Flash News

Friday, October 30, 2009

அழிந்தது ஆணவம் !


சென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று வெளியிட்ட அதிரடித் தீர்ப்பால் ராதாகிருஷ்ணன் என்ற ஆணவம் பிடித்த போலீஸ் அதிகாரியின் கொட்டம் அடங்கத் தொடங்கியுள்ளது.




தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளிலேயே, ஆணவம் பிடித்த அதிகாரிகளின் பட்டியிலில் முதலிடம் பிடிப்பவர் ராதாகிருஷ்ணன்தான். லஞ்ச ஒழிப்புத் துறையில், ஐஜியாக பணியாற்றிய பொழுது, இவருக்கு இங்கிலாந்து நாட்டின் “ராணி விருது” வழங்கப் பட்டது. இந்த விருது வழங்கப் பட்டதையொட்டி, விஜய் டிவியில் இவரை பேட்டி கண்டனர். அப்போது, உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டதற்கு, மகாத்மா காந்தி (??????) என்று பதில் சொன்னவர்தான் இந்த ராதாகிருஷ்ணன்.




காந்தியை ரோல் மாடலாக கொண்டவர் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த ராணி விருதுடன் ஏறக்குறைய 36 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது. இந்தத் தொகை இவருக்கு அல்ல. “சமுதாய காவல் பணி“ என்று இவர் செய்து வந்த ப்ராஜெக்ட்டுக்காக இத்தொகை வழங்கப் பட்டது. ஆனால் இந்தத் தொகையை, இந்தப் ப்ராஜெக்ட்டுக்காக இவர் கையொப்பமிட்டு இவர் பணம் எடுக்கலாம்.



லஞ்ச ஒழிப்புத் துறையில் இவர் பணியாற்றிய காலத்தில், முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மற்றும் ஸ்டாலின் மீதான வழக்குகளை கவனித்து வந்த சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக இருந்தார். இந்த பிரிவுக்கு இவர் மட்டுமே தலைவர் என்பதால், இப்பிரிவுக்கு தேவையான கணிணி உபகரணங்கள் மற்றும் எழுது பொருட்களை 2 மாதங்களுக்கு ஒரு முறை வாங்கிக் கொள்ளும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவ்வாறு, லஞ்ச ஒழிப்புத் துறையின் கணக்கில், 2 மாதங்களுக்கு ஒரு முறை 20 ஆயிரத்துக்கு, எழுது பொருள் வாங்கியதாக கணக்கு காண்பித்து விட்டு, இத்தொகையை ராணி விருதோடு வழங்கப் பட்ட 36 லட்சம் ரூபாயில் செலவு காண்பித்து விடுவார். இதுதான் இந்த மகாத்மா தொண்டரின் லட்சணம்.



18.02.2009 அன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரின் அலுவலகத்தில் நடந்து கூட்டத்தில், நடந்த கூட்டத்தில், காவல்துறை அதிகாரிகளிடம், “இந்த வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், அவர்கள் கைகளையும் கால்களையும் உடைக்க வேண்டும்“ என்று பேசியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த மறுநாள் அதாவது 20.02.2009 அன்று, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், வழக்கறிஞர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இத்தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், வேறு வழியின்றி, சில அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், ராதாகிருஷ்ணனுக்கு சென்னை மாநகரம் வரை இருந்த அவரது அதிகாரத்தை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி யாக நியமித்ததன் மூலம், தமிழகம் முழுவதும் அவரது அதிகாரம் பரவும்படி செய்தார் இந்தக் கருணாநிதி.



இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த 45 நாட்களாக, இந்த ராதாகிருஷ்ணன் எந்த கோப்புகளையும் பார்க்க வில்லை. தினமும், காலையில், சென்னை “தி பார்க்“ ஹோட்டலில் தங்கியிருந்த, அரசு சார்பாக ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவானை பார்க்கச் சென்று, அவருக்கு ஐஸ் வைத்து, எப்படியாவது தன்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருக்கிறார் இந்த ராதாகிருஷ்ணன். இவர் வேண்டுகோளை ஏற்று, “ராதாகிருஷ்ணன் ஒரு மாணிக்கம்“ “அவரைப் போல உலகத்திலேயே யாரும் இல்லை“ என்று வாதம் செய்தார்.



இவரின் வாதத்தை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது போலத்தான் இருக்கிறது. அதனால்தான் தனது தீர்ப்பில், இவரைப் போல, மோசமான போலீஸ் அதிகாரியைப் பார்க்க முடியாது, இவரின் முட்டாள்த்தனமான நடவடிக்கைகளால்தான், இந்தக் கலவரமே நடந்தது என்று தீர்ப்பளித்துள்ளது.


இந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட, 4 போலீஸ் உயர் அதிகாரிகளின் மீது, ஒழுங்கு நடவடிக்கை, பணி இடை நீக்கம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்ததன் மூலம், ராதாகிருஷ்ணனின் ஆணவத்துக்கு சவுக்கடி கொடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.



இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும், துணை நின்ற பத்திரிக்கைகளுக்கும், “சவுக்கு“ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
ஒப்பாரி

6 comments:

Anonymous said...

அப்போ வக்கீலுங்கள்ளாம் ரொம்பபபபபபபப நல்லவங்களா ?

சவுக்கு said...

வக்கீல்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. மகாத்மா காந்தியின் பேரன் போல் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பச்சோந்தி போலீஸ் அதிகாரியின் முகத்திரையை கிழிக்கவே இந்தப் பதிவு

shiva said...

Ennai porutha varai lawyers pola oru thirudankal intha ulkagathil illai.En thanooo court ippadee oru judgement koduthuthu?

shiva said...

ennnaaai porutha varai lawyers ellam periya kallanuhal.Police karan ketu vankuvan.Lawyer theiryamaley kalavu seivan.

சவுக்கு said...

வழக்கறிஞர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்று சொல்லவில்லை நண்பரே. அதற்காக வழக்கறிஞர்களை, நீதிபதிகளை, பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறை அதிகாரிகளின் செயல்களை எப்படி நண்பரே மன்னிப்பது.

Barari said...

police athikaarikalukku koduththa thandanai sari. anal thangalai sattaththirkku appalpattavarkalaaka ninaikkum vakkilkalalukku enna thandanai?

Post a Comment