூறி நிராகரித்தது.


ஆனால் இவ்வாறு நிராகரித்த குழுமம் சரியான முறையில் கூடவில்லை, மொத்தம் உள்ள ஏழு உறுப்பினர்களில் மூன்றே பேர் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர் ஆகையால், இந்தக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து வெற்றி பெற்றார்.

இந்த ஆலோசனைக் குழுமம், கருணாநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றுபவர்களால்தானே முடிவெடுக்கப் பட்டது ?

“தமிழினத்தின் தலைவர்“ நினைத்திருந்தால், அப்போது பரிந்துரை செய்திருக்க முடியாதா ?

நீதிமன்றம், ஆலோசனைக் குழுமத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட ஒன்றரை ஆண்டுகளாக கூட்டப் படவேயில்லை. இதை எதிர்த்து நளினி மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.

அதன் பிறகு தான் ஆலோசனைக் குழுமம் கூட்டப் பட்டது.

இரண்டாவது வகை, அண்ணா பிறந்த நாளில் கைதிகளை முன் விடுதலை செய்வது.

2001ம் ஆண்டு பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த 63 கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். நளினி அப்போது 10 ஆண்டுகள் முடித்திருந்தார்.

இதற்கு அடுத்து 2006ம் ஆண்டு அண்ணா பிறந்த நாளில் 472 கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். இவர்கள் கழித்த தண்டனை காலம் எவ்வளவு தெரியுமா ? 10 ஆண்டுகள். நளினி அப்போது 14 ஆண்டுகளை முடித்திருந்தார்.


2007ம் ஆண்டில், இரண்டு முறை கைதிகள் முன் விடுதலை செய்யப் பட்டனர். அண்ணா பிறந்த நாளின் போது பத்து ஆண்டுகள் முடித்த 190 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அடுத்து கருணாநிதியின் சட்டமன்ற பொன் விழா ஆண்டின் போது 14 ஆண்டுகள் முடித்த 27 பேர் விடுதலை செய்யப் பட்டனர். அப்போது நளினி 15 ஆண்டுகள் முடித்திருந்தார்.


2008 ஆண்டில் 1408 பேர் விடுதலை செய்யப் பட்டனர். 1408 பேரும் விடுதலை செய்யப் படுவதற்கான தகுதி 7 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும். நளினி அப்போது 16 ஆண்டுகள் முடித்திருந்தார்.

நளினியை முன் விடுதலை செய்யாமல் இருப்பதற்கு அரசு சொல்லும் காரணம் ஒரு விதி. அவ்விதி என்ன சொல்கிறது என்றால், மத்திய அரசு புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட கைதிகளை முன் விடுதலைக்கு பரிசீலிக்கும் முன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.

2006ல் ஆட்சிக்கு வந்தாரல்லவா “தமிழினத்தின் தலைவர்“ ? எத்தனை முறை மத்திய அரசை நளினி தொடர்பாக கருணாநிதி கலந்தாலோசித்தார் தெரியுமா ?

ஒரு முறை கூட இல்லை. இன்று வரை கலந்தாலோசிக்க வில்லை.


இப்போது நடந்து கொண்டிருக்கும் கூத்துக்காகத்தான் இந்தப் பதிவே.


கடந்த 4 நாட்களாக தேசிய ஊடகங்களிலும், மாநில ஊடகங்களிலும் நளினி விடுதலை, நளினி விடுதலை என்று பெரிய பெரிய செய்திகள் வருகிறதே. இதன் பின்னணி தெரியுமா ?


திடீரென்று நளினியை விடுதலை செய்ய ஆலோசனைக் குழுமம் பரிந்துரை என்ற செய்தி முளைத்தது.

யாருக்குமே எப்படி இச்செய்தி திடீரென என்று புரியவில்லை. ஆனால், திடீரென்று அனைத்து பத்திரிக்கைகளுக்கும் இச்செய்தி பரப்பப் பட்டது. இது கருணாநிதியின் உளவுத் துறை செய்த வேலை.


ஆனால் 20ந் தேதிதான் ஆலோசனைக் குழுமம் நளினியை சிறையில் சந்தித்தது. அதற்கு முன்பாகவே நளினி விடுதலை என்பது போல பல பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.


RAJIV ASSASSIN NALINI TO BE RELEASED ? என்று தேசிய ஊடகங்கள் அலறின, ராஜீவ் இறந்த படத்தை அருகில் போட்டு நளினி விடுதலை ? என்று தமிழ் ஊடகங்கள் அலறின. தினத்தந்தி தலைப்புச் செய்தியாகவே போட்டது.


திடீரென்று சுப்ரமண்ய சாமி நீதிமன்றம் வந்தார். தலைமை நீதிபதியிடம் நளினியை முன் விடுதலை செய்யப் போகிறார்கள்.

அவ்வாறு செய்யக் கூடாது நான் போட்ட வழக்கை விரைந்து விசாரியுங்கள் என்று மனு அளித்தார்.

நளினியை விடுதலை செய்யக் கோரும் பரிந்துரையில் கையொப்பம் இடாதீர்கள் என்று கவர்னரிடம் மனு அளித்தார்.


ஆனால், ஆலோசனைக் குழுமம் கூடி, நளினியை விடுதலை செய்ய இது வரை பரிந்துரை அனுப்பவில்லை.

இந்நிலையில் எதற்காக இச்செய்தி ஊடகங்களில் கருணாநிதியால் பரப்பப்பட்டது ?


இங்கேதான் இருக்கிறது கருணாநிதியின் தந்திரம்.


ஆலோசனைக் குழுமம், இம்முறை நளினியை முன் விடுதலைக்கு தகுதியானவர் என்று சொல்லியே தீர வேண்டும்.

ஏனெனில் நளினி மீது சிறைக் குற்றங்கள் ஏதும் கிடையாது. அவ்வாறு பரிந்துரை செய்து குழு அறிக்கையை அரசிடம் அளித்தால் தமிழக அரசு அப்பரிந்துரையின் மீது தனது முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு முடிவெடுத்தபின், மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டு கடிதம் எழுதினால், சோனியாவுக்கு நெருக்கடி ஏற்படும். நளினியை விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் அரசியல் ரீதியாக நன்றாக இருக்கும் என்றாலும், நளினி சிறையிலேயே சாக வேண்டும் என்ற சோனியாவின் விருப்பம் நிறைவேறாது.


இப்படி ஒரு நெருக்கடிக்கு சோனியா ஆளானால், அதனால் முதலில் பாதிக்கப் படப் போவது கருணாநிதி தான்.

அதற்கு பதில், ஆலோசனைக் குழுமத்தின் முடிவுக்கு எப்படியாவது நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டால் ?


இதுதான் கருணாநிதியின் திட்டம். சுப்ரமண்ய சாமியின் வழக்கு விரைந்து விசாரிக்கப் படவில்லை என்றாலும் யாராவது ஒருவர் பொது நல வழக்கு திடீரென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.


எப்படி இருக்கிறது கருணாநிதியின் கயமை ?


இப்போது சொல்லுங்கள். நளினியை விடுதலை செய்யாதீர்கள் என்று சொல்லுவது யார் ?
முத்துவேல் கருணாநிதி தானே ?

இவர்தான் “தமிழினத்தின் தலைவர்“

வெட்கக்கேடு.

சவுக்கு

Friday, January 22, 2010

ஒரு துளி விஷம் கொடுங்களேன்... ... ...


உலகில் பாவப்பட்ட ஜென்மங்களான ஆதரவற்ற ஈழத் தமிழனாய்த் தான் நானும் பிறந்தேன். எனக்கு இரண்டு அக்கா மற்றும் ஒரு அண்ணன். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மக்கட்செல்வத்தில் எனக்கு குறையே இல்லாமல் ஏழு குழந்தைகள். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இரண்டு மகன்களுக்கும், இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. அனைவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம்.

சமாதான காலத்தில் ஈழம் போன்றதொரு மகிழ்ச்சியான இடத்தை நீங்கள் எங்கேயும் காண முடியாது. புலிகளின் நிர்வாகத்தில் மக்கள் அனைவரும் குறையின்றி மகிழ்ச்சியாகவே இருந்தோம். எங்கள் தேசியத் தலைவர் இருக்கையில் எங்களுக்கென்ன குறை ?

2007 பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் எப்போதும் என்னை அழைப்பது போலவே சமையல் வேலைக்கு அழைத்தனர். இரணியத் தீவிலிருந்து, யாழ்ப்பாணம் வரை செல்ல வேண்டும், படகில் சமைக்க வேண்டும் என்று கூறினர். "அதுக்கென்ன, வாருங்கள் போவோம்" என்று சம்மதித்தேன்.

படகில் ஏறும்போது இரவு 9 மணி இருக்கும். படகில் ஏறியதும் எப்போதும் எங்களுடன் பயணிக்கும் மகிழ்ச்சியும் பயணிக்கத் தொடங்கியது. முதலில், ஈழத்தின் விளைந்த சிறப்பான தேயிலையில் அனைவருக்கும் தேநீர் தயாரித்துத் தந்தேன்.

"என்ன அண்ணே, இவ்வளவு சிறப்பாக தேநீர் போட எங்கே கற்றுக்கொண்டீர்கள் ? " என்றார் புருஷோத்தமன். "12 வயசுலேர்ந்து சமைத்துக் கொண்டுருக்கிறேன் அண்ணா" என்று கூறினேன். சகாயம் "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் " என்று பாடத் தொடங்கினார். நாங்களும் அவருடன் சேர்ந்து கொண்டோம்.


திடீரென்று, எங்களை நோக்கி வந்த வெள்ளைப் படகு ஒன்று எங்கள் படகின் மீது வெளிச்சம் பாய்ததது. நாங்கள் படகை நிறுத்தினோம். "நீங்கள் இந்திய எல்லையில் இருக்கிறீர்கள்" என்று இரண்டு வெள்ளுடை தரித்த அதிகாரிகள் அதிகாரத் தொனியில் மிரட்டினர்.

"அய்யா இது சர்வதேச எல்லை, நாங்கள் இலங்கை எல்லைக்கு அருகில்தான் இருக்கிறோம்" என்று எங்களுடன் இருந்த புருஷோத்தமன் கூறினார். "உடனடியாக எங்கள் படகை பின் தொடருங்கள் " என்று கட்டளையிடப்பட்டது. அந்த அதிகாரிகளுள் ஒருவர் துப்பாக்கியை எடுத்து நீட்டினார்.

அமைதியாக இந்தியப் படகை பின்தொடர்ந்தோம்.


பிப்ரவரி 8ம் தேதி சென்னை வந்தடைந்தோம். சென்னை வந்தடைந்ததும் எங்களை சென்னை நகரில் உள்ள மிதக்கும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கே ஒரு இருட்டறையில் அடைக்கப் பட்டோம்.


காவல் நிலையத்தில் அடைக்கப் பட்டாலும், தாய் தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற நிறைவு உணர்வே ஏற்பட்டது. இங்கே, தமிழனத் தலைவர் கலைஞர் இருக்கிறார். அய்யா நெடுமாறன் இருக்கிறார்.

ஈழத் தமிழருக்காக குரல் கொடுக்க தமிழகமே இருக்கிறது, பிறகென்ன கவலை நமக்கு என்ற எண்ணமே ஏற்பட்டது.


சீருடை அணிந்தும், அணியாமலும் பல அதிகாரிகள் எங்களை விசாரித்தனர். விசாரித்தவர்கள் அதிகாரிகள் என்பது காவலர்கள் அவர்களிடத்தில் காட்டிய பணிவிலும், அதிகாரிகளின் அதிகாரத் தோரணையிலும் தெரிந்தது.

ஏறக்குறைய 5 நாட்கள் எங்களை வைத்து விசாரித்தனர். கடைசியாக எங்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப் போகிறார்கள் என்று தெரிய வந்தது. அப்போதுதான் எங்களுடன் இருந்த புருஷோத்தமன் அங்கே இருந்த உயர் அதிகாரி ஒருவரைக் கூப்பிட்டார்.

"சார், ஒரு நிமிஷம்." "என்னடா ?" என்ற அதிகாரக் குரல்தான் பதிலாக வந்தது. "சார், ஒரு விஷயம் சொல்லணும்" "என்ன புதுசா சொல்லி புடுங்கப் போற ?" "ஐபி, ரா" "வெல்லாம் விசாரிச்சுட்டு போயிட்டாங்க, இப்போ என்ன சொல்லப் போற ?" என்றார்.

"நாங்க வந்த போட்ல..... "

"நீங்க வந்த போட்ல .. ... ?" "அந்த அரிசி மூட்டை, வெல்லம், சர்க்கரை எல்லாத்தையும் கோர்ட்ல காட்ட மாட்டோம்" அதத்தானே சொல்ல வந்த " என்றார் அந்த அதிகாரி.

"இல்ல சார். நாங்க வந்த போட்ல வெடிப்பொருளும், ஆயுதங்களும் இருக்கு" என்று புருஷோத்தமன் கூறினார்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சி பரவியது. அவநம்பிக்கை தெரிந்தாலும், அச்சம் அதைவிட அதிகம் தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்திற்கு அறை வெறிச்சோடிக் கிடந்தது. அது வரை, நாங்கள் வந்த படகில் ஏறி பேசிக்கொண்டிருந்த காவலர்கள் அனைவரும், படகை விட்டு “அய்யோ அம்மா“ என்று அலறி ஓடினர் என்று கேள்விப்பட்டோம்.

உடனடியாக அந்த அதிகாரி யார் யாரிடமோ பதட்டத்துடன் போனில் பேசினார். 10 நிமிடத்துக்குள் ஒரு பெரிய அதிகாரிகளின் பட்டாளமே வந்தது. வந்த அதிகாரிகள் பதட்டத்துடன் புருஷோத்தமனை அணுகி விசாரித்தார். புருஷோத்தமனும் ஆமாம் என்று அவரிடம் கூறினார்.

உடனடியாக பரபரப்படைந்த அதிகாரிகள் கூட்டம் ராணுவத்துக்கு போன் போட்டது போல் தெரிந்தது.

ஏற்கனவே கோர்ட்டுக்கு தகவல் சென்று விட்டதால், வேறு வழியின்றி எங்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர்.

பிறகு 2 நாட்களுக்குப் பிறகு, அந்த வெடிப்பொருட்களையும், துப்பாக்கிகளையும், படகிலிருந்து அப்புறப்படுத்தினர் என்று கேள்விப்பட்டேன்.

புழல் சிறையில் அனைவரும் அடைக்கப் பட்டோம்.

புழல் சிறை புதிதாக கட்டப் பட்டதாம். அழகாகத்தான் இருந்தது. சிறை அதிகாரிகள் அதிக விரோதம் இல்லாமல் இருந்தனர். புழல் சிறைக்கு வந்த பிறகு தான் கைதிகளுக்குள் பாரபட்சம் என்பதை கண்டேன்.

சிறை விதிகளின்படி வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கு, வாரம் இரு முறை முட்டையும், பாலும், ப்ரெட்டும் வழங்கப் பட வேண்டும். போதைப் பொருள் வழக்கில் கைதாகி புழல் சிறைக்குள் இருந்த நைஜீரியா, சீனா, கென்யா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சலுகை வழங்கப் பட்டு வந்தது.

நாங்களும் வெளிநாட்டவர்கள் தான், எங்களுக்கும் இந்த சலுகைகளை வழங்குங்கள் என்று கேட்டபோது, நீதிமன்றத்தில் ஆணை பெறுங்கள் என்ற பதில்தான் வந்தது. ஆனால் கென்யா, நைஜீரியா நாட்டவர்களுக்கெல்லாம் நீதிமன்ற ஆணை இல்லாமலேயே இந்த சலுகை வழங்கப் பட்டது.


முதன் முறையாக தாய் தமிழகத்திலேயே அந்நியமாக உணர்தோம். சிறைக்குள் இருந்ததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம். ஆனாலும் தமிழகத்தில் நமக்கு பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கையோடு இருந்தோம்.


45 நாட்கள் கழிந்தது. “ஜெயிலர் கூப்டுறாரு“ என்று வார்டர் அழைத்தார். கைது செய்யப் பட்ட அனைவரையும் ஜெயிலர் ஏன் கூப்பிடுகிறார் என்ற சந்தேகத்தோடு சென்றோம்.
“இதில் கையெழுத்து போடுங்க“ என்று கூறினார் ஜெயிலர். “என்ன சார் இது“ என்று சகாயம் ஜெயிலரிடம் கேட்டார்.

“உங்களையெல்லாம் ஒரு வருஷம் தேசிய பாதுகாப்புச் சட்டத்துல கைது பண்ணியதுக்கான ஆணை இது, இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டோம்னுதான் இப்போ கையெழுத்து போட்றீங்க“ என்று ஜெயிலர் கூறியது எங்கள் மனதில் ஆயிரம் ஈட்டிகளை ஒரே நேரத்தில் இறக்கியது. என்ன இது ?

நம் தாய் தமிழகத்தில் நமக்கு இந்த நிலையா ? மவுனமாக யாருடனும் பேசிக்கொள்ளாமல் செல்லுக்கு திரும்பினோம்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து புகழேந்தி என்ற வழக்கறிஞர் பணம் ஏதும் பெறாமலேயே எங்களுக்காக மனிதாபிமானத்துடன் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தார்.

அதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு எனக்கு மட்டும் சிறையை விட்டு வெளியே வந்தேன். சென்னை என்னை வரவேற்க காத்திருக்கிறது என்றே நம்பி சிறையை விட்டு வெளியே வந்தேன்.


வெளியே வந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சிறைக்கு வெளியே இருந்த க்யூ பிரிவு போலீசார் உடனடியாக என்னை ஜீப்பில் ஏறச் சொன்னார்கள். “சார் எனக்கு பெயில் கிடைச்சுடுச்சு சார்“ “திருப்பி ஏன் சார் கைது பண்றீங்க ? “ என்று கேட்டதற்கு, “பேசாமல் வண்டியில உக்காரு“ என்ற பதில் வந்தது.


இலங்கையில், வெள்ளை வேனில் தமிழர்களை ஏற்றி நடக்கும் படுகொலைகளைப் பற்றி கேள்விப் பட்டிருந்த எனக்கு, மரண பயம் பிடித்து ஆட்டியது.


அமைதியாக அமர்ந்திருந்தேன். ஏறக்குறைய 2 மணிநேரம் கழித்து, செங்கல்பட்டு என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். அது இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்று சொன்னார்கள்.


“அப்பாடி, ஒரு வழியா முகாமுக்கு வந்தாச்சு“ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். சிறிது நேரத்தில் அது முகாம் இல்லை, இதுவும் ஒரு சிறைச்சாலை என்று கூறினார்கள். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது.


இதற்குள், ஈழத்தில் போர் கடுமையாகி ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று தினந்தோறும் வரும் செய்திகள், என் குடும்பத்தைப் பற்றிய கவலையை அதிகரித்தது. ஊரில் உள்ள மனைவி மக்கள் என்ன கதிக்கு ஆளாகியிருப்பார்களோ என்ற கவலை தாங்க முடியவில்லை.


முகாமை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. உள்ளேயும் யாரையும் அனுமதிப்பதில்லை. மீண்டும் நம்மை ஏன் சிறை வைத்திருக்கிறார்கள் என்றே புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.


சில நாட்களில், முகாமில் இருந்த அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ஏறக்குறைய 15 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் விடுவிக்கப் படப் போகிறோம் என்ற செய்தி வந்தது.

மகிழ்ச்சியோடு, இருந்த எனக்கு அடுத்த அதிர்ச்சி வந்தது. “உன் பேர் விடுவிக்கப் படப் போறவங்க லிஸ்டுல இல்லப்பா“ என்று க்யூ ப்ரான்ச் அதிகாரி கூறினார்.
“என்ன செய்வது என்றே புரியவில்லை. ஈழத்திலாவது சுதந்திரமாக இருந்தோம். தாய் தமிழகத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். “ “எதற்காக நமக்கு இந்த நிலை “ என்று புரியவேயில்லை.

திடீரென்று மூச்சு விட சிரமமாக இருந்தது. நெஞ்சில் வேறு வலி வந்து கொண்டே இருந்தது. “சார், மூச்சு விட கஷ்டமாக இருக்கிறது சார். மருத்துவமனைக்கு கூட்டிட்டு போங்க சார்“ என்று அதிகாரியிடம் கேட்டேன். “நாளைக்கு போகலாம்பா“ என்று கூறினார்.
சென்னை பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள்.

ரத்தம், எக்ஸ்ரே என்று ஏராளமான பரிசோதனை எடுத்தார்கள். எனக்கு இருமலும், நெஞ்செரிச்சலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


இரண்டு நாள் பரிசோதனைக்குப் பிறகு, டாக்டர் வந்து “ஆறுமுகம், உனக்கு, நுரையீரலில் புற்றுநோய் வந்திருக்குப்பா“ என்றார். தலை சுற்றி மயக்கம் வந்து விட்டது எனக்கு. நினைவு திரும்பியபோது, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு என்னை மாற்றினார்கள்.
அங்கே, கைதிகள் வைக்கப் படும் ஒரு மோசமான பாழடைந்த வார்டில் என்னை அடைத்தார்கள். டாக்டர்களும் நர்சுகளும், அவ்வப்போது வந்து பார்த்தார்கள்.


மறுநாள் வந்த க்யூ ப்ரான்ச் அதிகாரி, “ஆறுமுகம், உன்னை முகாமிலிருந்து விடுவிச்சு அரசு உத்தரவு போட்டுடுச்சுப் பா“ இனிமே நீ முகாமுக்கு போக வேண்டியதில்லை“ என்று சொன்னார்.

“சார் எனக்கு யாருமே இல்லை சார்“ “நான் என்ன சார் பண்ணுவேன்“ என்றேன். “நாங்க என்னப்பா பண்றது“ “அரசாங்க உத்தரவு மதிச்சுத்தானே ஆகணும்“ “இப்போ பாரு, உனக்கு காவலுக்கு 5 பேரை ட்யூட்டி போட வேண்டியதா இருக்கு“ “முகாம விட்டு உன்னை வெளியே அனுப்பிட்டா நாங்க வரவேண்டியதில்லை பாரு“ “அதான் அரசாங்கம் இப்படி உத்தரவு போட்டிருக்கு “ என்றார்.


நுரையீரலில் புற்று நோய் என்பதால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் மரணம் அநாதை மரணம்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. பிறகு எதற்காக என்னை இன்னும் மருத்துவமனையில் வைத்து சித்திரவதை செய்கிறீர்கள். அதனால்தான் கேட்கிறேன்.


“எனக்கு ஒரு துளி விஷம் கொடுங்களேன்… … … “

இது கதை அல்ல. இப்போது போனாலும் இன்னும் ராயப்பேட்டை மருத்துவமனையில் இந்த ஆறுமுகத்தை பார்க்கலாம். ஈழத் தமிழருக்காக போராடும் தமிழினத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?

ஈழத் தமிழர்களுக்காக தமிழினத்தின் ஒரே தலைவன் எப்படி பாடுபடுகிறார் பார்த்தீர்களா ?


ஆறுமுகம் அனாதையாகத்தான் சாவார்.
அவர் பெயரென்ன

அழகிரியா ?

ஸ்டாலினா ?

செல்வியா ?

கனிமொழியா ?

தமிழரசா ?

செல்வந்தராய் வாழ ?




சவுக்கு

Sunday, January 17, 2010

பிரபாகரன் தந்தை மரணத்துக்கு காரணம் தொல்.திருமாவளவனே ?




பிரபாகரன் தந்தை நோய்வாய்ப்பட்டுத்தானே இறந்தார், அவர் மரணத்துக்கு திருமாவளவன் எப்படி பொறுப்பாக முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே.

ஆனால், தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் மரணத்துக்கு ஏன் தொல்.திருமாவளவனே காரணம் என்று கூறக்கூடாது ?



“அடங்க மறு, அத்து மீறு“ என்ற முழக்கத்தோடு, தமிழக அரசியல் வானில் இளைஞர்களின், தலித்துகளின் நம்பிக்கை நட்சத்திரமாக 80களின் இறுதியில் தன் பயணத்தை துவங்கிய திருமாவளவன் 90களின் இறுதியில் பண்ணையார் ஜி.கே.மூப்பனாரோடு கூட்டணி சேர்ந்த்தும் தன் நேர்மையிலிருந்து சறுக்கி விழுந்தார்.

அன்று சறுக்கி விழுந்தவர், இன்று வரை எழு முடியாமல், திமுகவின் மாவட்டச் செயலாளர் அளவுக்கு தரம் தாழ்ந்து இருக்கின்றார்.


திருமாவளவனின் ஆரம்பக் கால அரசியல் பயணம் நேர்மையாகவும், உணர்ச்சி பூர்வமாகவுமே இருந்த்து. இன்றைய அரசியலின் விஷக் காற்று அன்று திருமாவளவனை தழுவவில்லை.

மிகவும் பின்தங்கிய, ஏழை பின்புலத்திலிருந்து வந்தவரான திருமாவளவன் தனது பின்புலத்தையும், தான் சார்ந்த சமூகத்தின் மீதான அக்கறையும் நிறையவே கொண்டிருந்தார்.


என்னதான் கல்வியும் அரசியல் அனுபவமும் ஒரு மனிதனை செம்மைப் படுத்தினாலும், ஒரு மனிதனின் இயல்பான குணத்தை மாற்றவே முடியாது. அது திருமாவளவன் விஷயத்திலும் சரியாகவே நடந்த்து.


தமிழ்நாடு விடுதலைப்படையைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் திருமாவளவனை தலித்துகளின் நம்பிக்கைக்குரிய தலைவனாக பார்த்தார். அப்போதெல்லாம் திருமாவளவனிடம் இப்போது இருக்கும் ஆள் பலம், பண பலம் உட்பட எதுவும் கிடையாது.

எங்கு சென்றாலும், நடந்தோ, பேருந்திலோ செல்வார் திருமா. இதைக் கண்ட ராஜாராம், திருமாவளவனுக்காக ஒரு காரை வாங்கி பரிசளித்தார்.


சில ஆண்டுகளுக்கு பிறகு, போலீசால் தேடப்பட்டு வந்த ராஜாராம் போலீசில் சிக்கினார். இவர் போலீசில் சிக்கியவுடன், திருமாவளவனை பயம் பிடித்து ஆட்டத் தொடங்கியது.

மிகுந்த அச்சம் அடைந்த திருமா, சிறிது காலம் முன்பு வரை, தன்து உற்ற தோழனாக இருந்து வந்த செல்வப் பெருந்தகையை அணுகி, தனது பெயர் இந்த வழக்கில் வராமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி பகீரத பிரயத்தனம் செய்தார். செல்வப் பெருந்தகை தனக்கு காவல்துறை உயர் அதிகாரிகளோடு உள்ள தொடர்பை பயன்படுத்தி திருமாவளவனின் பெயர் எதிலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

காவல்துறை ராஜாராமிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் படியே, திருமாவளவன் அந்த வழக்கில் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், பலரிடம் கெஞ்சி, கூத்தாடி, திருமாவளவன் தனது பெயர் அவ்வழக்கினில் வராமல் பார்த்துக் கொண்டார்.

இது தவிர, ராஜாராம், போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் படப் போகிறார் என்ற செய்தி அறிந்த்தும், அவரைக் காப்பாற்ற முயற்சி எதுவும் எடுக்காமல் நிம்மதி பெருமூச்சு விட்டவர்தான் இந்த்த் திருமாவளவன்.

தனது நண்பன் நடந்து செல்கிறானே என்று அவனுக்காக கார் வாங்கிக் கொடுத்த ராஜாராம் எங்கே ?

அதே நண்பனை போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப் போகிறார்கள் என்று தெரிந்தும், மவுனியாக இருந்த திருமாவளவன் எங்கே ?


1999 பாராளுமன்றத் தேர்தலில், அப்போதைய தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவர் மூப்பனார், தமிழ்நாட்டில், ஒடுக்கப் பட்ட மக்கள், ஆதரவற்றோர் ஆகியோரை துணைக் கொண்டு மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கினார்.

பண்ணையார் மூப்பனாரின் அணியில், அன்று சம பலம் கூட பெற்றிருக்காத விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், புதிய தமிழகமும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. அது வரை அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி என்றெல்லாம், வீறாப்பு பேசி வந்த திருமாவளவன், தேர்தல் அரசியலில் பங்கெடுக்கத் தொடங்கினார்.


மாறி மாறி, இரண்டு திராவிட இயக்கங்களுடன் கூட்டு வைத்து தனது அரசியல் அடையாளத்தை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பித்தார் திருமாவளவன். 2001 சட்டசபைத் தேர்தலில், திமுக அணியில் போட்டியிட்டு மங்களூர் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினர் ஆனார் திருமாவளவன்.

தேர்தல் அரசியலில் நுழைந்த உடனேயே திருமாவுக்கு திராவிட கட்சிகளுக்கே உரிய தனி மனித துதிபாடல் நிரம்ப பிடித்துப் போனது. தனக்கு எங்கு பார்த்தாலும் கட் அவுட்டுகள், தான் செல்லும் இடமெல்லாம் கட்சிக் கொடிகள், பேனர்கள் என பிரமாதப்படுத்தினால்தான், வளர முடியும் என்று கருதி, அதே வழியை கடை பிடிக்கலானார் திருமாவளவன்.

2006 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக அணியில் கூட்டணி சேர்ந்தார் திருமா. 6 தொகுதிகளில் போட்டியிட்டாலும், 2 தொகுதிகளில் மட்டுமே விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெற்றி கிடைத்த்து.

இக்கட்சியின் செல்வப்பெருந்தகை மற்றும், திடீர் அரசியல்வாதி ரவிக்குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.


தேர்தல் முடிந்த்தும், தான் ஒரு கைத் தேர்ந்த அரசியல்வாதி என்பதை திருமாவளவன் நிரூபித்தார். தேர்தலுக்குப் பிறகு ஒரு பத்திரிக்கை பேட்டியில் திமுக அரசு, மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப் போகிறது என்று நினைத்திருந்தோம், ஆனால், அரசு மக்களுக்கு ஒரு கையகல டிவி (போர்ட்டபிள் டிவி) தந்து ஏமாற்றி விட்டது என்று பேசியவர்தான் இந்த திருமாவளவன்.


சிறிது காலம் கழித்து, தங்கள் கட்சி எம்எல்ஏ ரவிக்குமாரின் தயவால், திமுக அணிக்குத் தாவினார் திருமாவளவன். திமுக அணிக்குச் சென்றவுடன் தான், தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து, திமுக மாவட்டச் செயலாளரை விட தரம் தாழ்ந்து போனார் திருமாவளவன்.


ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகத்தை உலுக்கி எடுக்கத் தொடங்கியது. தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமாயின. ஈழத் தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய திருமாவளவன், தான் களமிறங்கியபோதும் கவனமாக கருணாநிதியின் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டார்.


ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரவையோடு சேர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டாலும், நான் மட்டும் தனி ஆவர்த்தனம் என்று கருணாநிதி வழியே என் வழி என்று நடக்கத் தொடங்கினார்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதியின் சுயரூபம் அம்பலமாகத் தொடங்கியதும், அவரோடு சேர்ந்து ஜால்ரா அடித்த திருமாவளவனின் சுயரூபமும் அம்பலமாகத் தொடங்கியது.

ஊரில் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, நாமும் இருப்போம் என்று, சென்னையை அடுத்த மறைமலை நகரில் உண்ணாவிரதம் தொடங்கினார் திருமாவளவன். 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விட்டு, அன்று மாலை உண்ணாவிரத்த்தை முடித்துக் கொண்டு திருமா என்ன பேசினார் தெரியுமா ?



"தமிழர்களைப் பொறுத்தவரை முதல் எதிரி காங்கிரஸ்தான்.இனி எக்காலத்திலும் அக்கட்சியுடன் விடுதலைசிறுத்தைகள் கட்சி கூட்டணி அமைக்காது. அதுமட்டுமல்ல, இனி காங்கிரஸ் கட்சியை புல், பூண்டு தெரியாமல் இருக்கும் இடமே தெரியாமல் அழிக்க வேண்டும்’’



அடுத்து நடந்த தேர்தலில் என்ன நடந்த்து என்று அனைவருக்குமே தெரியும். அப்போது திருமாவளவன் அளித்த விளக்கம், கூட்டணி திமுகவோடு தான். காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் கூட்டணி கிடையாது என்றார்.

ஆனால் காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்துக் கொண்டது பற்றி தனக்கு கவலையில்லை என்றார். சோனியா தமிழகத்தில் கலந்து கொண்ட திருமாவளவனுக்கு உரிய மரியாதை வழங்கப் படவில்லை என்பதை அனைவரும், நேரடி ஒளிபரப்பிலேயே கண்டு களித்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் முடியும் வரை, காங்கிரஸ் மனம் நோகும் என்று, புலிகள் பற்றியோ, பிரபாகரன் பற்றியோ, வாயைத் திறக்காமல், மவுனச் சாமியாராய் போராட்டம் நடத்தினார் திருமா.



இரண்டு பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப் பட்டவுடன், ஈழத் தமிழர்கள் பற்றி கொஞ்ச நஞ்சம் பேசிக் கொண்டிருந்த்தையும் நிறுத்தினார் திருமாவளவன்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் தனது அடையாளத்தை முற்றிலும் இழந்து கருணாநிதியின் கைப்பாவையாக ஆகி விட்டதை உணர்ந்த திருமா, அவ்வப்போது, நானும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ள குரல் கொடுத்து வந்திருந்தார்.


இந்த நிலையில்தான், முள் வேலிக்குள் சிக்கியுள்ள தமிழர்களை விடுவிப்பதற்காக அக்டோபர் 2009ல் இலங்கைக்கு பயணமானது தமிழக எம்பிக்கள் குழு. இந்தக் குழுவில் வேண்டாத தொங்கு சதையாக ஒட்டிக் கொண்டு சென்ற திருமாவளவன், முள் வேலிக்குள் அடைபட்டுக் கிடந்த தமிழர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.



இந்த தூதுக்குழு இலங்கை செல்வதற்கு 20 நாட்களுக்கு முன் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

"இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர் என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர், இவையெல்லாம் திருப்தியளிக்கின்றன,”
இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன என்று கூசாமல் புளுகும் கருணாநிதியை கண்டித்தாரா திருமாவளவன் ?

ராஜபக்ஷேவாவது எதிரி. ஆனால் கருணாநிதி தமிழினத்தை அழித்த துரோகி அல்லவா ? இந்த்த் துரோகியோடு திருமாவளவனுக்கு என்ன வேலை ? எம்பி பதவி அளித்துள்ளார் அல்லவா ?

அதற்கான நன்றிக் கடன்.


இலங்கை சென்று திரும்பிய எம்பிக்கள் குழு கருணாநிதி மூலமாக அளித்த பேட்டி என்ன தெரியுமா ?

”முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் ராஜபட்சவை நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வாரகாலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.”

என்ன ஒரு அயோக்கியத்தனம் ? அக்டோபர் மாத்த்துக்குப் பிறகு பல வாரங்கள் கடந்து விட்டனவே ?

விடுவிக்கப் பட்டார்களா தமிழர்கள் ?


இலங்கை சென்ற எம்பிக்கள் குழு உடனடியாக ராஜபக்ஷேவிடமிருந்து எந்த ஒரு உத்தரவாத்த்தையும் பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால், தான் உயிருக்கு உயிராக நேசிக்கும், தன்னோடு எடுத்துக் கொண்ட அவர் அவர் படத்தை புத்தக்க் கண்காட்சி முழுக்க விளம்பரம் செய்யத் தெரிந்த திருமாவளவனுக்கு குறைந்த பட்சம் பிரபாகரனின் பெற்றோரை முள்வேலிக்குள் இருந்து விடுவிக்க துணிச்சல் இருந்த்தா ?

திருமாவளவன் கேட்டு, ராஜபக்ஷே மறுத்திருந்தால், அடுத்த விமானம் ஏறி இந்தியா திரும்பி வர வேண்டியது தானே ?

கருணாநிதியின் சீமந்தப் புத்ரி தலைமையில் அல்லவா இலங்கை சென்றிருந்த்து எம்பிக்கள் குழு ? அவர் கோபித்துக் கொண்டால் ?


இலங்கை சென்ற எம்பிக்கள் குழு ராஜபக்ஷேவோடு சிரித்துப் பேசி விருந்துண்டு வந்த புகைப்படங்கள் தமிழகத்தில் அனைவர் மனதிலும் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தின.

இந்தியா திரும்பி வந்த எம்பிக்கள் குழு கருணாநிதியை சந்தித்து விட்டு பின்னர் டெல்லி சென்றது. ஆனால், திட்டமிட்டே இந்த குழுவில் திருமாவளவன் புறக்கணிக்கப் பட்டார்.





தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை துடைக்க திருமாவளவன், ராஜபக்ஷே சகோதர்ர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே திருமாவளவன் ?

அயோக்கியத்தனம் இல்லையா இது ? இலங்கை சென்று, ராஜபக்ஷேவோடு பல்லிளித்து விருந்துண்ணும் போது தெரியவில்லையா அவர்கள் போர்க்குற்றவாளிகள் என்று ?


"கடைசி நேரத்தில் நீங்களும் பிரபாகரனுடன் இருந்திருந்தால் உங்கள் கதையையும் முடித்திருப்பேன்'' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தமிழ்நாட்டில் இருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனிடம் நேருக்குநேர் நின்று சொல்லியிருக்கிறார்! " எத்தகைய இறுமாப்பு இது ?

இதையும் கேட்டுக் கொண்டு பெட்டைக் கோழி போல, பொழுது சாய்ந்த்தும் வந்து கூண்டுக்குள் அடைவதைப் போல, இந்தியா திரும்பி வந்து கருணாநிதியின் காலடியில் சரணடைந்த திருமாவளவன் சிங்களக் காடையனை விட மோசமான கயவன் அன்றோ ?


ஈழத் தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும். தன் தலைவன் அழைப்பு விடுத்துள்ளான், அவன் கட்டளையை நிறைவேற்றுவோம் என்று போராட்டம் நடத்தி கைதான விடுதலைச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 193. அவர்களுள் 26 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையில் உள்ளார்கள்.

குறைந்த பட்சம் அவர்களை விடுதலை செய்யச் சொல்லி கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்தாரா திருமாவளவன் ?


இன்றும் சிறையில் உள்ள இந்த விடுதலைச் சிறுத்தைகளின் குடும்பத்தினரை யார் பார்ப்பது ?

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்த வசதி இல்லாமல்தான் இன்னும் சிறையில் உள்ளார்கள் என்ற விபரம் தெரியுமா திருமாவுக்கு ?

காடுவெட்டி குரு கைதானதால் கூட்டணியை முறித்துக் கொண்ட மருத்துவர் அய்யா, மீண்டும் கூட்டணி சேர்வது போல பாவ்லா காட்டியே குரு மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலை நீதிமன்றம் உறுதி செய்த பிறகு கூட, கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்து ரத்து செய்ய வைத்தாரே ?

ராமதாசோடு, அணி தாவுவது தவிர வேறு ஒன்றுமே கற்றுக் கொள்ளவில்லையா திருமா ?




"எழும் தமிழ் ஈழம்" என்ற மாநாட்டுக்கு, ஒட்டப் பட்டிருந்த பிரபாகரனின் புகைப்படங்களை அகற்றியும், ஈழம் என்ற வார்த்தை மேல் இரவோடிரவாக வெள்ளைத் தாளை ஒட்டியதே கருணாநிதியின் காவல்துறை ?







எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருப்பாரா திருமா ?


திருமாவளவனின் நூல் வெளியீட்டிற்காக, வள்ளுவர் கோட்டத்தின் அருகே வைக்கப் பட்டிருந்த, திருமாவளவன் மற்றும் பிரபாகரனின் பேனர்களை காங்கிரஸ் கட்சியினர் அகற்றச் சொன்னதும், சிரமேற்கொண்டு அவற்றை அகற்றிய கருணாநிதியை கண்டிக்க முடிந்த்தா திருமாவளவனால் ?


சுயமரியாதை உள்ளவர்கள் கண்டிப்பார்கள்.



இலங்கை சென்று, ராஜபக்ஷேவோடு பல்லிளித்து விட்டு, இந்தியா வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, "முள் வலி" என கட்டுரைத் தொடர் எழுதினால் திருமாவின் கபட நாடகம் தெரியாமல் போய் விடுமா என்ன ?




தேசியத் தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை மறைவுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்று, அங்கே புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து வந்திருக்கிறார் திருமாவளவன்.



1) முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் என் தலைவனின் பெற்றோரை மட்டுமாவது விடுதலை செய்யுங்கள் என்று ராஜபக்ஷேவிடம் கேட்டிருக்க முடியாதா திருமாவளவனால் ?


2) ராஜபக்ஷே கேட்கவில்லை என்றால், அவருடைய தலைவர் கருணாநிதியிடம் செர்ல்லி எப்படியாவது பிரபாகரனின் பெற்றோர்களை விடுவிக்கச் சொல்லி சோனியாவை வற்புறுத்த வைத்திருக்கலாம் அல்லவா ?


3) இவரே பாராளுமன்றத்தில், என் தலைவனின் பெற்றோர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று முழங்கியிருக்கலாம் அல்லவா ?


4) பிரபாகரனின் பெற்றோர்களை முள்வேலிக்குள் இருந்து விடுவிக்கப் படும் வரை உண்ணாவிரதம் என்று ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கலாம் அல்லவா ?


5) பிரபாகரனின் பெற்றோர்கள் விடுவிக்கப் படாவிட்டால், எம்பி பதவி ராஜினாமா என்று ஒரு அறிவிப்பாவது செய்திருக்கலாம் அல்லவா ?


6) தன் பின்னால் இருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டி, பிரபாகரன் பெற்றோர்கள் விடுதலை செய்யப் பட வேண்டும் என்று கோரி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கலாம் அல்லவா ?


7) அய்யா நெடுமாறன், மற்றும் எதிர்க்கட்சிகளை இணைத்து ஒரு பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கலாம் அல்லவா ?






இதையெல்லாம் செய்யாமல், பிரபாகரனின் தந்தை இறந்த்தும், கருணாநிதியிடம் சிறப்பு அனுமதி பெற்று, வல்வெட்டித்துறை சென்று, இழவு வீட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, மீண்டும் இந்தியா வந்து, வல்வெட்டித்துறை எங்கும் சிங்களர்கள் என்று முதலைக் கண்ணீர் வடிக்கும் திருமாவளவன், தேசியத் தலைவர் பிரபாகரனின் தந்தை மரணத்துக்கு முழு முதல் பொறுப்பு என்று ஏன் கூறக் கூடாது ?


ராஜபக்ஷே சகோதர்ர்கள் போன்ற எதிரிகளோடு சமராடலாம். ஆனால், திருமாவளவன், ஜெகத் கஸ்பர் போன்ற, பசுத்தோல் போற்றிய கழுதைப் புலிகளிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.


ஏன் பசுத்தோல் போற்றிய கழுதைப் புலி தெரியுமா ? கழுதைப் புலி தான் அழுகிய பிணங்களைத் தின்னும்.



முறுக்கு மீசையில் இருந்தால் போதாது திருமா...

நேர்மையான நடத்தையில் வேண்டும்....

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் வேண்டும்.




சவுக்கு

மகத்தான மக்கள் தலைவன் மரணம்



ஜோதி பாசு. சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கட்சி பேதங்களைக் கடந்து, எல்லாருடனும் நேச உணர்வுடன் பழகிய ஒரு தலைவன் ஜோதி பாசு.

சிபிஎம் கட்சியை வெறுக்க பல காரணங்கள் இருந்தாலும், இதையெல்லாம் தாண்டி ஜோதி பாசு அனைவராலும் நேசிக்கப் பட்டவர். இன்று மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் என்று பல மக்கள் விரோத நடவடிக்கைகள் இன்றைய மேற்கு வங்க அரசால் எடுக்கப் பட்டு வருகிறது. மக்கள் அன்னியமாகிப் போய் உள்ளனர்.




இன்றைய சிபிஎம் முதலமைச்சர் புத்த்தேவ் பட்டாச்சார்யா போல தரகு முதலாளியாக ஜோதி பாசு என்றைக்குமே செயல்பட்டது கிடையாது. ஜோதி பாசு முதலமைச்சராக இருந்த வரை, சிங்கூர், ந்ந்திகிராம் லால்கர் போன்ற பிரச்சினைகள் பெரிய அளவில் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்த்து.




முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி போல பதவிக்காக கட்சியை தூக்கி எரிந்தவர் அல்ல ஜோதி பாசு. கட்சிக்காக பதவியை தூக்கி எறிந்தவர். 1996ல் பிரதமர் பதவி ஜோதி பாசுவை தேடி வந்த்து. இப்பதவி இவருக்கு வந்த்து சிபிஎம் என்ற கட்சிக்காக அல்ல.



ஜோதி பாசு என்ற மனிதரின் ஆளுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த பதவி. ஆனால், கட்சியை மீறி செயல்படமாட்டேன் என்று பிடிவாதமாய் பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் பாசு.



எந்த நிலையிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தவர் பாசு. கட்சியின் கொள்கைகள் குறித்த விமர்சனங்களைக் கூட கட்சி கூட்டத்தில் மட்டுமே செய்தவர் பாசு. தன்னுடைய மிகப் பெரிய ஆளுமையை தன்னுடைய சுயநலத்துக்கு ஒரு போதும் பயன்படுத்தாதவர் ஜோதி பாசு.




பாசு போன்ற தலைவரின் மறைவு இந்திய ஜனநாயகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே.




பாசு போன்ற தலைவர்கள் இல்லாத நிலையில், சிபிஎம், ஒரு முழுமையான முதலாளித்துவ நலன் பேணும் கட்சியாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.



ஜோதி பாசு என்ற மகத்தான மனிதனுக்கு, மக்கள் தலைவனுக்கு “சவுக்கு” தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.


சவுக்கு

Sunday, January 3, 2010

அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் செம்மொழி மாநாடு ?




அனாதைகளுக்கும், செம்மொழி மாநாட்டுக்கும் என்ன தொடர்பு ?

இருக்கிறது.


இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படியாவது வெற்றி பெற்றதாக காட்ட வேண்டும் என்று கருணாநிதி கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.


இந்த மாநாட்டை நடத்தி விடுவதன் மூலம் தமிழினத்தின் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் “துரோகி“ என்ற பட்டம் அழிக்கப் படும் என்ற கருணாநிதியின் நம்பிக்கையே இந்த மாநாட்டில் அவர் காட்டும் அதி தீவிர முனைப்புக்கு காரணம்.


இம்மாநாடு அறிவிப்பு வெளியான நாள் முதலே குளறுபடிதான். முதலில் உலகத்தமிழ் மாநாடாக அறிவிக்கப் பட்டிருந்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்த ஒப்புதல் கொடுக்க வேண்டியவரான நொபொரு கரோஷிமா ஒப்புதல் வழங்கவில்லை என்பதால், உலகத்தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆயிற்று.


ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்த, மாநாடு 6 மாதங்கள் தள்ளி வைக்கப் பட்டது.


அடுத்த சர்ச்சை, ஈழத் தமிழ் அறிஞர் சிவத்தம்பியின் பங்கேற்பு பற்றியது. சிவத்தம்பி பங்கேற்கப் போவதில்லை என்று பத்திரிக்கைகளில் வெளிவந்த அறிவிப்பினை அடுத்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி, தனது உளவுத்துறையை முடுக்கி விட்டு, சிவத்தம்பி வாயாலேயே தான் கலந்து கொள்கிறேன் என்று சொல்ல வைத்தார்.


அதற்கு அடுத்த நாட்களிலெல்லாம் தொடர்ந்து செம்மொழி மாநாடு பற்றி விளக்கமாக அறிக்கைகளும் கடிதங்களும் வெளியிட்டு வந்தார் கருணாநிதி.


செம்மொழி மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று அடுத்த முகாரியாக செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்தார்.

2001ல் நடந்த தேர்தலிலும், 2006ல் நடந்த தேர்தலிலும் இதுதான் எனது கடைசித் தேர்தல் என்ற கருணாநிதியின் அறிவிப்புக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே கதிதான் இந்த அறிவிப்புக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் போல, “ஓய்வு அறிவிப்பை“ விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி.


இம்மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கும் உள்ள தமிழாய்ந்த அறிஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் பதிவு செய்து வருகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு மாநாடு அமோகமாக நடக்கப் போகிறது என்ற மாயையை ஏற்படுத்த முனைப்பாக இருக்கும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் வியாழனன்று மாநாட்டில் பங்கேற்க 30.12.2009 வரை 1244 அறிஞர்கள் முன் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு.


இந்த அறிவிப்பில் விசித்திரம் என்னவென்றால் உலகெங்கும் இருந்து வெப்சைட் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும் 1244 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்களாம்.


இந்த அறிவிப்பில் வெளிநாட்டவர் 188 பேர் என்பதோடு, “நாடு தெரியாதோர்“ என்று 4 பேர் முன் பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. எந்த நாடு என்றே தெரியாமல், மாநாட்டில் முன்பதிவு செய்தால் அதை ஏற்றுக் கொண்டு அதை அறிவிப்பாகவும் வெளியிடும் கருணாநிதிக்கு மறை கழன்று விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

சாதாரணமாக ரயில்வே முன் பதிவு படிவத்தில் கூட ஏதாவது ஒன்றை சரியாக பூர்த்தி செய்யாமல் விட்டால் படிவம் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஒரு உலகத் தமிழ் மாநாட்டுக்கு பங்கேற்கப் போகும் ஒரு நபர் எந்த நாடு என்றே குறிப்பிடாமல் விண்ணப்பம் அளித்தால், அதையும் ஏற்றுக் கொண்டு அறிவிப்பாக வெளியிடுவதில் இருந்து கருணாநிதியின் desperation நன்கு தெரிகிறது.


நடக்கப் போவது தமிழ்ச் செம்மொழி மாநாடு தானே ? ஆங்கில மாநாடு அல்லவே ?






முரசொலி நாளிதழில் 03.01.2010 அன்று வெளிவந்த அறிவிப்பு


வெப்சைட்டுக்கு இணையத்தளம் என்ற தமிழ்ச் சொல் இருப்பது தமிழாய்ந்த அறிஞருக்கு தெரியாதா ? ஈமெயிலுக்கு மின்னஞ்சல் என்ற அழகான தமிழ்ச்சொல் இருப்பது மாநாடு நடத்துபவருக்கு தெரியாதா ?

இணையத்தில் பார்த்தால், புலம் பெயர்ந்த தமிழர்களும், பதிவர்களும், அழகான தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது தெரிந்திருக்குமே ?

அஞ்சல் என்ற அழகுத் தமிழ் சொல்லிருக்க தபால் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்திருப்பது "கனியிருப்ப காய் கவர்வது தானே"

நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் மக்கள் பணம் பல கோடிகள் செலவாவது தவிர வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.




சவுக்கு

Saturday, January 2, 2010

பூமியை காதலிக்கும் ஒரு கூட்டம்.



பொதுவாக வாழ்க்கையில் சமூகத்தை நேசிப்பவர்கள் குறைவு. நானும் சமூகத்தில் ஒரு அங்கம் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தாலும் தான் மற்றும் தனது குடும்பத்தை தாண்டி சிந்திப்பவர்கள் வெகு குறைவு.


எத்தனை தோல்விகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமூகத்தை தீவிரமாக நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அரசுகள் தீவிரவாதிகள் என்று அழைக்கும் நக்சலைட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். திராவிடக் கட்சிகளின் வட்டச் செயலாளர்களுக்கு இருக்கும் வசதிகள் கூட நக்சலைட் இயக்கங்களில் இருப்பவர்களுக்கு இருப்பதில்லை.

பெரும்பான்மையான நேரங்களில் உண்ண உணவு கூட கிடைக்காமல் வெறும் டீ யை குடித்து பொழுதை போக்குவார்கள். எப்போதும் காவல்துறையின் கண்காணிப்புக்கு அஞ்சி, ஓடிக்கொண்டே இருப்பதுதான் இவர்களது வாழ்க்கை.

இத்தனை நெருக்கடிகள் இருந்தாலும் இந்த சமூகத்தை நேசித்து, இச்சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற தீராத காதலால் இந்த இயக்கங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றன.


இன்றைய உலகமயமான பொருளாதாரச் சூழலில் சுயநல எண்ணங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. பிரபல அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, மனித உரிமை, சுற்றுச் சூழல் போன்ற விஷயங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கண்டால் அவர்களை “விநோதப் பிறவிகள்“ போலப் பார்க்கும் நிலைமைதான் இருக்கிறது.

பிழைக்கத் தெரியாத மனிதர்கள், பைத்தியக்காரர்கள், லூசுகள், மறை கழன்ற கேசுகள் என்ற பட்டம் வேறு. இது போன்ற சமூகத்தை நேசிக்கும் மனிதர்கள் குறைந்து, சுயநலமிகள் பெருகிப் போனதன் விளேவே இது.


மேலும், என்ஜிஓக்கள் என்று அழைக்கப் படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இன்று வெளிநாட்டு நிதி உதவியை வாங்கி லாபம் ஈட்டித் தரக்கூடிய ஒரு தொழிலாக அதை செய்து வருவதால், சமூக வேலை செய்யும் மனிதர்களும் “ஒரு வேளை பிழைப்புக்காக இதை செய்கிறானோ ? “ என்ற சந்தேகக் கண்ணோடு மற்றவர்கள் நோக்கும் சூழலும் இருக்கவே செய்கிறது.


ஆனாலும் இத்தனை நெருக்கடிகளையும் மீறி இச்சமூகத்தை நேசித்து, ஏதாவது ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ஒரு கூட்டம் இங்கேயும் அங்கேயும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

மரபை மீறி, பொதுக் கருத்தை மீறி தான் நம்பும் கருத்தை வலியுறுத்தும், அதற்காக போராடும் கலகக் குரல்கள் வரலாறு நெடுக ஒலித்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. அந்தக் குரல்கள் தான் மனிதத்தை இன்னும் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.


இவ்வாறான பொதுத் தொண்டிலோ, சமூகத்துக்கான உழைப்பிலோ ஈடுபடும் நபர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.


பிழைப்புக்காகவும், வயிற்றுக்காகவும், அன்றாட வாழ்வுக்காகவும் ஏதாவதொரு தொழிலை செய்தே ஆக வேண்டும். இத்தொழில் பாதிக்கப் படாமல்தான் சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.


பைத்தியக்காரன் என்ற பட்டத்தோடு, பிழைப்புக்காக செய்யும் தொழில் பாதிக்கப் படாமல் சமூகத்துக்காக உழைப்பதென்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.

ஒரு மனச்சோர்வான நேரத்தில், “நமக்கு மட்டும் எதற்கு இந்த தலைவிதி, எல்லோரையும் போல நாமும் இருந்து விட்டால் என்ன “ என்ற எண்ணம் தோன்றவே செய்யும். ஆனால் இவ்வெண்ணத்தையும் மீறி சமூகத்துக்காக உழைக்கும் அனைவரும் போற்றுதலுக் குரியவர்கள் மட்டுமல்ல, சமூகத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர்கள்.

சமூகத்துக்காக உழைக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும், தங்களுக்கென, தங்களுக்கு உடன்பாடான, மனதுக்கு உகந்த ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் பணியாற்றுவார்கள்.

ஒரு சிலருக்கு மனித உரிமை, சிலருக்கு ஊழல் எதிர்ப்பு, சிலர் மாற்றுத் திறன் கொண்டவரோடு பணியாற்றுதல், சிலர் ஆதரவற்ற அனாதைகளோடு பணியாற்றுவர், சிலர் முதியோருக்காக பணியாற்றுவர். சிலர் சுற்றுச் சூழலுக்காக உழைப்பார்கள்.


அவ்வாறு சுற்றுச் சூழலுக்காக உழைக்கும் ஒரு தன்னார்வக் கூட்டம் தான் “பூவுலகு“. ஒரு ஆண்டாக இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருந்த இதழ், இம்மாதம் முதல் மாத இதழாக வெளிவர இருக்கிறது.

இந்த இதழின் ஒவ்வொரு பக்கத்திலும், இந்த பூமியை வெறித்தனமாக காதலிக்கும் உணர்வு அப்பிக் கிடக்கிறது.


33வது சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகு குழுவினர் ஒரு அரங்கு அமைத்துள்ளனர். இவ்வரங்கின் பெயரே “பூவுலகின் நண்பர்கள்“ என்ற அழகான பெயரோடு அமைந்துள்ளது.



அரங்கின் நுழைவாயிலிலேயே, தூக்கணாங் குருவியின் கூட்டை தொங்கவிட்டு, தங்களின் கவித்துவமான ரசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.



இந்த அரங்கத்தில் கூட்டத்துக்கும் குறைவில்லை. பூவுலகு இதழ் நடத்துவதனால் பெரும் அளவில் வருமானம் ஒன்றும் கொட்டவில்லை என்றாலும் புத்தகக் கண்காட்சியில் அரங்கு ஒன்று அமைத்து சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற பிடிவாதத்தோடு, கடுமையாக உழைக்கும் இந்தக் கூட்டத்தினர் பாராட்டுக்கு உரியவர்களே. இவர்கள் பணி மெச்சத் தக்கது.

இந்த கண்காட்சியில் பூவுலகு இதழுக்கு சந்தா பெருகினால் இதழை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்தனர்.

சுற்றுச் சூழலில் ஆர்வம் இருக்கும் பதிவர்கள், புத்தகக் கண்காட்சியில் அமைந்துள்ள 233வது அரங்குக்குச் சென்று பூவுலகு இதழுக்கு சந்தா செலுத்தி, பூமியை நேசிக்கும் இந்தக் கூட்டத்திற்கு உற்சாக அளிக்குமாறு “சவுக்கு“ சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.

வாழ்க நண்பர்களே. தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்களுக்கு சவுக்கின் வாழ்த்துக்கள்.


சவுக்கு