Flash News

Sunday, August 8, 2010

பாதுகாப்புக்கே பாதுகாப்பு.

அது என்ன ரவுடிக்கே ரவுடி, கில்லாடிக்கு கில்லாடி போல, பாதுகாப்புக்கே பாதுகாப்பு ? இருங்கள் விளக்கமாக சொல்லுகிறேன். ஒரு நபருக்கு சில நபர்கள் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த சில நபருக்கு அந்த ஒரு நபர் பாதுகாப்புக் கொடுத்தால் ? குழப்பமாக இருக்கிறதா. விளக்கமாகச் சொல்லுகிறேன்.

ஒரு மன்னருக்கு மூன்று பேர் பாதுகாப்புத் தருகிறார்கள். அந்த மூன்று பேருக்கும், மூன்று பொற்கிழிகளைக் கொடுத்து, அந்த மன்னர் அவர்களின் வாழ்வுக்கு பாதுகாப்பு தந்தால் ? இது ஏதோ மன்னர் காலத்தில் நடந்த கதை அல்ல.

தற்காலத்தில், சுதந்திர இந்தியாவில், ஜனநாயகம் உள்ளது என்று கூறிக்கொள்ளும் தமிழகத்தில்தான் நடந்திருக்கிறது.

தமிழக முதலமைச்சராக உள்ள கருணாநிதி, தன்னுடைய பாதுகாவலர்களாக உள்ள, மூன்று காவல்துறை ஆய்வாளர்களுக்கு, 2 கோடி மதிப்புள்ள வீட்டு மனையை வெறும் எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கு கொடுத்திருக்கிறார். எதற்காக கொடுத்திருக்கிறார். தன்னை பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்காக.



இவர்கள் மூன்று பேர் மட்டும்தான் பார்த்துக் கொள்கிறார்களா, இவரின் கான்வாயின் முன்னும் பின்னும் செல்லும் வண்டிகளில் உள்ள மற்றவர்கள் கருணாநிதியை பாதுகாப்பதில்லையா என்றால் அவர்களும் பாதுகாக்கிறார்கள்தான். ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத இந்தப் பொற்கிழி இந்தப் பாண்டியனுக்கும், வினோதனுக்கும், கணேசனுக்கும் மட்டும் ஏன் என்பதை, கருணாநிதிதான் விளக்க வேண்டும்.

சரி, இவர்கள் நன்றாக வேலை செய்து, கருணாநிதியை நன்றாக பாதுகாக்கிறார்கள் என்றால், கோபாலபுரம் வீட்டையோ, சிஐடி காலனி வீட்டையோ அல்லவா எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் ? மக்களின் சொத்தை எதற்காக இந்த மூவருக்கும் கொடுக்க வேண்டும் ?

ஏனென்றால், மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.

மூன்று பாதுகாவல் அதிகாரிகளில், கணேசனுக்கும், வினோதனுக்கும் மட்டும் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்“ என்ற பிரிவின் கீழ் இரண்டு க்ரவுண்டு நிலம். பாண்டியனுக்கும் மட்டும் மனைவி மீனா பெயரில் வீட்டு மனை (பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா).

சரி, இந்த இரண்டு பேர் மட்டும் தான் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால், தமிழக அரசில் பணியாற்றும், மற்ற ஊழியர்கள் எல்லாம் அப்பழுக்குள்ள ஊழியர்களா ?

அவர்களும் அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள் என்றால் அவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் நிலம் ஏன் வழங்கப் படவில்லை என்ற அதிகப்பிரசங்கி கேள்விகளையெல்லாம் சவுக்கு மாதிரி கேட்டுக் கொண்டு இருக்கக் கூடாது.




கருணாநிதியின் இந்த வள்ளல்தன்மை, இப்போது வந்ததல்ல. 1989-90ல் தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, அவருக்கு அப்போது பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த, உபேந்திரன் மற்றும் பிஎஸ்.சேதுராமன் ஆகிய இரண்டு ஆய்வாளர்களுக்கும், அண்ணா நகரில் தலா ஒரு க்ரவுண்டு நிலம் வழங்கியவர்தான் இந்தக் கருணாநிதி. அவர்கள் இருவரும் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

கருணாநிதி எப்படிப் பட்ட நபர் என்பதற்கு ஒரு உதாரணம். 1989ல் திமுக ஆட்சி நடக்கிறது. அப்போது பி.எஸ்.சேதுராமன் பாதுகாவல் அதிகாரி இருக்கிறார். அவரிடம் இன்னொரு போலீஸ் அதிகாரி போனில் உரையாடுகிறார்.

“என்ன சேதுராமன் எப்படி இருக்கீங்க ? “

“நல்லா இருக்கேன் சார். “

“என்னங்க ஜெயலலிதா வீட்ல இருந்து ராஜினாமா கடிதம் எடுத்தாங்களாமே…. உண்மையா ? “

“ஆமா சார். தலைவர் கரெக்டாதான் சார் பண்ணார். இந்த தொரை டிஜிபி இருக்கான்ல.. அவன்தான் உள்ள பூந்து கெடுத்து உட்டுட்டான் சார். இல்லன்னா எப்பபோ அந்த அம்மா போயிருக்கும் சார்“

ஜெயலலிதா, 6 மாதத்துக்கு ஒரு முறை, பால்கனியில் மட்டும் காட்சி தரும் காலம் அது.

ஒரிரு நாள் கழித்து சேதுராமனை அழைத்த கருணாநிதி, மேற்கூறிய உரையாடலை சேதுராமனிடம் ஒரு டேப்பில் போட்டுக் காட்டுகிறார். அதிர்ந்த சேதுராமன் திருதிருவென விழிக்கிறார்.

“என்னப் பத்தில்லாம் நல்லாதான் பேசிருக்க. துரை உனக்கு உயர் அதிகாரியில்ல ? இப்படியா மரியாதை இல்லாம பேசுறது ? “


“இனிமே இப்படிப் பேசாத. போ. “ என்றார். இதுதான் கருணாநிதி. கூடுதல் தகவல், அந்த சேதுராமன், கருணாநிதியின் தூரத்து உறவினர்.

பாண்டியன், வினோதன், கணேசன் ஆகிய மூன்று பேரும், “ட்ராலி பாய்ஸ்“ என்று பிரபலமாக அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் மூவருக்கும் ஏன் இந்தப் பெயர் வந்தது என்று வரலாற்று ஏடுகளை ஆராய்ந்ததில் சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. சவுக்கு வாசகர்களுக்கு தெரிந்தால் கூறவும்.





இந்த மூவருக்கும், தலா 4780 சதுர அடிக்கு, முகப்பேர் ஏரித் திட்டம், உயர் வருவாய்ப் பிரிவில் வீட்டு மனை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் கருணாநிதி. இந்த வீட்டு மனை ஒதுக்கீட்டிற்கு, அரசு நிர்ணயித்த விலை 75 லட்ச ரூபாய். இந்த 75 லட்ச ரூபாயை இவர்கள் மூவரும் ஒரே நாளில் செலுத்துகிறார்கள்.

மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெரும் ஒருவர் எப்படி 75 லட்ச ரூபாய் செலுத்த முடியும் என்ற சந்தேகம் எழுந்து, FACT இந்தியா என்ற ஊழல் ஒழிப்பு அமைப்பு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு செப்டம்பர் 2009ல் புகார் ஒன்றை அனுப்புகிறது. நேர்மையான அதிகாரி என்று பரவலாக அறியப்படும் ராமானுஜத்திடம் அந்தப் புகார் நேரில் கொடுக்கப் படுகிறது. அந்த நேர்மையான (?????) ராமானுஜம்,(சார் உங்களைப் பற்றி சவுக்கு தனியே எழுதும்) அந்தப் புகாரின் மேல் மூன்று மாதங்கள் படுத்து உறங்குகிறார். துயில் கலைந்தவுடன், டிசம்பர் 2009ல், அந்தப் புகார் நம்மிடம் இருந்தால் ஆபத்து, என்று கருதி, இதை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புகிறார். (ஊழல் புகாரையெல்லாம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்புரீங்களே நீங்க என்ன போஸ்ட்மேனா ராமானுஜம் சார் ? இந்த சவுக்கோட பதிவையும் ஒரு ப்ரின்ட் எடுத்து லத்திக்கா சரணுக்கு அனுப்புங்க சார்.)

இத்தோடு இந்தக் கதையில் இடைவேளை. இப்போ ஃப்ளாஷ் பேக். 2008ம் ஆண்டு மார்ச் மாதம்தான் இந்த மூவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. அப்போது ஜாபர் சேட்டிடம், இந்த மூவரும் இந்தத் தகவலைத் தெரிவிக்க, அவர்களிடம் சிரித்துப் பேசி விட்டு சாதாரண இன்ஸ்பெக்டர் பயலுங்களுக்கு ரெண்டு கோடி மதிப்புள்ள வீட்டு மனையை கொடுத்தால், ஐஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் என்ன வித்தியாசம் என்று பொருமுகிறார்.

அவரிடம் நெருக்கமான அந்த ஆன்டெணா அதிகாரியிடம் ஜாபர் சேட், “Has the CM gone insane ? Why is he allotting such prime property to these bloody fellows ? They are not worth it. If these fellows are rewarded like this, what respect will they have for IPS officers ? “ என்று கூறுகிறார்.




ஜுன் 2008 வாக்கில், மருத்துவர் ராமதாஸ் அவருடைய தொலைபேசியை ஒட்டுக் கேட்டு விட்டார் என்று, ஜாபர்சேட் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார். இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் மூலமாக முயற்சி செய்கிறார் ஜாபர் சேட்.



பாண்டியன் சார். 2008 ஜுன் மாதத்தில், மக்கள் டிவியில, உங்க மூணு பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கப் பட்டிருக்குன்னு செய்தி வந்தது தெரியுமா ? அது மக்கள் டிவிக்கு எப்படி தெரியும்னு நெனைக்கிறீங்க ?

சவுக்கு, மருத்துவர் ராமதாசை சந்தித்த போது, ராமதாஸ் மூன்று அரசாணைகளை காண்பித்து, இது உண்மையான ஆவணமா எனக் கேட்டார். அந்த அரசாணைகள் உங்கள் மூவருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்த ஆவணங்கள். சவுக்கு உண்மையான ஆவணங்கள்தான் என உறுதி செய்ததும் “அந்தப் பய, இதெல்லாம் கொடுத்தா நான் அவன மன்னிச்சுடுவேன்னு நெனைக்கிறான். ஆனா, நான் அவன உட மாட்டேன்“ என்று கூறினார்.

பாண்டியன் சார். மக்கள் டிவியில் இந்தத் தகவல் ஜுன் 2008ல் எப்படி வந்தது என்று இப்போது தெரிகிறதா ? என்னாதான் நெருங்கிப் பழகினாலும், அவங்க ஐபிஎஸ்தான், நீங்க சாதாரண காண்ஸ்டபிள் தான் சார். அதை மறந்துடாதீங்க. உங்கள என்னைக்குமே ஜாபர் சேட் மதிக்க மாட்டார் சார்.

ஃப்ளாஷ் பேக் முடிந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது.

FACT இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ட்ராலி பாய்ஸ் பற்றிய புகாரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் விசாரணை நடத்த உத்தரவிடும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

வழக்கு விசாரணை தொடங்குகிறது. நீதிமன்றம் முழுவதும் வழக்கறிஞர்களை விட உளவுத்துறையினர் அதிகமாக இருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து சுதாகர் என்ற ஆய்வாளர் அரசு வழக்கறிஞருக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்.

மனுதாரர் சார்பில் ராதாகிருஷ்ணன் என்ற சிங்கம் தன் கர்ஜனையை தொடங்குகிறது. ஒரு புகாரை பதிவு செய்து விசாரணை நடத்த மறுத்ததற்காக நீதிமன்றத்தை அணுக வேண்டிய ஒரு அவலச் சூழல் உள்ளது என்று தன் வாதத்தை தொடங்கினார்.



உடனே அரசு வழக்கறிஞர் சரவணன், இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். சரவணன் சார், மனுதாரர் செல்வராஜை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? அவர் எப்படி இருப்பார் என்று தெரியுமா ? அப்புறம் எதற்கு சார் இப்படி குதிக்கிறீர்கள். எவ்வளவு குதித்தாலும், நீங்கள் எந்தக் காலத்திலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகவே முடியாது.

சவுக்கு அது போன்ற ஒரு துன்பியல் சம்பவம் நடப்பதை அனுமதிக்காது. அரசு வழக்கறிஞராக நீங்கள் அந்த நீதிமன்றத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற விபரங்கள் எல்லாம் சவுக்குக்கு தெரியும்.

விளம்பரத்திற்காக என்று சரவணன் கூறியதும், சிங்கம் சீறியது. அரசு வழக்கறிஞருக்கு, இது போலக் கூறுவதற்கு உரிமையில்லை. அவர் தனது வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும் என்று உரத்த குரலில் கூறினார்.

நீதியரசர் சி.டி.செல்வம் ராதாகிருஷ்ணன் அமைதியாக இருங்கள் நீங்கள் ஏன் கோபப் படுகிறீர்கள், என்ற கூறி விட்டு, ராதாகிருஷ்ணன் தனது வாதத்தை தொடங்குவதற்கு முன்பே, உங்களிடம் அவர்கள் 75 லட்ச ரூபாயை கட்டியிருக்கிறார்கள் என்பதைத் தவிர உங்களிடம் வேறு ஆதாரங்கள் இல்லை. You cannot go on a fishing expedition I am going to dismiss the petition என்று கூறினார்.

75 லட்ச ரூபாயை கட்டியதற்கான ஆதாரமும், அதைக் கட்டிய அரசு ஊழியரின் மாத ஊதியம் 10,000 என்பதையும் மீறி என்ன எதிர்ப்பார்க்கிறார் நீதியரசர் என்பது வாதாடிய ராதாகிருஷ்ணனுக்கு புரியவில்லை.

அவர், நீங்கள் மனுவை தள்ளுபடி செய்யுங்கள், ஆனால் எனது வாதத்தை பதிவு செய்தவுடன் தள்ளுபடி செய்யுங்கள் என்று கூறினார்.

வேறு வழியின்றி, சரி வாதிடுங்கள் என்று கூறினார் நீதியரசர். சிங்கம் தனது கர்ஜனையை தொடங்கியது. லஞ்ச ஒழிப்புத் துறையின் பணி என்ன, ஒரு புகார் வந்தால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கையில் உணவு இடைவேளை வந்தது.

மதியம் வழக்கு தொடங்கியதும் வழக்கமாக அவசர வழக்க குறித்த நீதிபதியிடம் முறையிடும் நடைமுறையின் படி, வழக்கறிஞர்கள், நீதியரசரிடம் தங்களது வழக்கு குறித்து முறையிட தொடங்கினார்கள். ஒரிருவரை கேட்ட நீதியரசர், நான்காவது நபர் தொடங்கியதும், சமீப காலங்களாக, நீதிமன்றத்தின் நேரத்தை மூன்றாவது நபர்கள் தேவையின்றி வீணடிப்பது நடந்து வருகிறது, இது தவிர்க்கப் பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அடுத்து ஒரு வழக்கறிஞர் பேச தொடங்கியதும், நீங்கள் இப்படியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நான் வழக்கு விசாரணையை எப்படிப் பார்ப்பது என்று கோபப் பட்டார். அனைவரும் அமைதியானார்கள்.

சிங்கம் தனது கர்ஜனையை மீண்டும் தொடங்கியது. ஒரு குடிமகன், ஒரு புகாரை பதிவு செய்யக் கூட நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட நேரிடும் ஒரு அவலம் இந்த நாட்டில்தான் உண்டு. பத்தாயிரம் ரூபாய் ஊதியம் பெரும் மூன்று அரசு ஊழியர்கள் ஒரே நாளில் எப்படி 75 லட்சம் கட்டினார்கள். அவர்கள் கடன் வாங்கிக் கட்டியிருக்கலாம், தங்களின் பூர்வீகச் சொத்தை விற்றுக் கட்டியிருக்கலாம், நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விபரம் விசாரணை செய்தல்லவா கண்டிறியப் பட வேண்டும் ? விசாரணையே நடக்காமல் ஒரு வருடமாக அமைதியாக இருந்தால் எதையோ மறைக்கிறார்கள் என்று தானே பொருள் ? லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை எப்படி நடத்த வேண்டும் என்று கூறும் Vigilance Manual புத்தகத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே அதை ஏன் லஞ்ச ஒழிப்புத் துறை பின்பற்றவில்லை என்று கூறி விட்டு, உச்சநீதிமன்றம் ஊழல் புகாருக்கு ஆளானவர்களில் பாரபட்சம் காட்டாமல் அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.



ஒன்றரை மணி நேரம் வாதிட்டு முடித்தபின், அரசு வழக்கறிஞர் ஒரு இரண்டு பக்க அறிக்கையை நீதியரசரிடம் கொடுத்தார். அந்த அறிக்கையில், மனுதாரரின் புகார் டிஜிபியிடம் அனுப்பப் பட்டதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய டிஜிபி இவர்கள் இன்னொருவரோடு கூட்டு ஒப்பந்தம் போட்டு அதேன் மூலம் பணம் செலுத்தியிருப்பதால், இவர்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்த முகாந்திரம் இல்லை என்று கூறியிருப்பதாக தெரிகிறது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தானே அறிக்கை நீதியரசரிடம் கொடுக்கப் பட்டது. அதற்கு முன்பே இதை தள்ளுபடி செய்கிறேன் என்று ஏன் நீதிபதி சொன்னார் ? என்று கேள்வி கேட்டு நீதிமன்றத்தின் உள்விவாகரங்களுக்குள் தலையிட்டீர்கள் என்றால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி விடுவீர்கள் சொல்லி விட்டேன். சவுக்கு வாசகர்களை பாதுகாக்கும் பொறுப்பும், சவுக்குக்கு உண்டு.

இருவரும் வாதங்களை முடித்த பின் நீதியரசர், தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்த படி குனிந்து இரண்டு நிமிடங்கள் இருந்தார். பிறகு தலையை கோதினார். (நீதிக்கு தலைவணங்கு என்பதை சிம்பாலிக்கா சொல்றாரோ ?) பிறகு, டிஜிபி விசாரணை நடத்தி முடித்து விட்டதால், அதன் அடிப்படையில், இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

இந்த சிறப்பான தீர்ப்பு அளித்த நீதியரசரை யார் என்று தெரிந்து கொள்ள சவுக்கு வாசகர்கள் ஆவலாக இருப்பீர்கள் தானே ? இதோ அந்த நீதியரசர்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால், அதை டிஜிபிக்கு அனுப்பும் ஒரு அற்புதமான நடைமுறையை நீதிமன்றமே ஏற்றுக் கொண்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை எதற்கு ? இழுத்து மூடி விடலாமே ? இந்த லட்சணத்தில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, அடிப்படை ஊதியத்தில் 15 சதவிகிதம் சிறப்பு ஊதியமாம்.

வழக்கு முடிந்து விட்டது. இனி சவுக்கின் புலன் விசாரணை. இந்த மூன்று பேருக்கும் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப் பட்டதா …. பாண்டியன் என்ன செய்கிறார்… அவருக்கு 75 லட்ச ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்த இடத்தை கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.




வினோதன் என்ன செய்கிறார். தனக்கு ஒதுக்கப் பட்ட மனையை சண்முகம் என்பவரின் மனைவி கவுரி என்பவருக்கு, ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்துக்கு விற்கிறார். கணேசன் என்ன செய்கிறார்…. அவரும் கல்யாண்குமார் என்பவரின் மனைவி பத்மா என்பவருக்கு ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சத்திற்கு விற்கிறார்.

புரியிற மாதிரி சொன்னா. ஒரே நாளில் “கை மாத்தி விட்டதுக்கு, இவங்க மூனு பேருக்கும் லாபம் தலா ஒரு கோடி. “ ஜாபர் சேட்டுக்கு கோபம் வர்றது நியாயம் தானே ?

இப்போ பாண்டியனோட வீட்டு மனையில, பெரிய பங்களா கட்டிகிட்டு இருக்காங்க சார். சும்மா சூப்பரா இருக்கு.








இப்போ சொல்லுங்க சார். பாதுகாப்புக்கே பாதுகாப்பு தலைப்பு பொருத்தம் தானே ?

சவுக்கு

30 comments:

karthee said...

இப்போ தெரியுது ..85 வயது ஆனா முதியவரை முதலமைச்சர் ஆக்கி என்ன அவருக்கும்ம் மக்களுக்கும் ஏன் சிரமம் கொடுக்கிறீர்கள் என ஞானி ஏன் சொன்னாரென்று..இவருக்கு ட்ராலி தள்ளுறவர், இவருக்கு பாத்ரூம் கூட்டி போறவர்,இவருக்கு உடை மாற்றி விடுபவர் என எல்லோறுக்கும் தமிழ்நாட்டை பிரித்து கொடுக்க ,முத்துவேலர் தமிழ்நாட்டையே இவர் பேருக்கு எழுதி வெச்சுட்டாரா என்ன?இந்த அழகுல லஞ்ச ஒழிப்பு துறைக்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில தான் நாம இருக்கோம்னு நெனைக்குரப்போ ,இந்த அப்பாவி போடு ஜனங்களை நெனச்சாதான் ரெம்ப பாவமா இருக்கு..இது லஞ்சம் ஒழிக்கும் துறையா? இல்ல லஞ்சம் அளிக்கும் துறையா?இத படிச்சா எந்த பொது மகனுக்காவது இனிமே அரசு ஊழியரை கம்ப்ளைன்ட் செய்ய கூடிய தைரியம் வருமா?இப்டி அரு இயந்திரத்துகுள்லேயே உள்குத்து (உள்கூத்தும்தான்)இருக்கே..இந்த அழகுல நீதித்துறை அதுக்கு மேல.லஞ்சம் வாங்குற போலீஸ் காரருக்கும் அரசியல்வாதிகளிடம் ஆசிர்வாதம் வாங்குற நீதிபதிக்கும் பெரிய வித்தியாசம் இல்ல..
இந்த வழக்குக்கான தீர்ப்ப நீயா நானா கோபிநாத் கூட ரெம்ப அழகா ,தெளிவா ,நேர்மையா சொல்லிருவர் போல இருக்கே?ஆனா கெடைக்குற சான்ஸுல எல்லாநம்ம ஜபாற போட்டு கொடுக்கிறிங்க..இப்போதான் நண்பர் மெயிலில் அனுப்பிய ச்விச்ஸ் பாங்க்கும் 70 ஆயிரம் கோடி கருப்பு பணமும் படிச்சேன்..இப்போ நீங்க வேற ....ஊழல் ரெம்ப புரையோடி போயிருச்சு நம்ம நாட்டுல..இதுக்கு ஒரு இந்தியன் தாத்தா இல்ல ,1000 இந்தியன் தாத்தா வந்தாலும் ஊழலை அழிப்பதும்,தடுப்பதும் ரெம்ப சிரமமான காரியமாகத்தான் இருக்கும்(அப்புறம் கோர்ட்டு ,அவமதிப்புன்னு வேற சொல்லிட்டிங்க,அதுனால எங்கே எடிட் பன்னோனுமோ பண்ணிக்கிங்க...முழு உரிமையும் உங்களுக்கு உண்டு.ம்

Anonymous said...

Antha kalathil savukkadi chandrakantha enru oru padam vanthathu Athuvum oru thol uriipu padam.Ungalidam Nakkeeran!!!!! reporter ellam pichai vanga vendum.Chennai airport expansion kkukaka Ramapuramthil 57 IAS officer kal 57 veedugal pettru kondarkalame?Konjam Secretariate pakkamum pongalen.

முத்தரசு said...

சூப்பரப்பு....

ஒசை said...

உங்கள் பதிவை அச்சத்துடனே வாசிக்கிறேன். இதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்குமோ என்று.

Prabhu said...

Dear savukku sir,

These Guys are the Real Robbers

Anonymous said...

Ennaththai solrathu ponga........ Ivangala (sattaththaiyum serththuthaan) yaaraalayum ethuvum panna mudiyathu. Aanaa vidhi (fate) nu onnu irukku, athu avangalukke theriyum anubavikkum bothu.

விக்டர் said...

இவ்வளவு தகவல்கள் வெளியாகியுள்ளது தெரிந்தும் இந்தக்கேடிகள் திருந்தப்போவதில்லை!நக்சலைட்டுகள் போல போராடிதான் இவர்களை ஓழிக்கவேண்டும் என தோன்றுகிறது..... உங்களுக்கு????????

Anonymous said...

தூத்துக்குடி துறைமுகம்,
சுரேஷ் I.A.S.,
மச்சேந்திரநாதன் I.A.S.

இந்த காம்பினேஷன்ல ஒரு பெரிய கதையே இருக்கு,
கிடைத்தால் மக்களுக்கு அளிக்கவும்.

NAGA INTHU said...

//மக்களின் சொத்துக்கள் அனைத்தையும், கருணாநிதி தன்னுடைய சொத்தாகவே நினைக்கிறார். இன்னும் 2016 வரை ஆட்சிப் பொறுப்பை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் யாருக்குமே எந்தச் சொத்தும் இல்லாமல், இருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ளப் போகிறார்.//
நீங்கள் சொல்வது பொய். டிராலி பாய்ஸ்சுக்கும் சிறியஅளவு பகிர்ந்து கொடுத்து விட்டார்.

Anonymous said...

மதுரை அதிகார மையத்தின் புதல்வர் அண்ணா பல்கலைக் கழக மாணவர் என்கிறார்கள். ஆனால் அவர் படித்து முடித்து பட்டம் பெற்றாரா என்பது யாருக்கும் தெரியாது. இத்தனைக்கும் அவர் தனது தாத்தாவின் கோட்டாவில் பி.இ கணிணி அறிவியல் சீட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

swaminathan said...

SAVUKKU NEENGAL MAAYAAVIYAA ELLAA IDATHILUM IRUKKIREERGALE EPPADI?

Anonymous said...

Savukku,
For the sake of outstation readers give full account of the two meetings on Karuthu Sudandiram
held in Chennai.
I know you may not like it- but for Jaffer Sait case and Karuna corruption only person who can go to court,president,supreme court is Subramanian Swamy. So contact him .
Of course your difference with eelam will remain but atleast for fighting karuna you require all the help

Anonymous said...

நக்கீரனில் கர்மத்துக்குச் சொந்தக்காரர் காமராஜரின் வாரிசாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் கார்த்திகைச் செல்வன் என்பவர், நிருபராக வந்தே ஒரு பத்து வருடத்துக்குள் தான் இருக்கும். அவருக்கு வேலையே, காமராசர் சொல்லும் ஆட்களிடம் சென்று மாமூல் வசூல் செய்துவிட்டு வருவதுதான். அதற்காகவே அவரை அங்கே வேலைக்கு அமர்த்திக் கொண்டு, சகலவிதமான சவுகரியங்களையும் செய்துக் கொடுத்திருக்கிறார்கள். இவரின் யோக்யதைப் பற்றிச் சொல்ல ஒரே ஒரு சாம்பிள்... இவர் மாணவர் நிருபராக இருந்து பெரம்பலூரில் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க. ஆட்சி. வனத்துறை அமைச்சராக வைத்தியலிங்கம் இருந்தார். அவர் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர். இவருடைய பணி எல்லைக்குள் இருப்பவர். இவர் அமைச்சரிடம் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு விட்டு, அமைச்சருக்கு எதிராக செய்தி எழுதியதாக, அமைச்சர் வைத்திலிங்கம் தன்னுடைய அரசாங்க லெட்டர் பேடிலேயே தன்னுடைய கையெழுத்திட்டே, நக்கீரன் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். பிஞ்சிலேயே பழுப்பது போல, இவர் மாணவர் நிருபராக இருந்தபோதே லஞ்சம் வாங்கினால், அப்படிப்பட்டவர்தானே தன் கூட இருக்க வேண்டும் என்று காமராசர் விரும்புவார். அதற்காகவே அவரை சென்னைக்கு வர வழைத்து பணியமர்த்திக் கொண்டு விட்டார். இந்த கர்மத்துக்கு இருக்கும் ஆயிரம் சொத்துக்கள் போல, இந்த பண்ணாடை கார்த்திகைச் செல்வனும் ஊர் முழுக்கச் சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறான். வேளச்சேரி, தாம்பரம் என்று சொத்துக்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. நீங்கள் சொல்வீர்களே போலிப் பாதிரி அவர்களோடும் தமிழச்சி தங்கபாண்டியன், அவருடைய கணவர் சந்திரசேகர், கனிமொழியக்கா இவர்களோடெல்லாம் இந்த கார்த்திகை செல்வனுக்கு அப்படியொரு நட்பு. போலி பாதிரியும் இவனும் தெனாலி டாட்.காம் ஞானவேலுவும் சேர்ந்து அடிக்கும் கொள்ளைகளும் கூத்துக்களும் அதிகம். இவங்களையும் கொஞ்சம் சவுக்கை எடுத்து சுழற்றுங்க. இந்த நாட்டுக்கு புரயோஜனமா இருக்கும்.

Anonymous said...

துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் காலாவதி மருந்து விவகாரத்தில் கைதான மீனாட்சி சுந்தரத்திடம் பி.எம்.டபிள்யு கார் வாங்கி இருக்கிறான். அதற்கான ஆதாரங்களெல்லாம் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வைத்திருப்பதாகத் தெரிகிறது. அவரிடமிருந்து வாங்கி, அது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ-க்கு விட வேண்டும் என்று சொல்லி பொது நல வழக்குப் போடலாம். அதை யாரும் செய்யவில்லை. சவுக்காவது அதனை செய்யுமா? கேடுகெட்ட அ.தி.மு.க-காரங்க ஒருநாளும் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாத ஆத்திரத்தில்தான் உங்களுக்கு இந்தச் செய்தியை அனுப்புகிறேன்.

Anonymous said...

Dear savukku sir , also look into and bring out the mega fraud in Health Department in Kalaignar kappeettu thittam and in NRHM schemes ..How much MRK panneerselvam and higher officials involved in Karur Tex scam ( purchasing unworthy bedsheets from a private wholesaler leaving behind the co optex and societies and sarvodhaya and Khadi products ) ..

உங்களுடன் said...

சவுக்கு சார் டர்ட்டி பாய்ஸ்-களைத் தொடர்ந்து டிராலி பாய்ஸ் வந்திருக்காங்க. இன்னும் எத்தனை பேர் டிரவுசர் கழலப்போகுதோ தெரியலயே.....

Anonymous said...

savukku mika mika kavanam ungal paathukappu high security eerpaduseithu kollungal intha arasiyalvaathigalukku unmai sonnaal pitikkathu

chinna paiyan said...

ஒசை. said...
உங்கள் பதிவை அச்சத்துடனே வாசிக்கிறேன். இதன் எதிர்விளைவுகள் எப்படி இருக்குமோ என்று....

I AGREE WITH OSAI.
PLEASE TAKE CARE SAVUKKU BROTHER.

With Real Fear,
Chinna paiyan

Anonymous said...

உங்கள் சவுக்கு தளத்தில் ஒரு குறிப்பிட்ட சிலரை பற்றியே தொடர்ந்து ஏதாவது எழுதி கொண்டிருகிறீர்கள். இதனால் உங்கள் நோக்கத்தின் மீது சந்தேகம் வருவது தவிர்க்க முடியவில்லை.

Suryaputhra said...

நாமார்க்கும் குடியல்லோம் !
நமனையும் அஞ்சோம் !

வீழ்வது ஒருமுறை , அது இந்த நாட்டின்
நல்நிலைக்காய் இருக்கட்டும் !
நித்தம் செத்து வாழும் பொத்தாம் பொது
வாழ்க்கை விலகி , சத்தம்போட்டு சாத்தான்களை
சவுக்குமூலம் சரி செய்வீர் !
அன்பு ,நட்பு வாழ்த்துகளுடன் ,
சூர்யபுத்ரா

Anonymous said...

Dear Mr. Savukku,

A good job done! Keep it up!

A Little Ink makes many think.

well done!

Gemini Raman A.S.

vasan said...

Dear Savukku,
The comments for your post mostly reflects the fact/feeling that,
the Justice seeking , innocent, common people find you
as an alternative to the inactive Government as
you are the DON in the book of ‘GOD FATHER’

Anonymous said...

Whenever I read your post...I pray god for your well-being...Nallavargal needuli vaazhavaendum

Anonymous said...

By tomorrow the website would have got 2 lakh hits and by october it should become a million.
Savukku is not able to give other stories than police because he wants proof. He will not publish without proof. Other publication including Nakkheeran indulge in rumor without proof. So if u want more coverage please send him the misdeeds with proof

KINGSLY said...

Savauku ....u r favour of DMK or AIDMK

Anonymous said...

Good work Savukku!!
My only worry is that if and when Jayalalitha comes to power either Savukku will go silent or the police will 'confiscate' ganja from "எண் 5, 4வது தளம், சுங்குராமன் தெரு, சென்னை. 600 001 "

Anonymous said...

Karunanidhi shed everything..he will not bother for anything.

Anonymous said...

savukku ni kalakku,
savukku ADMK support pannugiradho endru oru sandegam

Anonymous said...

healthy congrats brother,,, long live savukku,
please unga savukku high judiciary pakkamum suzhalattum,,, please,,,,
with hearty congrats,
kullan.

Anonymous said...

hello i read it. chamathu kutty. en kannu ellam nalla irukku.

Post a Comment