Flash News

Thursday, May 13, 2010

சவுக்குக்கு கருணாநிதி ப்ரத்யேக பேட்டி





உண்மையான டெக்கான் க்ரானிக்கிள் பேட்டி


இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், கருணாநிதி பேட்டியளித்துள்ளார். இந்த இதழில் கருணாநிதியின் பேட்டி வந்த பின்புலம் குறித்து, சவுக்கில், தனிப் பதிவு எழுதப் படும். ஆனால், இந்தப் பதிவு, கருணாநிதி, பதில் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதும், மனதில் என்ன நினைத்திருப்பார் என்பதும் தொகுக்கப் பட்டு உள்ளது. உண்மையில் பேட்டியில் என்னதான் உள்ளது என்பதை, டெக்கான் க்ரானிக்கிள் படித்து தெரிந்து கொள்ளவும்.

(டெக்கான் இதழுக்கு கருணாநிதியின் பேட்டி, படமாக கீழே தரப்பட்டுள்ளது)
கேள்வி. தாங்கள் ஓய்வு பெறப்போவதாக தாங்கள் அளித்த முன்னோட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதே. தாங்கள் ஓய்வு பெறலாம் என திட்டமிட்டுள்ளீர்களா ?

கருணாநிதி பதில் இடையறாது மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதே, தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எனக்கு கற்றுக் கொடுத்தது. மக்கள் பணிகள் ஏராளமாக காத்துக் கிடக்கையில் எனக்கு ஏது ஓய்வு ?

கருணாநிதி மனதில் நினைத்தது என்ன ம••••க்கு நான் ஓய்வு பெறனும் ? நான் ஓய்வு பெற்றுட்டா, யாரு எனக்கு பாராட்டு விழா நடத்துறது ? நான் என்ன லூசா, இப்பவே ஓய்வு பெற்றதுக்கு. சும்மா அப்படித்தான் அப்பப்போ ஜு குடுப்பேன். அதெல்லாம் போய் பெருசா எடுத்துக் கிட்டு… ..

கேள்வி உங்கள் ஆதரவாளர்கள், ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஜோதி பாசுவின் சாதனையை முறியடிக்கும் வண்ணம், ஆறாவது முறையாக நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று கூறுகிறார்களே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் மக்களின் விருப்பம் அதுவானால், அதை மறுத்துப் பேச நான் யார் ? மக்களின் தீர்ப்பு, அந்த மகேசனின் தீர்ப்பு என்பதை அண்ணா எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

கருணாநிதி மனதில் நினைத்தது அப்போ, ஆறு வாட்டியோட முடிச்சுட்டு, ஏழாவது வாட்டி அந்த அம்மாவ சிஎம் ஆக்கலாம்னு பாக்கறீங்களா… ? நடக்காது. ஏழாவது வாட்டியும் நான்தான் சிஎம். எட்டாவது வாட்டியும் நான்தான் சிஎம்.





கேள்வி நீங்கள் ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்த போது, அவர்தான் அடுத்த திமுக தலைவர் மற்றும், முதலமைச்சர் என்பது போல் இருந்தது. ஆனால், தற்போது, அழகிரியால் குழப்பமாக உள்ளது போல இருக்கிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் இந்தக் குழப்பங்கள் எல்லாம், பூணூல் அணிந்தும், அணியாமலும் இருக்கும், சில பார்ப்பன ஏடுகள், அந்த அம்மையாரின் மனம் குளிரச் செய்வதற்காக கொடுத்திருக்கக் கூடிய செய்தி. அதைப் பற்றி நீங்கள் கேட்பதும், அந்த விஷமப் பிரச்சாரத்திற்கு நீங்களும் பலியாகி விட்டீர்கள் என்பதையே காட்டுகிறது.

கருணாநிதி மனதில் நினைத்தது என்ன பண்றது ? முட்டாப் பசங்கள புள்ளைங்களா பெத்தா இந்த மாதிரி முட்டாப் பய கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கு.

கேள்வி அழகிரி, மாநில அரசியலுக்கு வருவதாகவும், அவர் இடத்துக்கு கனிமொழி நியமிக்கப் படப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அழகிரி, எங்கு பணியாற்றுகிறாரோ, அங்கு பணியாற்ற அவருக்கு உரிமை உண்டு. அவ்வாறு, அவர் விருப்பத்திற்கு ஏற்ப பணியாற்றும் வகையில், கழக பொதுக் குழு முடிவு செய்யும்.

கருணாநிதி மனதில் நினைத்தது அழகிரி, திரும்பி வந்தா, இவனுங்க ரெண்டு பேருக்கும் யாரு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கறது ? ஒருத்தன ஒருத்தன் அடிச்சுக்கிட்டு, என் உயிர எடுப்பாணுங்களே ?

கேள்வி முதன் முறையாக, கட்சித் தலைவர்கள் யாரும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி தரக்கூடாது என்று கூறியுள்ளீர்கள். ஆனால், இது, அழகிரியைப் பார்த்து வெளியிட்ட தடையாணை என்று தோன்றுகிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் திமுக ஒரு ஜனநாயக கட்சி. கழகத்தின் கொள்கைகளையும், அதற்கான விளக்கங்களையும், பத்திரிக்கை களிலே பேட்டியாக கொடுக்க கழக உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் உரிமை உண்டு என்றாலும், அவ்வாறு கொடுக்கப் படும் பேட்டிகளை சில ஏடுகள் திரித்து வெளியிட்டு, கட்சிக்கும், கழக ஆட்சிக்கும் அவப் பெயர் ஏற்படுத்துவதாலேயே இந்தக் கட்டுப்பாடு.

கருணாநிதி மனதில் நினைத்தது ஆமாம். பேட்டி கொடுக்கறதுக்கு, பேசறதுக்கு, எழுதறதுக்கு எல்லாம் நான் இருக்கேன். அத விட்டுட்டு, ஆளாளுக்கு, பெரிய ம…..ரு மாதிரி பேட்டி கொடுக்குறானுங்க. எல்லா பேட்டியிலயும், ஆற்காட்டையும், அன்பழகனையும் பக்கத்துலேயே வச்சுருந்தாலும், ரெண்டு பேரையும் என்னைக்காவது வாயை தொறக்க விட்டுருக்கேனா ?

கேள்வி ஆனால் எம்ஜிஆர் பிளவு, வைகோ பிளவு ஆகியவற்றைக் கூட சந்தித்த கட்சி, இன்று கட்டுப் பாடு இல்லாதது போல தோன்றுகிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் எத்தனை பிளவுகள் வந்தாலும், இன்றும் அறிஞர் அண்ணா கற்றுக் கொடுத்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல் தான் நடந்து வருகிறது. நீங்கள் சொல்வது போன்ற தோற்றம், ஆரிய மாயையின் நீட்சி. பார்பன சூழ்ச்சியின் மீட்சி.

கருணாநிதி மனதில் நினைத்தது மந்திரி சபை மாற்றம்னு ஒரு அறிவிப்பு கொடுக்கறேன்.. அப்புறம் பாருங்க… எந்தப் பயலாவது பேசறானான்னு
கேள்வி. தற்போது, தமிழகத்தில் பல்வேறு அதிகார மையங்கள் இருப்பதாக செய்திகள் வருகின்றனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் பல்வேறு அதிகார மையங்கள் உள்ளது உண்மைதான். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரம் போன்ற அமைப்புக்கு, செயற்குழு, பொதுக் குழு, அரசியல் குழு, தலைமை ஆய்வுக் குழு, உயர்மட்டக் குழு என்ற பல்வேறு அதிகார மையங்கள் உள்ளது உண்மைதான்.

கருணாநிதி மனதில் நினைத்தது என்னை மீறி எந்த மையம் இருக்கு ? ஏதாவது அதிகார மையம் எல்லை மீறுதுன்னு தெரிஞ்சா, உடனே ராமச்சந்திரா ஹாஸ்பிட்டல் போய் அட்மிட் ஆயிட மாட்டேன்.

கேள்வி சட்டசபை தேர்தல் முன் கூட்டியே வருவதாக செய்திகள் வருகின்றனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் இவ்வாறு, வரக் கூடியவை செய்திகள் அல்ல. அந்த அம்மையாரின் விருப்பம். பார்பனக் கூட்டத்தின் கனவு. அது நிறைவேறாது.

கருணாநிதி மனதில் நினைத்தது இன்னும் 120 பாலம், 23 சிறப்பு பொருளாதார மண்டலங்கள்ளாம் கட்டி, ஒரு பெரிய அமவுன்ட அடிக்கலாம்னு ப்ளான் போட்ருக்கேன். அதுக்கு முன்னாடி, எலக்ஷன் நடத்த நான் என்ன லூசா ?

கேள்வி. காங்கிரஸ் பெரிய அண்ணன் மனப்பான்மையாடு நடந்து கொள்வதாகவும், அதனால் கட்சிக்குள்ளேயே பலருக்கு மன வருத்தம் என்றும், செய்திகள் வருகின்றனவே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் தியாகத் திருவிளக்காம் அன்னை சோனியாவும், நேர்மையின் சிகரம் பிரதமர் மன்மோகன் சிங்கும், எனக்கும், கழகத்துக்கும் அளித்து வரும் ஆதரவை உடைக்க நினைக்கும் சதிகாரக் கூட்டத்தின் பகல் கனவு இது. விபீடணக் கூட்டத்தின் விஷமப் பிரச்சாரம் இது.

கருணாநிதி மனதில் நினைத்தது வீல் சேர்ல, டெல்லிக்கு போயி, காங்கிரஸ் தலைவர்கள பாக்கலாம்னு போனா, என்னா திமிரா நடந்துக்கிறாங்க ? ஆளாளுக்கு, பெரிய லீடர்னு நெனப்பு. இங்க ஸ்டேட்ல இவனுங்க தயவு தேவைன்னுதானே, வாய மூடிக்கிட்டு இருக்கேன். இல்லன்னா, இவனுங்க, தமிழ்நாட்ல கால வெப்பாங்களா ? விஎஸ் பாபு கிட்ட சொல்லி, பின்னிட மாட்டேன் ?

கேள்வி ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வருகின்றது. இதற்கு உங்கள் வியூகம் எப்படி இருக்கும் ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் எத்தனை கூட்டணிகள் அமைத்தாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் தான் மக்கள் ஐக்கியமாவார்கள். கழக அரசின் மகத்தான சாதனைகளுக்கு முன்னால், எப்பேற்பட்ட கூட்டணியும் எடுபடாது என்பது வரலாறு.

கருணாநிதி மனதில் நினைத்தது அத நெனச்சாத்தான் பயமா இருக்கு. விஜயகாந்த் கிட்ட 12 பர்சென்ட் ஓட்டு இருக்கு. அதோட, ஏடிஎம்கே, வாக்கு வங்கியும் சேந்துச்சுன்னா மண்ணக் கவ்வ வேண்டியதுதான். எலேக்ஷன் வரும்போது, ஏதாவது ஏற்பாடு பண்ணணும். இந்த முறையும், கவர் ட்ரிக் பலன் கொடுக்குமான்னு தெரியல,

கேள்வி. நாட்டை இப்போது அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நக்சலைட் பிரச்சினை பற்றி என்ன கூறுகிறீர்கள் ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் தந்தை பெரியாரின் விரல் பிடித்தும், அறிஞர் அண்ணாவின் கரம் பிடித்தும், நான் அரசியலுக்கு வந்திருக்கா விட்டால், நானும் நக்சலைட்டாகி இருக்க வேண்டியவன் தான். அதனால், நக்சலைட்டுகளின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிவோடு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் எனது அவா.

கருணாநிதி மனதில் நினைத்தது சும்மா இருக்கவனயெல்லாம் என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிட்டு இருக்கேன். நக்சலைட்டுன்னு எவனாவது வருவானா ?

கேள்வி. தமிழ்நாட்டில், வளர்ச்சி விகிதம், ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் கூட, கிராமப் புறங்களில் இன்னும் பல இடங்களில் வறுமை இருக்கிறதே…..

கருணாநிதி கூறியிருக்கும் பதில் கிராமப் புர வளர்ச்சிக்காக அறிஞர் அண்ணா பெயரில் ஏற்படுத்தப் பட்டுள்ள அண்ணா மறுமலர்ச்சித் திட்டமும், ஒரு ரூபாய் அரிசியும், இலவச வண்ணத் தொலைக் காட்சி திட்டமும், கிராமப் புற மக்களின் வாழ்விலே வண்ணங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறது என்பதை, நீங்கள் முரசொலியைப் படித்திருந்தால் அறிந்திருப்பீர்கள்.

கருணாநிதி மனதில் நினைத்தது கோபாலபுரம், சிஐடி காலனி போன்ற கிராமப் புறங்கள் போதுமான வளர்ச்சி அடைந்திருக்கிறதே. போதாதா ?
கேள்வி. இலங்கையில், இன்னும் தமிழ் மக்களுக்கு போதுமான உரிமைகள் வழங்கப் படவில்லையே ? அவர்கள் நிலை மேம்படவில்லையே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அதற்காக இன்று இரவு கூட, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். ஈழத் தமிழர்களின் வாழ்வு சிறப்பதற்காக கழக அரசும், இந்தக் கருணாநிதியும் குரல் கொடுக்க என்றுமே தயங்கியதில்லை என்பதை இந்த நேரத்திலே உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கருணாநிதி மனதில் நினைத்தது இப்போதைக்கு தேர்தல் இல்லை. அதனால், அது பற்றி கவலை இல்லை.

கேள்வி. பாமகவுக்கு, ராஜ்ய சபை எம்.பி.சீட் வழங்கப் படுமா ? பாமக திமுக கூட்டணிக்கு வருமா ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் பொருத்திருந்து பாருங்கள். காலம் பதில் சொல்லும்.

கருணாநிதி மனதில் நினைத்தது வரலன்னா அவனுங்களுக்கு வேற என்ன வழி… ? எம்பி சீட், தர்றேன் தர்றேன்னு, ஆசைக் காட்டி, இழுக்க வேண்டியதுதான். இல்லன்னா ஜெகதரட்சகன வச்சு, வன்னியர் ஓட்ட ஒடைக்க வேண்டியதுதான். எம்.பி எலெக்ஷன்ல, எல்லா சீட்லயும், தோக்க வெச்சேன்ல ?

கேள்வி. செல்வி ஜெயலலிதா, விசுவாசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். நீங்கள், சீனியாரிட்டிக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என்று கூறப்படுகிறதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில்தேனோடு சேர்ந்த தெள்ளமுதைப் போல, விசுவாசத்தோடு கலந்த சீனியாரிட்டிக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன். பேராசிரியர் அன்பழகனை திமுக பொதுச்செயலாளர் ஆக்கியதைப் பார்த்தாலே நான் சீனியாரிட்டிக்கு முன்னுரிமை கொடுப்பவன் என்பது தெரியவில்லையா ? கட்சி மாறி வந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் எம்எல்ஏ சீட் கொடுத்ததிலி ருந்தே நான் விசுவாசத்துக்கு முன்னுரிமை கொடுப்பவன் என்பது விளங்கவில்லையா ?

கருணாநிதி மனதில் நினைத்தது நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் முன்னுரிமை கொடுப்பேன். வேற யாருக்கும் கிடையாது

கேள்வி. சினிமாவுக்கும், சினிமாக் காரர்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்குகிறீர்கள் என்ற குற்றச் சாட்டு உள்ளதே ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் சினிமாக் காரர்களுக்கு செய்ததை விடவா நான் செய்து விட்டேன் ? நானும் ஏறி வந்த ஏணி, சினிமா என்பதை மறந்து விடாதீர்கள். நான் சினிமாவில் வசனம் எழுதி, பகுத்தறிவை வளர்த்தேன். அந்த அம்மையார் “வைரம்“ படத்தில் நடித்து, என்ன வளர்த்தார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

கருணாநிதி மனதில் நினைத்தது சினிமால ஆட்ற மாதிரி, டக்கரா யாருய்யா டான்ஸ் ஆடுறா ? ஒவ்வொரு, விருது வழங்கும் பங்ஷன்லயும், என்னா டான்ஸ் ஆடுறாங்க பாத்தியா ? போய் வேற வேலையப் பாருய்யா. வந்துட்டான் கேள்வி கேக்க.

கேள்வி. இந்த வயதிலும், உங்களுக்கு, தளராத ஆர்வத்தையும், உத்வேகத்தையும் தருவது எது ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றாலே, எங்கிருந்தோ உடம்பில் உத்வேகம் வந்து சேர்கிறது. தமிழன்னையின் ஆசி எனக்கு இருக்கையில், எனக்கு களைப்பு எங்கிருந்து வரும் ?

கருணாநிதி மனதில் நினைத்தது துட்டுதான் வேற என்ன ? அரசியல்ல இருந்தா துட்டு இல்லன்னு தெரிஞ்சா, இன்னேரம் வேற வேலயப் பாக்க போயிருப்பேன்.

கேள்வி நீங்கள் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் ரசிகர் என்று தெரியும். 20க்கு 20 கிரிக்கெட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

கருணாநிதி கூறியிருக்கும் பதில் அரசியலை விட, விறு விறுப்பாக இருக்கிறது. மேலும் 20 ஓவர் கிரிக்கெட் மேட்சைப் போலவே நானும் சுறுசுறுப்பாக பணியாற்றுவதாக உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களே கருத்து தெரிவித்துள்ளதால் நான் வேறு என்ன சொல்ல ?

கருணாநிதி மனதில் நினைத்தது என்னா நெனச்சா என்ன ? சீனிவாசன் பேர்ல, சென்னை கிங்சும், உங்க பேப்பர் பேர்ல, ஐதராபாத் டீமும் பினாமியா வாங்கிப் போட்ருக்கேன். துட்டு வர்ற வரைக்கும், கிரிக்கெட் பேன்தான். அது 20 ஓவரா இருந்தா என்ன, 2 ஓவரா இருந்தா என்ன ?




சவுக்கு

1 comment:

Jey said...

very nice
jeyakumar
Chennai

Post a Comment