சவுக்கு, ப்ளாகாக www.savukku.blogspot.com என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 2009ல் தொடங்கப் பட்டது சவுக்கு.    
முதல் கட்டுரையாக "தொலைபேசி ஒட்டுக் கேட்பும், கருணாநிதியின் கபட நாடகமும்" என்ற தலைப்பில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, இக்கட்டுரை எழுதப் பட்டது.  இந்தக் கட்டுரை பலரால் படிக்கப் பட்டாலும், கருத்து எழுதுபவர்கள் குறைவாகவே இருந்தனர்.  
ஆனாலும், நண்பர்கள் அளித்த ஊக்கத்தினால், தொடர்ந்து கட்டுரைகள் எழுதப் பட்டு வந்தன.  
ஹிட்டுகள் அதிகம் ஆக வேண்டும் என்பதற்காக, கவர்ச்சிகரமாக, ஆர்வத்தை தூண்டும் விதமாக தலைப்புகள் வைக்க வேண்டும் என்று சில நண்பர்கள் சொன்ன ஆலோசனை நிராகரிக்கப் பட்டது.  இணையத்தில் எழுதினாலும், எழுத்தில் கண்ணியத்தையும், தரத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்பதில் சவுக்கு உறுதியாக இருக்கிறது.
சவுக்கில், நகைச்சுவைக்கு இடம் இருந்தாலும், வெறும் நகைச்சுவையோடு நின்று விடக் கூடாது, முக்கிய பிரச்சினைகளைப் பற்றி எழுத வேண்டும் என்பதில் சவுக்கு தீர்மானமாக இருக்கிறது.
நவம்பர் மாதம், ப்ளாகிலிருந்து, சவுக்கு இணைய தளமாக மாறியது.
கடந்த 31.10.2009 அன்று, சவுக்கை பார்த்தவர்களின் எண்ணிக்கை, 10,000 த்தை தொட்டது.   
40 நாட்களுக்குள், சரியாக 11.12.2009 அன்று, சவுக்கின் ஹிட்டுகள் 21,000த்தை கடந்து இன்னும் சென்று கொண்டிருக்கிறது.    
தொடர்ந்து சவுக்கில் கட்டுரைகள் வெளிவருவதற்கான முக்கிய காரணம், தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, கட்டுரைகளுக்கு பின்னூட்டம் இட்டு, வாக்கும் அளித்து, சவுக்கின் கட்டுரைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அன்பார்ந்த வாசகர்கள்தான்.   
வாசகர்களின் பின்னூட்டங்கள், ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளித்து, இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
சவுக்கின் எழுத்துக்களுக்கு, தொடர்ந்து வாக்களித்து, பின்னூட்டம் இட்டு, ஆதரவு தரும் வாசகர்களுக்கு முதல் நன்றிகள்.
சவுக்கு பதிவுகளைப் படித்து, திருத்தங்கள் சொல்லி, தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
ஆலோசனைகளை வழங்கி, எழுத்துக்களுக்கு ஊக்கம் கொடுத்து வரும், பத்திரிக்கையாளர் மற்றும் எனது வழக்கறிஞர் நண்பருக்கும் எங்கள் நன்றிகள்.
சவுக்கு பதிவுகளை, தங்கள் நண்பர்களுக்கு forward செய்து, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் நன்றிகள்.
சவுக்கின் பதிவுகளை ரகசியமாக படித்து, யார் இந்த சவுக்கு என்று விசாரித்து வரும், உளவுத்துறை அதிகாரிகளுக்கும், சவுக்கை படித்து தங்கள் சக நண்பர்களுக்கு ரகசியமாக பரிந்துரை செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றிகள்.
சவுக்கின் பதிவுகளை, தங்கள் திரட்டியில் இணைத்து, சவுக்கு நிறைய பேரை சென்று சேர ஆதரவு அளித்து வரும், அனைத்து திரட்டிகளுக்கும் எங்கள் நன்றிகள்.
தொடர்ந்து எழுதுவோம்.   சமூகங்களின் அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.  
Flash News
       Your-First-Headline-Title-Here  Your-First Headline-Description
       Your-Second-Headline-Title-Here  Your-Second-Headline-Description-Here
     Your-Third-Headline-Title-Here  Your-Third-Headline-Description-Here   
    
    
Friday, December 11, 2009
40 நாட்களில் 11,000 ஹிட்டுகள். நன்றி வாசகர்களே!
 சவுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 
4 comments:
இதுக்கெல்லாம் பதிவா? சொரிதலுக்கு அளவில்லையா?
pala ubayogamaana thagavalgalai thandhu varukreerkal.. kadandha oru maadahamaaga padithu varukiren... thodarndhu padippen.. :)
நன்றி நண்பர் கனகு அவர்களே. உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் ஆதரவில்தான், எங்களுக்கு எழுத ஊக்கம் பிறக்கிறது. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
engal aatharavu endrum undu.
Post a Comment