Flash News

Friday, September 3, 2010

ஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்



சவுக்கு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டுள்ளது. சவுக்கை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், சவுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது. திட்டினாலும், அநானியாக வந்து அவதூறு பேசினாலும் அவர்களும் சவுக்கு வாசகர்கள் தானே ? அந்த வாசகர்களின் ஆதரவு இல்லாமல் சவுக்கு ஏது ?

நிற்க. 21 ஏப்ரல் 2009ல் தொடங்கிய சவுக்கு, அவ்வளவாக பிரபலமில்லாமல் தான் இருந்தது. காவல்துறையினரைப் பற்றிய சில பிரத்யேக செய்திகள் வந்தவுடன், காவல்துறையினரால் கவனிக்கப் பட்டது. மெள்ள மெள்ள சவுக்கு வாசகர் வட்டம் விரிவடைந்து கொண்டே இருந்த நிலையில் தான், அருமை நண்பர், ஜாபர் சேட், பல கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரத்தை சவுக்குக்கு தேடிக் கொடுத்தார். ஒரு பொய் வழக்கு சவுக்கை பல ஆயிரம் வாசகர்களிடம் ஒரே நாளில் சேர்த்தது. பல ஆயிரம் வாசகர்கள் சேர்ந்தாலும், சவுக்குக்கு பெரும் மகிழ்ச்சி, காவல்துறையில், கீழ் நிலையில் உள்ள காவலர்களும், தலைமைக் காவலர்களும், தங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றி வரும் செய்திகளை படித்து மகிழ்வது தான். தங்களால் செய்ய முடியாததை யாரோ ஒரு முகம் தெரியாதவன் செய்கிறான் என்ற மகிழ்ச்சியை, உளவுத் துறையிலேயே பணியாற்றும், காவலர்கள், மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களிடம் காண முடிந்தது. என்னவெல்லாம் சொல்லி என்னைத் திட்டியிருப்பாய். இப்போது பார், உன்னை ஒருவன் கிழி கிழியென்று கிழிக்கிறான் என்று அவர்கள் மகிழும் போது, சவுக்குக்கு இதை விட பெரும் மகிழ்ச்சி வேறு என்ன கிடைக்க முடியும் ?

மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு உதவி செய்த ஜாபர் சேட்டைப் பற்றி எழுதாவிட்டால், பொருத்தமாக இருக்குமா ? அதற்காகத் தான் இந்தப் பதிவு.



ஜோசப் ஃபெலிக்ஸ் என்றதும், யாரது புதிய கேரக்டராக இருக்கிறதே என்று சவுக்கு வாசகர்கள் வியக்கக் கூடும். இவர் நமக்கு புதிய கேரக்டர் தான். ஆனால் ஜாபர் சேட்டுக்கு ரொம்ப பழைய கேரக்டர். அவர்தான் ஜாபர் சேட்டின் பள்ளி ஆசிரியர். அந்த ஆசிரியர் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரிதான் தெரிகிறார். ஆனால் இப்படி ஒரு தறுதலை மாணவரை எப்படி அவர் உருவாக்கினார் என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம். சவுக்கு உட்பட. அதனால் அவருக்கே ஒரு மனந்திறந்த மடல் எழுதி கேட்டு விடலாம் என்று சவுக்கு முடிவெடுத்துள்ளது.




அன்புள்ள அய்யா ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு,

சவுக்கு எழுதிக் கொள்வது. தாங்கள் நலமாக இருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால், தமிழக மக்களும், சவுக்கும் நலமாக இல்லை. இந்த நலமின்மைக்கு காரணம், நீங்கள் உருவாக்கிய தறுதலை மாணவர் ஜாபர் சேட் என்ற சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

நீங்கள் சவுக்கை தொடர்ந்து படித்து வந்திருப்பீர்களேயானால், உங்கள் மாணவன் யார் என்பதும், அவரது வண்டவாளங்கள் என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் சவுக்கு படிப்பதில்லை என்றுதான், உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள். சவுக்கை படிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னால், உங்களுக்கு இணையம் பரிச்சயம் இல்லை என்று சொல்கிறார்கள் உங்கள் பழைய மாணவர்கள். இந்த மனந்திறந்த மடல் உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையிலேயே சவுக்கு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறது.

நீங்கள், நல்லதையே உருவாக்கியிருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையில் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஒரு விஷ விருட்சத்தை வளர்த்து உள்ளீர்கள் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

சமீபத்தில் திண்டுக்கல்லில் உங்கள் பள்ளியில் நடந்த விழாவில் பவ்யமாக உங்களை வகுப்பு எடுக்கச் சொல்லி விட்டு, “ரெக்கார்ட் டான்ஸை” வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்திருக்கிறாரே…. ?



அந்த ஜாபர் சேட், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நமது அழைப்பை ஏற்று உடனடியாக பள்ளி விழாவுக்கு வருகை தந்துள்ளாரே என்று நீங்கள் பெருமை பட்டிருக்கக் கூடும். அவர் வந்தது பள்ளி விழாவுக்கா, திண்டுக்கல் ”மோட்டலில்” பஞ்சணையில் பள்ளி கொள்ளவா என்பதை உங்கள் மாணவரிடமே கேளுங்கள். அவரிடம் பதில் இருக்காது.



ஊருக்கெல்லாம், ரமலான் நோன்பிருக்கும் ஒரு நல்ல அதிகாரி போல வேஷம் போட்டுக் கொண்டு, திண்டுக்கல் மோட்டலில் என்ன செய்தார் என்பதை கேளுங்கள் உங்கள் மாணவரிடம். ஆனால், ”அதற்கும்” ரகசிய நிதியைப் பயன்படுத்தினார் என்பது எவ்வளவு கேவலமான விஷயம் ? அவர் எத்தனை மணிக்கு மோட்டலுக்குள் சென்றார், எத்தனை மணிக்கு வெளியில் வந்தார், மோட்டல் அறைக்குள் என்ன செய்தார், என்ன பேசினார் என்பது உட்பட சவுக்குக்குத் தெரியும் என்றாலும், அதையெல்லாம் சவுக்கு எழுத விரும்பவில்லை.

இவர் மாநில உளவுப் பிரிவு தலைவராக இருக்கலாம். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டன்றோ ?

அய்யா ஆசிரியரே….. என்னதான் கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?

ஆசிரியர்கள் என்பவர்கள் இந்த தேசத்தை கட்டுபவர்கள் என்பது சவுக்கின் கருத்து. சவுக்கு, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு படிக்கும் போது, கேஎன்டி என்று அழைக்கப் படும், கே.என்.தேசிக்காச்சாரி அவரது ஒரு பயண அனுபவத்தைச் சொன்னார். அது இன்று வரை சவுக்கின் வாழ்வை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

அவர், திருச்சிக்கு அவசர வேலையாக செல்ல வேண்டியிருந்தது. அப்போது ரயிலில் அவ்வளவாக கூட்டம் இல்லையென்றாலும், முன் பதிவு செய்ய அவருக்கு அவகாசம் இல்லை. அதனால், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு, ரயிலில் ஏறுகிறார். ரயிலில் பல பெர்த்துகள் காலியாக இருந்தாலும், டிக்கட் பரிசோதகருக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெர்த் கிடைக்கும் என்ற நிலை.

அந்த தேசிக்காச்சாரி என்ன செய்தார் தெரியுமா ? கையில் வைத்திருந்த இந்து நாளிதழை (இந்து நாளிதழுக்கான சரியான பயன்பாடு) தரையில் விரித்து, ஒரு ஜெப்ரி ஆர்ச்சர் நாவலை படித்துக் கொண்டே பயணத்தை முடித்து விட்டதாக கூறினார். சவுக்கு அவரிடம் ”ஏன் சார் டிடிஆருக்கு லஞ்சம் கொடுத்து பெர்த் வாங்கவில்லை (அப்பவும் இதே அதிகப் பிரசங்கித் தனம்) என்று கேட்ட போது அவருக்கு நான் கொடுக்கும் லஞ்சத்தை நான் நியாயப் படுத்தினால், உங்களுக்கு ட்யூஷன் வைத்து லஞ்சம் வாங்குவதும் எனக்கு நியாயமாகப் படும், இது என்னைத் தொடர்ந்து பல ஊழல்களைப் புரிவதற்கு தயார் படுத்தும் என்று கூறினார்.

அது இவ்வளவு தெளிவாக அப்போது புரியாவிட்டாலும், லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதை ஏறக்குறைய சவுக்குக்கு அப்போது புரிய வைத்தவர் கே.என்.தேசிக்காச்சாரி. பின்னர் ஒரு நாள் பள்ளிக்கு அவரைக் காண சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று செய்தி கிடைத்தது.

ஆனால் ஃபெலிக்ஸ் அய்யா, நீங்கள் ஒரு மிக மிக மோசமான ஒரு அயோக்கியனை மாணவனாக உருவாக்கி, இந்த தேசத்தில் நடமாட விட்டிருக்கிறீர்கள் என்றே சவுக்கு கருதுகிறது.

இவ்வளவு திறமையாக ஒட்டுக் கேட்பை செய்யும் இந்த நபர் தனது ஒட்டுக் கேட்கும் கலையை பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியிருப்பார் என்றே சவுக்கு கருதுகிறது.

அவர் வகுப்பில் படிக்கும் போதே இது போல ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டாரா என்பதை நீங்கள்தான் அய்யா தெளிவு படுத்த வேண்டும்.

கக்கூஸை புதுப்பிக்க ரகசிய நிதி, வாஸ்து மீன் வாங்க ரகசிய நிதி, சோபா செட் வாங்க ரகசிய நிதி, மளிகை சாமான் வாங்க ரகசிய நிதி, ஒட்டுக் கேட்க ரகசிய நிதி, சொத்து வாங்கிப் போட ரகசிய நிதி என்று ரகசிய நிதியை தனது நிதியாக, கருணாநிதி போல செலவு செய்ய நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

அய்யா நீங்கள் ஒரு கிறித்துவர். ஏசுபிரான், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லியிருக்கிறார். உங்களில் எவன் பாவஞ் செய்யாதவனோ, அவன் இவள் மீது முதல் கல்லேறியட்டும் என்று ஒரு விலைமகளை பாதுகாத்திருக்கிறார். அப்படிப்பட்ட கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆசிரியரான நீங்கள் உருவாக்கிய மாணவனா 30க்கும் மேற்பட்ட உயிர்களை போலி என்கவுண்டரில் பறித்தது ? என்ன அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?

தனக்கு தொழில் பங்குதாரராக இருந்தால் பல காரியங்கள் நடக்கும் என்று தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, அவரோடு நட்பு பாராட்டி, அவரால் பல காரியங்களை சாதித்து விட்டு, ஆளுநர் மாளிகை இடைத்தரகர் நஜிமுத்தீன், கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் மனைவியோடு சேர்ந்து கொண்டு சென்னையில் 30க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களை திறக்கப் போகிறார் என்று இவர் கீழ்ப்பாக்கத்தில் ஓசியில் உடற்பயிற்சி செய்யும் ஜிம் முதலாளியிடம் சொல்லவில்லை ? இதுதான் இவரை நம்பிப் பழகி வரும் நஜிமுத்தீனுக்கும், இவரை நம்பிக் கொண்டிருக்கும் ஷகீல் அக்தருக்கும் இவர் காட்டும் நன்றியா ?

இப்படிப் பட்ட நன்றி கெட்டத் தனத்தையா சொல்லிக் கொடுத்தீர்கள் அய்யா ?

எந்நன்றி கொன்றாலும், உய்வுண்டு, செய்நன்றி கொன்றால் உய்வே இல்லை என்கிறானே வள்ளுவன். செய்நன்றியை மறந்து அவர்கள் முதுகில் குத்தவா கற்றுக் கொடுத்தீர்கள் ஃபெலிக்ஸ் அய்யா ?

தன்னோடு நெருங்கிப் பழகி, உண்டு உறவாடி, தொழில் பங்குதாரராக இருக்கும் குருமாராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு, கீழ்த்தரமாக தரங்கெட்டவராகவா உருவாக்கினீர்கள் உங்கள் மாணவரை ?

தன்னை விட மூத்த அதிகாரியாக இருந்தாலும், தனது காலில் வந்து மண்டியிட வேண்டும் என்ற அதிகார வெறி எப்படி அய்யா வந்தது ஜாபருக்கு ? தன்னை விட மூத்த அதிகாரிகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கருணாநிதியிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பேன் என்று மிரட்டுவதற்கு நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் கழித்து வகுப்பு எடுக்கும் போது, அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே … ….. இந்த வகுப்பில் இவரைப் போலவே இன்னும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்களேயானால், இது போல அமைதியாக இந்த ஜாபர் சேட் உட்கார்ந்திருப்பாரென்றா நினைக்கிறீர்கள் ?

ஐபிஎஸ் படித்து முடித்து நல்ல அதிகாரியாக உருவாகி, மக்களுக்கு நற்பணி ஆற்றுவார் என்று எதிர்பார்த்தால், ஊர் முழுக்க சொத்து வாங்கிப் போடவும், ஊழல் செய்யவும், அதிகார வெறி தலைக்கு ஏறி ஆணவம் பிடித்து ஆடவும் நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

உளவுத் துறைக்கு கூடுதல் டிஜிபியாக யாரை நியமித்தாலும், தனது அதிகாரம் குறையும் என்பதால், இவ்வாறு நியமிக்கப் பட்ட ஒவ்வொரு கூடுதல் டிஜிபியையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மாற்றி விட்டு உளவுத் துறைக்கு தான்தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆணவத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

நாட்டின் பாதுகாப்புக்காக சிலரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கலாம். ஆனால் தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக, நண்பன், விரோதி என்று பார்க்காமல், ஒருவரையும் விட்டு வைக்காமல், பத்திரிக்கையாளர்கள் முதற்கொண்டு அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்டு, அவர்களது ரகசியங்களையும் அந்தரங்கங்களையும் அறிந்து கொண்டு, இதை ஆளும் வர்க்கத்திடம் சொல்லும் இந்த கேவலத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

ஒருவனின் உரையாடலை ஒட்டுக் கேட்பது என்பது அடுத்தவனின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதாகாதா ? என்ன கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?



குருமாராஜோடும், போலிப் பாதிரியோடும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், வசூல் வேட்டையில் இறங்க நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

ஆளும் வர்க்கத்திற்கு வசூல் செய்து தரும் ஏஜென்ட்டாக செயல்படும் கலையை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?

ஜாபர் சேட்டை உங்கள் கல்வி பண்படுத்தவில்லை. அவரது மதம் பண்படுத்தவில்லை. ஐபிஎஸ் பயிற்சி பண்படுத்தவில்லை. இப்படி எதுவுமே பண்படுத்த இயலாத ஒரு ஜந்துவை எப்படி அய்யா நீங்கள் உருவாக்கினீர்கள் ?

ஜாபருக்கு அளித்த கல்வியில் தான் நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்களால் முடிந்த தொகையை அவருக்கு மணி ஆர்டராக அனுப்பினாலாவது, திருவான்மியூரில் அவர் வீடு கட்டும் பணி, தொடர்ந்து நடக்கும். இந்த தளத்திலேயே இருக்கும் முகவரிக்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை உடனடியாக அனுப்பி அவர் வீடு கட்டும் பணி நிறைவடைய உதவுங்கள் அய்யா.

அன்புடன் சவுக்கு

33 comments:

Anandkrish said...

good leason for the teacher

Robin said...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஜாபார் சேட்டின் ஆசிரியர் ஊழல் செய்யக் கற்றுக் கொடுத்ததுபோல உள்ளது. ஆசிரியர்கள் அதுவும் ஒரு முப்பதுக்கு வருடங்களுக்கு முந்திய ஆசிரியர்கள் கடமை உணர்ச்சி மிக்கவர்கள் மட்டுமல்ல தங்கள் மாணவர்கள் ஒழுக்கமானவர்களாக வரவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள். இந்நிலையில் அவர்கள் பயிற்றுவித்த மாணவர்கள் எல்லாரும் நல்லவர்களாகிவிட்டார்களா, இல்லையே. இதற்கு காரணம் ஆசிரியர்கள் அல்ல. ஒருவரை நல்லவனாகவோ கெட்டவனாகவோ மாற்றுவதில் அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை, நண்பர்கள், என்று பல காரணிகள் உண்டு. சிலர் இவை எல்லாமே நன்றாக வைத்தாலும் தங்களுடைய சுயநலம் காரணமாக கெட்டவர்களாக மாறிவிடுவதுண்டு. மற்றபடி ஊழலுக்கு எதிரான உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:10)

Anonymous said...

செம மொக்கை பதிவு ! சவுக்கை படிக்கும் ஆவல் குறைந்து கொண்டு வருகிறது ! யாரையாவது நீங்கள் தொடர்ந்து ...'நீ உருப்படாதவன்' என்று சொல்லி கொண்டே இருந்தால் ...முதலில் ....உங்களை திட்டுவான்.தான் உருப்படியானவன் என்று வாதிடுவான் ...ஆனால் அதையே சொல்லிக்கொண்டு இருந்தீர்களானால் ...ஒரு கட்டத்தில் ...'ஆமாண்டா ...இப்போ என்ன ' என்பான் ! உங்கள் டோஸ் ஓவர் டோஸ் ஆகி விட்டது ! போதா குறைக்கு உங்கள் பார்பன ஆதரவும்..மற்ற மதங்களை குறித்த துவேஷமும் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது ! நின்று ...நிதானித்து ....புத்திசாலிதனத்துடன் அடுத்தடுத்த மோவே இருந்தால் மட்டுமே உங்கள் ஆதரவு எங்களிடம் நிலைக்கும் ! ஆசிரியரை தேவையில்லாமல் கலைப்பது போல் உள்ளது !!
-Vazhuthi

அ.சந்தர் சிங். said...

vaaththiyaaarukke paadam edukkum,

ungal arivu thiranai ennavendru solvathu?

Anonymous said...

teacherukke lessonaa? good good.

Anonymous said...

சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் சஸ்பெண்ட் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அவர் டான்சி மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை எனவும், விசாரணை முடிவடைந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்

Rams Covai

தமிழ் உதயன் said...

வாத்தியாரை விட்டுவிடுங்கள் அவர் பாவம்.

மழை எல்லா இடங்களிலும் பொழிகிறது ஆனால் நான் பெய்யும் இடத்தில் எந்த முள் செடியும் வளரகூடாது என்று எண்ணினால் என்னவாவது.. அதுபோலத்தான் ஆசிரியர் பணியும் அவர் பணியை அவர் செய்துவிட்டார் அவருக்கு எல்லாம் மடல் எழுதி வெறுப்பேற்ற வேண்டாம்...

S.Visvanathan said...

3 lakh Hits........ Oh.... A True Site...
But we cannot alleged the teacher in Jafffer Sait Issue.....

THOPPITHOPPI said...

Jesus calls இவர்களை பற்றி கொஞ்சம் எழுதுங்க சார். இவர்கள் சொத்து மதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. (சென்னை பீச் ஸ்டேஷன் எதிரே உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடம் வாங்கியது, வானகரம் இடத்தை வளைத்து போட்டது, பொறியியல் கல்லூரி, பள்ளிக்கூடம். இப்படி அதிகரித்து கொண்டே போகிறது) இவர்கள் மக்களிடம் இருந்து வாங்கும் பணத்தை ஏன் இப்படி இவர்கள் சொத்தாக மாற்றுகிறார்கள். இவர்களுடைய பொறியியல் கல்லூரி கட்ட மக்களிடமே பணம் வசூல் செய்கிறார்கள் அவர்களுடைய சந்தாதாரர்கலையே கல்லூரியின் ஒவ்வொரு அறையையும் கட்ட வைத்து அவர்களுடைய பெயரை அந்த அறையின் முன்பு போட்டு விட்டு பின்பு அந்த கல்லூரியில் சேருபவர்களிடம் பல லட்சம் பெறுகிறார்கள் இதெல்லாம் எங்கே போகிறது. அவர்கள் சொத்து மதிப்பு என்ன? இவர்கள் அத்வானி, ஸ்டாலின் போன்றவர்களிடம் நட்பு கொள்வது ஏன்? இவர்கள் உண்மையில் கிறிஸ்துவத்தை பரப்புகிறார்கள இல்லை பணம் பண்ணுகிறார்களா?


இதை பற்றி நீங்கள் விவரித்தால் ஏமாறும் மக்களுக்கு கொஞ்சம் பயன் உள்ளதாக இருக்கும்.


உங்கள் சவுக்கு கொஞ்சம் இவர்கள் பக்கமும் திரும்பட்டுமே

KANNAPIRAN said...

kamban veettu kattu thariyum kavi paadum karunanidhi kudumba naayum panniyum kuda veri piduthu adum enbathu pola sun tv saksena arajagathai patri eluthunga sir

Sathish Nandan said...

பூனை வாயில மாட்டின எலிய பாத்திருக்கீங்களா??? பார்க்கலனா இந்த வலைத்தளத்தில் பாத்துக்கோங்க....பூனை சவுக்குன்னு நான் சொல்லலை...எலி ஜாபர் சேட்ன்னு நான் சொல்லலை...கலக்குரீங்க ஷங்கர். உங்களை அறிமுகபடுத்திய வினவு வலைதளத்திற்கு நன்றி.....

kumar said...

//அவர் எத்தனை மணிக்கு மோட்டலுக்குள் சென்றார், எத்தனை மணிக்கு வெளியில் வந்தார், மோட்டல் அறைக்குள் என்ன செய்தார், என்ன பேசினார் என்பது உட்பட சவுக்குக்குத் தெரியும் என்றாலும், அதையெல்லாம் சவுக்கு எழுத விரும்பவில்லை.//

ச்சே.... இதான் சவுக்கு உன் கிட்ட இருக்கற ரெம்ப கெட்ட பழக்கம்.. எத முக்கியமா எழுதனுமோ அத்த எழுத மாட்ட...

Anonymous said...

// அவர் வந்தது பள்ளி விழாவுக்கா, திண்டுக்கல் ”மோட்டலில்” பஞ்சணையில் பள்ளி கொள்ளவா என்பதை உங்கள் மாணவரிடமே கேளுங்கள். அவரிடம் பதில் இருக்காது. //

இவரு IPS படிச்சத்துக்கு பதிலா பேசாம சாமியாராகி ஆசிரம் ஆரம்பிச்சிறுக்கலாம்.
மேட்டருக்கு மேட்டரும் ஆச்சி, மீட்டருக்கு மீட்டரும் ஆச்சினு ஜாலியா இருந்திருக்கலாம்.
என்ன பேரத்தான் கொஞ்சம் மாத்தி வச்சிக்கினும்...நித்தியானந்தா மாதிரி, சேட்டானந்த்தா...

Anonymous said...

//தொழில் பங்குதாரராக இருக்கும் குருமாராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு//

ஆட்டக் கடிச்சி, மாட்டக் கடிட்டி கடைசியில ......

//இந்த தளத்திலேயே இருக்கும் முகவரிக்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை உடனடியாக அனுப்பி அவர் வீடு கட்டும் பணி நிறைவடைய உதவுங்கள் அய்யா.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Amil said...

teacherukke lessonaa? what a sad :-( don’t try to loose your supporters...

மகேஷ்.வெ said...

This is one of my favorite blog, I Like the way you reveal the true color of all these Bureaucrats.

But I would like to suggest you to concentrate on other issues.

There is no point talking about jaffer sait.Your hit count is more than 3Lakh...You have lot responsibility now.

Please use this opportunity for the upcoming assembly election. Don’t waste your valuable time for these kind of things.

Ignore this guy and concentrate on people welfare and continue your good job

Anonymous said...

ஃபாதர் ஜோசப் ஃபெலிக்ஸ் நான் இதே பள்ளியில் 15 வருடம் முன்பு படித்த போது தலைமை ஆசிரியராக இருந்தவர் - மிகவும் நல்லவர், கடுமையானவர். படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், இதர கலைகள் என்று அனைத்திற்கும் சரி சமமாக முக்கியத்துவம் தருபவர். பிந்நாளில் மாணவர்கள் தடம் புரள இவரைக் காரணமாகச் சொல்ல முடியாது. இவர் மாற்றலாகிச் சென்றவுடன் பள்ளியின் தரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது உண்மை! டியூஷன் படித்தால் மட்டுமே இண்டர்னல் மார்க் போடும் ஜெபமாலை (+2 இயற்பியல்) போன்ற ஒழுக்கம் கெட்ட ஆசிரியர்களும் உண்டு - ஒரு வேளை அவர் போன்றவர்களை எடுத்துக் காட்டாக எடுத்து கொள்ளும் மாணவர்களும் உண்டு போல!

ஏற்பதும் மறுப்பதும் said...

நண்பர் சவுக்குக்கு,
உங்களது கே.என்.டி யையே எனது வகுப்பாசிரியராக கொண்டு 1971-72ல் பள்ளி
இறுதி வகுப்பை முடித்தவன்.குத்து சண்டையை சொல்லித் தந்த விளையாட்டு
ஆசிரியர் இருந்த பள்ளி. உங்களைப் போன்றே , பத்தை ஒன்பதாக குறைக்க
முடியாவிட்டாலும் , நான் பதினோராவது ஆளாக மாட்டேன் என்று வைராக்கியத்துடன்
தொடர்ந்து போராடி வருபவன். தவறுகளைத் தட்டி கேட்கக் கூடியவன் என்பதால்
பதவி உயர்வு பெறமுடியாத வகையில் அறிக்கை கொடுக்கப்படுபவன்.இதய அறுவை சிகிச்சை
செய்யப் பட்டிருப்பதால் பெல்லாரி மாற்றத்தை விலக்க சொல்லி எழுதிய என் விண்ணப்பத்திற்கு
பதிலே அளிக்காமல் ,பலருக்கு மாற்ற உத்தரவு கொடுத்து விட்டு என்னை விடுப்பில் இருக்கும் போது.
விடுவித்தனர் .நான் அஞ்சுபவனும் , இல்லை, காரியம் வேண்டி கெஞ்சுபவனும் இல்லை.
ஈழத் தமிழருக்கு குரல் கொடுக்க செல்வதாக சொல்லி , எனது விடுப்பை மறுத்தாலும் சரி ,
சம்பளமற்ற விட்டுப்பாக கொண்டாலும் சரி என் எழுதி கொடுத்து சென்றேன்.
நான் தேசிய வங்கி ஒன்றில் மேலாளராக உள்ளேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
என்னிலையிலும் தவறுகளை நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

Sindhu said...

சவுக்கு இத்தன தகவலை எப்படி collect பண்ணுறீங்க.......:)))

Unknown said...

தோழர் சவுக்கு அவர்களுக்கு,
நாட்டில் ஜாபர் ஷேட் மற்றும் அயோக்கியன் இல்லை. இதுபோல் பல கருப்பு ஆடுகள் உள்ளன. அதனால் எல்லோருடைய தவறை பற்றி எழுதினால்தான் உங்கள் மதிப்பு கூடும். தயவு செய்து ஊழல் குற்றவாளி அனைவரை பற்றியும் எழுதுங்கள். உங்களுடைய சொந்த வெறுப்பு காரணமாக சில அதிகாரிகளை மட்டும் குறி வைக்காதீர்கள். அன்புடன்,
உங்கள் நலன் விரும்பி

Anonymous said...

Is he the same JOseph Felix who worked as Head Master in TRichy St.Josephs CHSS.

Anonymous said...

well savukku.you be carefull.

Anonymous said...

மதிப்பிற்குரிய சவுக்கு,

இந்த பதிவிற்க்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

நான் சவுக்கை தொடர்ந்து படிக்கும் வாசகன் என்ற முறையிலும், ஊழலுக்கு எதிரான சவுக்கின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு தருகிறவன் என்ற காரணத்தினாலும் எனது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

ஆசிரியர்கள் தான் நல்ல மாணவர்களை, தலைவர்களை உருவாக்குகிறார்கள். அது அவர்களுடைய கடமையும் கூட என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. ஆனால் மிகச்சிறந்த ஆசிரியர்களிடத்தில் பயின்ற எல்லா மாணவர்களுமே நல்லவர்களாக, நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று சவுக்கு எப்படி எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை.

//அய்யா ஆசிரியரே.. என்னதான் கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?//

ஆசிரியர் திரு.ஜோசப் ஃபெலிக்ஸ்தான், ஜாபர் சேட்டுக்கு குற்றம் புரிய கற்றுக் கொடுத்தார் என நினைக்கிறீர்களா அல்லது அப்படி கூற முயலுகிறீர்களா??

//கே.என்.தேசிக்காச்சாரி அவரது ஒரு பயண அனுபவத்தைச் சொன்னார். அது இன்று வரை சவுக்கின் வாழ்வை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.//

திரு கே.என்.தேசிக்காச்சாரியிடம் பயின்ற அத்தனை மாணவர்களுமே, சவுக்கைப் போல நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என உறுதியாக உங்களால் கூற முடியுமா??? அப்படி இல்லாவிடில் அதற்காக திரு கே.என்.தேசிக்காச்சாரியை குறை கூறத்தான் முடியுமா?? வயல் நாற்றுகளுக்கு பாயச்சப்படும் நீரில்தானே களைகளும் விளைகின்றன. அது நீரின் குற்றமா??

என்ன ஒரு நோக்கத்தில் இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது, என எனக்கு தெளிவாகப் புரியவில்லை.

//மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு உதவி செய்த ஜாபர் சேட்டைப் பற்றி எழுதாவிட்டால், பொருத்தமாக இருக்குமா ? அதற்காகத் தான் இந்தப் பதிவு. //

உங்க ஹிட்ஸ் ரேட்டை தக்க வைத்துக் கொள்ளவா??? இல்லை ஜாபர் சேட் பற்றி புதிய பரபரப்பு தகவல்கள் வேறு எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லையா???

//அய்யா நீங்கள் ஒரு கிறித்துவர்//

இல்லை, இது உங்கள் பிரச்சனையா???

ஜாபர் சேட் செய்யும் தவறுகளுக்கு என்னவோ இந்த ஆசிரியர் தான் காரணம் என்பது போல நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது இப்படித் தோன்றுகிறது.

//அப்படிப்பட்ட கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆசிரியரான நீங்கள் உருவாக்கிய மாணவனா 30க்கும் மேற்பட்ட உயிர்களை போலி என்கவுண்டரில் பறித்தது ? என்ன அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?//

எப்படி இப்படி ஒரு கேள்வியை, கூசாமல் ஆசிரியரிடமிருந்து உங்களால் கேட்க முடிகிறது???

திரு.ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களைப் பற்றி நீங்கள் நேரடியாக எந்த தகவலும் கூறவில்லை. எனவே அவரை நேர்மையான நல்ல ஆசிரியராக நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட அவரை கூண்டில் ஏற்றியது ஏன் என தாங்கள் கூற வேண்டும். இந்த பதிவை நீக்கி, திரு.ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பதிவு எழுதுவதன் மூலம், சவுக்கு தன் கறையை துடைக்க வேண்டும். இப்படி குற்றம் புரிபவர்களுக்காக, அவர்களுடைய ஆசிரியர்களை கூண்டில் ஏற்றத் தொடங்கினால், இந்தியாவில், ஏன் உலகமெங்கிலும் ஒரு ஆசிரியர் கூட தப்ப முடியாது.

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

Anonymous said...

தனிப்பட்ட தரமற்ற தாக்குதல்களை சற்றே தவிர்க்கலாமே ... மற்றபடி வெல்டன் சவுக்கு ...

Anonymous said...

சவுக்குக்கு வணக்கம்!

நீங்கள் ஓவராகப் போட்டுத் தாக்கும் ஜாபரின் ஆசிரியர், ஜோசஃப் பெலிக்ஸ் அல்ல, அவர் ஃபெலிக்ஸ் ஜோசப். திண்டுக்கல் மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக இருந்தகாலத்தில் நான் அங்கு படித்தேன். ஜாஃபரைப் பற்றி நீங்கள் எழுதுகிறீர்கள், அவர் 'எதிர்வினை' ஆற்றுகிறார், நீங்களும் எதிர்வினைக்கு எதிர்வினை ஆற்றுகிறீர்கள்...! இது ஒரு புறம்!

இதில் எந்தத் தொடர்புமே இல்லாத எங்கள் ஆசிரியர், அதுவும் கண்டிப்பான தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜோசப்பை ஏன் இழுக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக(86-ல் இருந்து) எங்களுக்கெல்லாம் ஒரு கண்டிப்பான தலைமை ஆசிரியராக, சமூக நீதி போதனைகளைக் கற்றுத்தந்தவராக, படிக்கும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியவராக 'நல்லாசிரியர்' ஆகத்தான் அவர் பணியாற்றினார்.

அவரிடம் படித்தவன் பண்பாளன் ஆகலாம், சமூகவிரோதி ஆகலாம். அதற்கெல்லாமா அவர் பொறுப்பு? தவறான ஆள்கள் உருவாவதற்கு, இந்த சமூகத்தில் நிலவும் பலவித உடைமைச் சிந்தனைகளும் அதை நியாயப்படுத்தும் செயல்பாடுகளும்தானே, அதிகாரபலம் கிடைத்தால் அடித்துநொறுக்கும் இயல்பும்தானே காரணம்?

சவுக்குக்கு இதெல்லாம் தெரியாதா? அல்லது 'ஜாஃபர்மேனியா' உங்கள் கண்ணை மறைக்கிறதா?

-இரா. தமிழ்க்கனல்

Anonymous said...

பாராட்டி பின்னூட்டம் இட்டால் மட்டும்தான் அப்ரூவ் செய்வீர்களா? குறைந்த பட்சம் என்னுடைய பின்னூட்டத்திற்கு, விளக்கமாவது அளித்திருக்கலாமே? என்னோடு ஒத்த கருத்துக்களை பலர் சொல்லியிருப்பதை கண்டீர்களா? என் கருத்துக்களில் காரம் கூடுதலாக இருந்ததால் வெளியிடவில்லையோ??? இதுதான் திரு கே.என்.தேசிக்காச்சாரி உங்களுக்கு கற்றுக் கொடுத்த நேர்மையா??? உங்கள் பாணியிலேயே அவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டியதுதான்....

சவுக்கு said...

அன்பார்ந்த தோழர் ஜுனியர் தருமி, இந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் ஒன்று கூட எடிட் செய்யப் படாமல் அப்படியே பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. பாராட்டி பின்னூட்டம் இட்டால் மட்டும் தான் ஒப்புதல் அளிக்கப் படும் என்று தாங்கள் எழுதியிருப்பது தவறு என்று பதிப்பிக்கப் பட்டிருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும். சவுக்கின் நேர்மையை சந்தேகப் படாதீர்கள் தோழர்.

annaduraim said...

ok enna panna nammal mudiyum?

Anonymous said...

You could've given a 'sorry note' for pulling in that innocent teacher because of a stupid bugger!
You should have the courage to say sorry when this is not liked by many! Not about Jaffer...but about the poor teacher!
It hurts!
-Vazhuthi

சவுக்கு said...

Savukku deeply apologises for inadvertently pulling in Felix Joseph, who is revered by many students. This posting was a satire intended for Jaffer and absolutely there is no intention of belittling the teacher.

Anonymous said...

Hello Anonymous's - I also studied in the same school (1980-1984). Fr.Felix served prior to our time Headmaster(s) Fr.Lourdu Raj & Fr.Vedhanayagm. However he came again, after we left in 84. So the article is correct. Fr.Felix was a very strict martinet, a class beyond comparison, s long as I heard from my seniors. Someone mentioned about Jebamaalai the physics teacher. I was the class monitor of 12A(1983/84) and he certainly was good during our time. Don't know how he changed.
Coming back to the school - I feel shame this corrupted person also studied in the same school I did! If anyone studied there during 80-84, please let me know and will be glad to contact!

Anonymous said...

'...I feel shame this corrupted person also studied in the same school I did! If ...'

Dear Anonymous!

Lord Acton said:

"Power corrupts: absolute power absolutely"

There are hardly a few of us who cant be corrupted by power.

If you or savukku are invested with aboslute power i.e put in a fearsome uniform, wielding fearsome power, i.e can haul anyone, beat anyone, and no one can question your actions by virtue of the powers the legal authorities have invested you with,

you will turn into a monster.

It is found everywhere - not only in Police force. In police force, it is conspicuous, very visible, so the police are taken to task by the people like you, who are not invested with any power at all. What about millions of small and big ceasers who harass the inncocent with impunity?

You and Savukku turning into monsters are a clear possibility if you are invested with absolute power.

As some people have pointed out here, there is a tinge of jealousy in savukku's singling out Jafar - the jealousy of not having the power Jafar enjoys wielding!

Anonymous said...

Lord Acton - that sounds like absolutely submissive mind and thought! Someone got to bell the cat. If we all accept these things us "Natural" or "Fate", then we are letting our future generations down! So you think there are no good souls with power in India? Always look at the better side for good examples. Pessimism is what totally occupied your mind, I bet! As for as that so called "jealousy" is concerned - If I got an engineering seat by sheer merit, and be my own boss in USA, the reason being these IFS/IAS/IPS stuffs were not my choice. More over don't forget the fact that the cream of talents go to medical, engineering, and other professions, where as left outs bid for your so called "powerful" Civil Services...
I studied Rabindranath Tagore's "This is my prayer to Thee my Lord......" in 8th grade...did you? if not go read it today and try to get the concept. It is also english, but not bullshit like yours!

Post a Comment