Flash News

Monday, December 14, 2009

தெலங்கானா பிரச்சினைக்கு தீர்வு. சோனியாவுக்கு யோசனைகள்.



ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டு விழிக்கிறார் சோனியா. ராஜசேகர ரெட்டிக்கு பிறகு, ஆந்திராவில் ஒரு பெரிய தலைவர் இல்லை என்பதால், 2014ல் பிரதமராக இருக்கும் தன் மகனுக்கு ஆதரவு வேண்டும் என்ற கனவில், நள்ளிரவில், தெலங்கானா அமைக்கப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.


இந்த அறிவிப்பு பூதாகரமான பிரச்சினைகளை கிளப்பியுள்ளது. மேற்கு வங்கத்திலிருந்து கோர்காலாந்து, பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், கர்நாடகாவிலிருந்து கூர்க், குஜராத்திலிருந்து சவுராஷ்டிரா, மகாராஷ்டிராவிலிருந்து விதார்பா, மத்தியப் பிரதேசம் உத்திரப்பிரதேசத்திலிருந்து ஹரித் பிரதேஷ் என தினம் ஒரு அறிவிப்பு வெளி வந்த வண்ணம் உள்ளன.

இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று சோனியா குழம்பிய வண்ணம் உள்ளார்.




இப்பிரச்சினையை சமாளிக்க, சோனியாவுக்கு “சவுக்கு“ சில யோசனைகளை தெரிவிக்கிறது.

1) பாப்ரி மசூதி இடிப்பை விசாரித்த, மன்மோகன் சிங் லிபரான் தலைமையில், தெலங்கானா அமைப்பது தொடர்பாக ஒரு கமிஷனை அமைக்கலாம். 18 ஆண்டுகள் கழித்து, லிபரான் அறிக்கை சமர்ப்பிக்கையில் 2028 ஆகி விடும். அப்போது, தெலங்கானா பற்றி அனைவரும் மறந்து விட்டிருப்பர்.


2) அடுத்து, சந்திரசேகர ராவ் தெலங்கானா கோரிக்கை வைப்பது போலவே, ரோசைய்யாவும், தெலங்கானா கோரிக்கையை முன் வைக்க வேண்டும். முதலில், ரோசைய்யா 15 வயதாக இருக்கும் போதே, தெலங்கானாவைப் பற்றி பேசியவர் என்ற புதுக் கதையை உருவாக்க வேண்டும்.


3) அடுத்து, சந்திரசேகர ராவ், தெலங்கானாவின் எதிரி என்ற பிரச்சாரத்தை அவிழ்த்து விட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன், சந்திரசேகர ராவ், எப்போதாவது ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியை திரித்து, 1980 லேயே, சந்திரசேகர ராவ், தெலங்கானாவுக்கு எதிராக பேட்டியளித்திருக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.





4) தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ரோசைய்யா பெயரில், “ரோசைய்யா டிவி“ என்ற புதிய சேனலை தொடங்க வேண்டும். இந்த டிவிக்கு போட்டியாக, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை வைத்து “நன்னா டிவி“ (அப்பா டிவி) என்ற டிவியை தொடங்க வேண்டும்.


இரண்டு டிவிக்களுக்கும் கடும் போட்டி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும். “தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக“ என்று பல திரைப்படங்களை போட்டி போட்டுக் கொண்டு இரண்டு டிவிக்களும் ஒலிபரப்ப வேண்டும்.

5) புதிய செய்தித் தாள் ஒன்றை “மன்ச்சி பத்ரிகா“ என்ற பெயரில் உருவாக்கி அதில் ரோசைய்யா தினந்தோரும் கவிதை எழுத வேண்டும். சாம்பிள் கவிதைகள்.

மன்ச்சி வாடு
தார் ரோடு
மன நாடு
பெத்த வீடு
வாடு வஸ்தாடு
டப்பு இஸ்தாடு

அடுத்த கவிதை

ரூப் தேரா மஸ்தானா
நாக்கு காவாலி தெலங்கானா
மீரு நேனு கொட்டிஸ்தானு
நேனு நின்னை ப்ரேமிஸ்தானு


6) அடுத்து, தெலங்கானா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரோசைய்யா கூட்ட வேண்டும். இதில் எப்படியும், சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள மாட்டார். உடனே, தெலங்கானாவின் துரோகி என்று சந்திரசேகர ராவை திட்டி அறிக்கை வெளியிட வேண்டும்.


7) அடுத்த கட்டமாக, சோனியாவுக்கு தெலங்கானா அமைத்துக் கொடுங்கள் தாயே என்று உருக்கமாக கடிதம் எழுதி, அதை பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும்.


8) தெலங்கானாவுக்கான போராட்டங்கள் தீவிரமடையும் நேரத்தில், மனிதச் சங்கிலி போராட்டம் என்று ரோசைய்யா அறிவிப்பு வெளியிட்டு ஒரு நல்ல மழை நாளாக பார்த்து, மனிதச் சங்கிலியை ஏ.சி காரில் அமர்ந்து பார்வையிட வேண்டும்.


9) மனிதச் சங்கிலி போராட்டம் முடிந்ததும், சட்டசபையில் இறுதி வேண்டுகோள் என்று, தீர்மானம் இயற்ற வேண்டும். இந்த தீர்மானத்திற்கு, சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, சந்திரசேகர ராவ் போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்தால், தெலுங்கினத்தின் துரோகிகள் என்ற பட்டத்தை அவர்களுக்கு அளித்து, சட்டசபையில் வசை மாறி பொழியலாம்.


10) இந்தப் போராட்டங்கள் தீவிரமடையும் நேரத்தில், ஆந்திர அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கலாம். அந்த விருதுகளில், முன்னணி தெலுங்கு நடிகைகளான இலியானா, திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கலாம். நடிகர்களில் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் (சிரஞ்சீவி உட்பட) விருதுகள் வழங்கலாம். இந்நிகழ்ச்சியை ரோசைய்யா டிவியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.


11) தெலங்கானா கேட்டு தொடர்ந்து போராடி வரும் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களையும், வழக்கறிஞர்களையும், திடீரென்று ஒரு நாள் காவல்துறையை விட்டு, கடுமையாக தாக்கலாம். இத்தாக்குதல் காரணமாக, போராட்டம் தெலங்கானா கோரிக்கையிலிருந்து, காவல்துறை மீது நடவடிக்கை எடு என்ற வேறு வடிவம் எடுக்கும்.


12) ரோசைய்யா டிவியில் “மானாட்டா, மயிலாட்டா“ என்ற தலைப்பில், கவர்ச்சிகரமான குத்தாட்ங்களுக்கான போட்டிகளை நடத்தலாம். இப்போட்டிகளுக்கு நடுவர்களாக, பழைய ஹீரோயின்களான ரோஜா, ரம்யா கிருஷ்ணன், விஜய சாந்தி போன்றோரை நடுவர்களாக போடலாம்.








இந்நிகழ்ச்சி, தெலங்கானா போராட்டத்தை பெருமளவில் கட்டுப் படுத்தும்.

13) தெலங்கானா போராட்டம் நடந்து கொண்டிருக்கையில், ரோசைய்யாவுக்கு வாரம் இரண்டு பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம். எதற்கு பாராட்டு என்றே தெரியாமல், மக்கள் குழம்பிப் போவார்கள். இந்த பாராட்டு விழாக்களில் பேசுகையில், தெலங்கானாவுக்காக, ரோசைய்யா நடத்திய போராட்டங்களைப் பற்றி விரிவாக பேசலாம்.


இது போல, தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பேசிக் கொண்டிருந்தால், மக்கள் பொறுமை இழந்து, தெலங்கானாவே வேண்டாம் என்று கதறும் நிலைமையும் வரக் கூடும்.

14) இதையும் மீறி, போராட்டம் தொடர்ந்தால், ஆந்திராவில் ஒரு நல்ல தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்து, அம்மருத்துவமனையிடம், விளம்பரத்திற்கு நல்ல பணம் வாங்கிக் கொண்டு, முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை என்று அங்கே படுத்துக் கொள்ளலாம். யாரும் முதல்வரை பார்க்க வர வேண்டாம் என்று அறிவிப்பு வெளியிடலாம்.

மருத்துவமனையில் இருந்த படியே, மன்ச்சி பத்திரிகாவில், தம்புடுக்கு கடிதம் எழுதலாம். “சாலா காலமு, வெள்லி வஸ்தானு“ என்று கடிதத்தை முடிக்கலாம். முதல்வருக்கு உடல் நிலை சரியில்லையே என்ற வருத்தத்தில் போராட்டத்தின் வேகம் குறையும்.

14) தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, பொதுக் கூட்டங்கள் நடத்தி அக்கூட்டங்களில் சோனியாவை வந்து பேச வைக்கலாம். சோனியா பேசுகையில், சம்பந்தமே இல்லாமல், ரோசைய்யா போன்ற தலைவரைப் பெற ஆந்திரா என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்றும், மன்மோகன் சிங் போன்ற சிறந்த பிரதமரை நாடு இது வரை கண்டதில்லை என்றும் பேச வேண்டும்.

மக்களுக்கு இந்தக் கூட்டம் எதற்காக என்றே புரியாமல் குழம்புவார்கள். இந்த நேரத்தில் ரோசைய்யா, சோனியாவின் காலில் விழுந்து, மன்றாடுகிறேன் தாயே, தியாகத் திருவிளக்கே, தெலங்கானாவை காப்பாற்றுங்கள் “நன்னு ஷமிக்ஷண்டி, நேனு ஏமி செய்யாலி, எக்கடக்கி வெள்ளாலி, நேனு எவரனி சம்ப்ரதிச்சாலி, மீரு நாக்கு சகாயம் செய்யண்டி“ என்று புலம்ப வேண்டும்.

15) ரோசைய்யாவின் கூத்துரு மற்றும் கொடுக்குகளுக்கு (மகள் மற்றும் மகன்) மன்ச்சி பதவி தந்து, எதிர்க்கட்சிகளின் கோபத்தை கூட்டலாம். இதனால், தெலங்கானாவை மறந்து, குடும்ப அரசியல் என்ற கோஷத்தை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பார்கள்.

16) இறுதியாக, "அகில லோகா தெலுகு பாஷா மகா சம்மேளனா" என்ற செம்மொழி மாநாடு நடத்தப் படும் என்று அறிவிக்கலாம். தெலங்கானா போராட்டம் நடக்கும் இந்த வேளையில் மொழி மாநாடா என்று எதிர்ப்புகள் கிளம்பும். கவலைப் படாமல் மொழி மாநாட்டு வேலைகளை தொடர்ந்து கவனித்தால், மாநாடு வேண்டுமா, வேண்டாமா என்ற இந்த விவாதத்தில் தெலங்கானா மறக்கப் படும்.

இந்த யோசனைகளையெல்லாம் கையாண்டால், இன்னும் 150 ஆண்டுகள் ஆனாலும், தெலங்கானா அமைய வாய்ப்பே இல்லை. ராகுலுக்குப் பிறகு, ப்ரியங்காவின் மகள் பிரதமராகும் வரை, தெலங்கானா ஒரு முடிவுக்கும் வராது. சோனியா நிம்மதியாக இருக்கலாம்.

குறிப்பு

இந்த யோசனைகளுக்கு, சவுக்குக்கு கட்டணம் ஏதும் தர வேண்டியதில்லை.





சவுக்கு

6 comments:

Anonymous said...

kalakiteenga ponga...

சூர்யா - மும்பை said...

ஆனாலும் ரொம்பத்தான் நக்கல்.

அன்புடன்

சூர்யா.

Anonymous said...

ultimate nakkal...idhaye maintain pannunga

Ram said...

superb..

Anonymous said...

tamilin tharuthalai mahan m.k

Anonymous said...

ஐயோ சவுக்கு சார், ராகுல்க்கு அப்புறம் பிரியங்கா மகன் எப்படி வர முடியும்? ராகுலோட வெளிநாட்டு பொண்டாட்டியோட மகனோ மகளோ தான் ஆட்சி செய்யணும். ஏன் என்றால் அவர்கள் தானே பட்டத்துக்கு உரிமையான வாரிசு. அது தானே ந்யாயம் தர்மம். சட்டப்படி அப்பன் சொத்து மகனுக்கு தானே? ராகுல் க்கு அப்புறம் ராகுலோட வெளிநாட்டு பொண்டாட்டி தான் காங்கிரஸ் தலைவர், அப்போ சாதா மன்மோகனோட பையன் களிமண்மோகன் தான் டம்மி பிரதமர்.

Post a Comment