Flash News

Saturday, May 9, 2009

மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிப்பதற்காக இன்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனைக்கு மன்மோகன் சிங் வருகை தந்தார். இவர் வருகையை ஒட்டி ஜெமினி மேம்பாலம் முதல் சாந்தி தியேட்டர் வரை போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப் பட்டது. சைக்கிள் கூட அனுமதிக்கப் படவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் மீது நிலவி வரும் கடுமையான அதிருப்தி காரணமாக இலங்கை தமிழர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக மன்மோகன் சிங் மீது செருப்பு வீசக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து நிறுத்தப் பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மவுன்ட் ரோடு மட்டுமல்லாமால் மவுன்ட் ரோட்டில் இணையும் அனைத்து சாலைகளும் கடும் போக்குவரத்து நெருக்கடியை சந்தித்தன. பொது மக்களுக்கு இவ்வளவு இன்னல் கொடுத்து கருணாநிதியை பார்த்து மன்மோகன் சிங் என்ன செய்யப் போகிறார் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
அநேகமாக தேர்தல் தோல்வியை முன்கூட்டியே கணித்து கருணாநிதிக்கு ஆறுதல் சொல்வதற்காக இருக்கக் கூடுமோ என்ற ஐயமும் எழுகிறது.

1 comment:

Anonymous said...

yarupa mannai kaviyathu...ithu d.m.k ku ethira mattum eluthura mathri iruku? ithunala ngaluku enna nanmai

Post a Comment