Flash News

Thursday, August 19, 2010

சட்டம் மற்றும் ஒழுங்கீனம்.


இது என்ன சட்டம் மற்றும் ஒழுங்கீனம் என்று பார்க்கிறீர்களா ? சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் ஒழுங்கீனத்தைப் பற்றி எழுதும் போது இந்த தலைப்பு பொருத்தம் தானே ?

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் பற்றித்தான் இந்தப் பதிவு. இந்த ராதாகிருஷ்ணன் கழுவும் மீனில் நழுவும் மீன். பெரிய தில்லாலங்கடி.



இவரைப் பற்றி குறிப்பிடும் அதிகாரிகள் ஸ்னூக்கர் விளையாட்டோடு இவரை ஒப்பிடுவார்கள். ஸ்னூக்கர் விளையாட்டில், குச்சியால் வெள்ளைப் பந்தை தட்டினால், அது மற்றொரு பந்தை தட்டுமே அது போல தன்னுடைய எதிரியை இவர் தாக்கினால், பாதிக்கப் பட்டவர் இவரிடமே சென்று முறையிடுவது போல இருக்கும் இவர் நடவடிக்கைகள் என்று கூறுவார்கள்.

இந்த ராதாகிருஷ்ணன் மிகவும் கவலைப் படுவது தனது இமேஜுக்கு. இந்த இமேஜுக்காக ரொம்பவும் மெனக்கெடுவார். தன்னை ஒரு மிகச் சிறந்த அறிவாளியாகவும், சிந்தனையாளர் போலவும் காட்டிக் கொள்வார்.

1983ம் ஆண்டு நேரடி நியமனத்தில் யுபிஎஸ்சியால் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார் ராதாகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் தான் இவரது சொந்த ஊர். நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.

இவருக்கு முனியசாமி மற்றும் கோவிந்தராஜ் என்று இரண்டு தம்பிகள். இவர்கள் தம்பிகள் அல்ல, தங்கக் கம்பிகள்.

பணியில் சேர்ந்த புதிதில், இந்த ராதாகிருஷ்ணன் போட்ட சீன் சொல்லி மாளாது. இவர் எஸ்பியாக இருக்கும் போது காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு செல்வார். அப்போது அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். ஏன் என்று கேட்டால், அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் குடித்தால் அந்த காவல்நிலையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாது என்பதாலாம். எப்பூடி…. ?
இதுதான் இவரது இஷ்டைல். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றும் போது இரவு நேரத்தில் எஸ்பி பங்களாவுக்கு வெளியே ஒரு லுங்கி அணிந்து கொண்டு வெறும் உள் பனியனோடு பொதுமக்கள் பார்க்கும் வகையில் பைல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த பனியன் ஓட்டை ஓட்டையாக இருக்கும். இது எதற்கென்றால் “அய்யா எவ்ளோ எளிமையானவரா இருக்காரு ? “ என்று பொதுமக்களும், காவலர்களும் பேச வேண்டும். இது போன்ற வெற்றுத் தற்பெருமைகளுக்கு ராதாகிருஷ்ணன் பெயர் போனவர்.

இவரைப் பற்றிய ஒரு கண்றாவியான துணுக்கு செய்தி ஒன்று உண்டு. இவர் தென் மாவட்டம் ஒன்றில் எஸ்பியாக பணியாற்றிய போது, ஒரு காவலரை அனைவர் முன்பும் மிகுந்த அவமானப் படுத்தி விடுகிறார். அவமானப் படுத்தியதோடல்லாமல், அவருக்கு மெமோவும் கொடுத்து விடுகிறார். அவர் சாதாரண காவலர். நேரடி நியமனத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரியை பகைக்க முடியுமா ? அந்த காவலர் என்ன செய்கிறார்… அலுவலகத்துக்கு மற்ற ஊழியர்கள் வரும் முன்பு வந்து ராதாகிருஷ்ணன் மேசையில் மலத்தை வைத்து விடுகிறார். ராதாகிருஷ்ணனுக்கு செய்தது யார் என்று தெரிந்தாலும் வெளியில் சொல்ல முடியாமல் மூடி மறைக்கிறார்.

ராதாகிருஷ்ணன் தனது மாமூல் வாழ்க்கையை துவக்கியது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருக்கையில். அங்கே சிறப்பு பிரிவு ஆய்வாளர் மூலமாக முதன் முதலாக வசூல் தொடங்குகிறது. பிறகு திருச்சியில் டிஐஜியாக மாறுதலில் செல்கிறார். அதன் பிறகு, இந்தயாவையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு நடக்கிறது.

இந்த குண்டு வெடிப்பை அடுத்து, ராதாகிருஷ்ணன் கோவை மாநகர ஆணையாளராக நியமிக்கப் படுகிறார். நியமிக்கப் பட்டவுடன், இந்த மாவட்டத்திற்கு எனக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்று முதல்வரிடம் கூற, அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது. இவருக்கு இரண்டு திறமையான, நேர்மையான எஸ்பிக்கள் நியமிக்கப் படுகின்றனர். இந்த இரண்டு எ ஸ்பிக்களும், ஏறக்குறைய நான்கு மாதங்கள், தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி கடுமையாக பணியாற்றி கோவை நகரை அமைதிக்கு கொண்டு வருகின்றனர். கோட்டை மேடு உள்ளிட்ட இடங்களில் பதுக்கப் பட்டிருந்த ஆயுதங்கள் மற்ற பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு, கோவை நகரம் குண்டு வெடிப்பை மறந்து சகஜ நிலைக்கு திரும்புகிறது.

இந்த இரண்டு எஸ்பிக்களும் இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த போது ராதாகிருஷ்ணன் என்ன செய்து கொண்டிருந்தார் ? அவர் தமிழகத்திலேயே முதன் முறையாக “வார மாமூலை“ அறிமுகப் படுத்தி வசூல் செய்து கொண்டிருந்தார். அதற்கு முன், கோவை மாநகரில் பணி நியமனங்கள் ராதாகிருஷ்ணனின் தேர்வு என்று ஆகிவிட்டதால், இரண்டு தங்க கம்பிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா ? அந்த இரண்டு கம்பிகளும் கோவையில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் போஸ்டிங்குக்கு இவ்வளவு ரேட் என்று ஏலம் விட்டு வசூலை குவிக்கின்றனர். இந்த போஸ்டிங்குகள் அனைத்தும் மதுரையில் இருந்து நடத்துகின்றனர். போஸ்டிங் தேவைப்படும் ஆய்வாளர்களும், டிஎஸ்பிக்களும் மதுரை சென்று இவர்களுக்கு தேவையான தொகையை கொடுத்த பின், கோவையில் கோப்பு கையெழுத்தாகும்.

விருதுநகரில் ஒரு சாதாரண பிலிம் டிஸ்டிரிப்யூட்டராக இவர்கள் இருவரும் இருந்தனர். சினிமா விநியோகம் என்றால் பெரிய அளவில் இல்லை. பழைய எம்ஜிஆர் படங்கள், சிவாஜி படங்கள் போன்றவற்றை டூரிங் டாக்கீசில் வெளியிடும் விநியோகஸ்தர்கள். ராதாகிருஷ்ணன் கோவை ஆணையராக ஆன ஒரு வருடத்தில், ஷங்கரின் இந்தியன் படத்தை மதுரை நகரம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கும் அளவுக்கு வளர்கின்றனர். 98ம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் வருமானவரி கட்டும் அளவுக்கு வளரவில்லை. ஆனால் 98க்கு பிறகு பெரிய தொழில் அதிபர்களாக ஆகின்றனர்.

கோவையிலிருந்து தொழில் அதிபர்கள், மில் முதலாளிகள், கோவையிலிருந்து மதுரை சென்று மாமூலை கட்டி விட்டு வருவார்கள். மாமூல் கொடுப்பதல்லாமல், இதை மதுரை வரை சென்று வேறு கொடுத்து விட்டு வர வேண்டுமே என்று அவர்கள் பல பேரிடம் புலம்புவது உண்டு.

இந்த வசூல் வேட்டையை முடித்த ராதாகிருஷ்ணன் சென்னை வடபழனியில் தனது மாமனார் பெயரில், பெரிய பங்களாவை வாங்குகிறார்.

கோவையில் கமிஷனராக ராதாகிருஷ்ணன் பணியை மெச்சி கருணாநிதி சட்டப் பேரவையில் “ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருப்பதால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பேசினார். இதுதான் ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.

கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பிறகு ராதாகிருஷ்ணனின் தோரணையே மாறிப் போகிறது. மிகுந்த ஆணவம் கொண்டு அனைவரையும் சகட்டு மேனிக்கு எடுத்தெறிந்து பேசத் தொடங்குகிறார். கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பின்னால், உயர் அதிகாரிகளே ராதாகிருஷ்ணனைப் பார்த்து பம்முகிறார்கள். இதனால் ராதாகிருஷ்ணனின் ஆணவம் கூடுகிறது.

ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த துணை ஆணையர்களில் ஒருவர் “என்ன சார். நீங்க லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு சொல்றீங்க. ஆனா உங்க பேரச் சொல்லி உங்க தம்பிங்க ஊரு பூரா வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க“ என்று நேரடியாக சொல்லி விடுகிறார். அவ்வளவுதான். அந்த துணை ஆணையருக்கு மெமோ மீது மெமோ. தினமும் ஐந்து மெமோ. வேறு வழியின்றி இரண்டு துணை ஆணையர்களும் மாறுதல் பெற்று கோவையை விட்டு வெளியேறுகின்றனர்.




ராதாகிருஷ்ணன் கோவையில் சம்பாதித்ததே இரண்டு தலைமுறைக்கு போதும் என்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்கு வருகிறது. வந்ததும் ராதாகிருஷ்ணன் ட்ரெயினிங் டிஐஜியாக இருக்கிறார். சிறிது காலம் கழித்து ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியாக மாறுதலில் வருகிறார்.

பல ஆண்டுகளாக ஒழுங்காக பணியாற்றிக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை நாசமாகப் போனது ராதாகிருஷ்ணன் வந்த பிறகுதான். இது பற்றியும், இப்போது ராதாகிருஷ்ணனும் இரண்டு தங்க கம்பிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விபரங்களும், இவர் ஜாபர் சேட்டுக்கே எப்படி அல்வா கொடுத்தார் என்ற விபரமும் விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக எக்ஸ்க்ளுசீவ்.
சவுக்கு

13 comments:

Anonymous said...

டியர் சவுக்கு! கொஞ்சம் சாட்சிகளுடன் எழுதினால் நன்றாக இருக்கும்..

Anonymous said...

well savukku.keep it.but need more.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்.
//

ஒரு வேளை மற்றவர்களுக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்திருப்பாரோ?..

karthee said...

இந்த கருப்பு(காக்கி)ஆடுகளின் தோலை,இதுவரை யாரும் இப்படி உரித்தில்லை எனும் அளவுக்கு வெளு வெளுவென வெளுத்து கட்டுகிறீர்கள்.வாழ்த்துக்கள்

தமிழ் உதயன் said...

அன்புள்ள சவுக்கு அவர்களுக்கு,

நீங்கள் சமுதாயத்திற்க்கு ஆற்றும் பணி நிரம்பவும் ஆபத்து மிகுந்தது....

உங்களுக்கு நான் சொல்லவேண்டியது இல்லை... காவல்துறையினர்தான் சாட்சிகள் கேட்கிறார்கள் உங்கள் உண்மை எழுத்துக்கு... எனவே இந்த சாட்சி பூச்சி எல்லாம் யார் என்று எழுதவேண்டாம்...

Anonymous said...

மொதல்ல ஜாபர் ...இப்ப ராதாகிருஷ்ணன்
ஆட்சி மாறினா சங்குஊத வேண்டியதுதான். ஆனாலும் ஜாபர் ஒரு இன்டர்நேஷனல் கேடின்னு சொன்னா மிகையாகது.ஜாபர் சேட்டுக்கு ரெண்டு இல்லேன்னா மூணு சங்கு ஊதணும்...இல்லேன்னா சாதாரண இன்ஸ்பெக்டரும் நானும் ஒண்ணா அப்டின்னு கேப்பாரு.. :D

prabhu said...

excellent work..

Anonymous said...

Kumudam-Gyaani-Jafer Sait- The truth is getting uncovered now :) hope u'll bring the katta panchaayathu happened behind screens!
சென்னை: குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதி க்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.

குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.

ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். ரூ 25 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்ததாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

இதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்து வந்தது.

இருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

-Vazhuthi

Anonymous said...

சங்கர் இந்த பெயர் கொஞ்ச மாதங்களுக்கு முன் பத்திரிக்கை உலகை கலக்கியது. தமிழகத்தையே உலுக்கிய டெலிபோன் ஒட்டுக் கேட்பு வழக்கில் திமுகவின் அமைச்சர் பூங்கோதை நடத்திய அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டார் என்று கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் இந்த சங்கர். ஊழல் ஒழிப்புத் துறையின் உயரதிகாரியான உபாத்தியாயாவின் அலுவலகத்தில் வேலை செய்த சங்கர், அதிகார பீடங்களின் ஊழல்களின் குணத்தை போட்டுடைத்தவர்.

எக்மோரில் இருக்கும் கோர்ட்டுக்கு அவரை அழைத்து வந்தார்கள். தப்பு தப்பு இழுத்து வந்தார்கள் என்பது தான் சரி.. குழுமி இருந்த ஊடகவியலாளர்களுடன் நானும் நின்றிருந்தேன். சங்கரின் மேலுதடு வீங்கிப் போய் இருந்தது. காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, அவரிடம் மைக்கை நீட்டினேன்.(னோம்)
‘நான் எந்த தப்பு செய்யவில்லை. தப்பு செய்தவங்களை அம்பலப்படுத்தியிருக்கேன்.என்ன தண்டனை வேணும்னாலும் கொடுக்கட்டும். இது தப்புன்னா.. இதை நான் செஞ்சுகிட்டே இருப்பேன்’என்று அவர் முடிக்கும் முன்னரே தள்ளிக்கொண்டு போனது காவல்துறை.

அவர் பணி நீக்கம் செய்யப்படதும்.., எல்லோரும் அவரை மறந்து போனோம். சென்னை உயர்நீதி மன்றத்தின் பக்கம் போகும் பேதெல்லாம் வழக்குரைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சங்கரை பார்த்திருக்கிறேன். அவர் கேஸு போய்கிட்டு இருக்கு அதனால தான் இங்க அடிக்கடி வர்றார் என்றார் ஒரு நண்பர்.

இன்று சவுக்கு என்ற பெயரில் பதிவுகளை வலையேற்றியமைக்கு.., வழிப்பறி செய்ததாகவும், கத்தியைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படிருப்பதாக அறிகிறேன்.

நல்ல விசயம். ஆதாரங்களை அள்ளிக்கொடுத்து, ஏமாற்றுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடு- என்று எழுதுகிறவன் தப்பு செய்கிறவன். அவனை அள்ளிக்கொண்டு போய் நையப்புடைப்பீர்கள். ஆனால்.. ஆதாரத்தில் சொல்லப்படிருக்கும் விசயங்களை எப்படி எளிதாக மறந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை.

உங்கள் மொழியில் சொல்வதென்றால்.. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்….” மீதியை நீங்களே முடித்துக்கொள்ளுங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே..! ”தீதும், நன்றும் பிறர் தர வாரா…” என்ற கணியனின் வார்த்தைகளுக்கு உங்களுக்கு பொருள் தெரிந்திருக்கும். தேர்தல் வேறு வருகிறது. வேறு என்ன நான் சொல்ல.

ஒரு மூத்த பத்திரிக்கையாளரின் ஆட்சியில் உண்மையை எழுதியதற்காக கொடுக்கப்படும் பரிசு கண்டு பூரித்துப் போய் இருக்கிறேன் நான்.
http://blog.balabharathi.net/2010/07/22/%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81/

Anonymous said...

Sir, Once u have written that Jeyalalitha never insulted the officers with High Education profile. From that I understood your scale on Karunanidhi, but Good work... keep it up

Anonymous said...

//ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும், காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்//

சரி ரெம்ப நல்லவர்னு பேர் எடுதாசினா அத்த maintain பண்றதுக்கு இந்த மாதிரி dialog எல்லாம் தேவை தான்.
இது தெரியாத பய புள்ளைகக குறுக கேள்வி கேட்டு , ஆப்பு மேல உக்காந்துடாங்க போல....

Anonymous said...

Ayya, TAMIL NADU thai Rasathi ammal patri neraya irukkunkale. Eluthungalen.

rara said...

ayya,parisutha thalavi amma pathi edhuvum vendaam.

Post a Comment