![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHaVQSDKKeWG5iiR02YEHGMhkpxLMJLEQscikLjQkTUhur9oaBIs7gVE25xTw1wncMvRF-ii5BHK3EJXEk3LQ_-0rBKorr3sdciha5Izd2YR60wm-fI1WF12CUrRZ4qdDc5tOVwNpBb8QE/s400/anniyan026gq.jpg)
23ந் தேதி பந்த் க்கு ராஜபக்ஷே ஆதரவு - கருணாநிதி தகவல்
ஈழத்தில் போரை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பின்னாலும் (பதவியை மட்டும் விடாமல்) ஈழத்தில் போர் நிறுத்தப் படாமல் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவது இன்னும் நின்றபாடில்லை என்பது நீ அறிந்ததுதான் உடன்பிறப்பே. ஈழத் தமிழருக்காக என்னை விட அதிகமாக யாரும் பாடுபட்டிருக்க முடியாது என்பதும் நீயும் தமிழ் கூறும் நல்லுலகமும் அறிந்ததே. இதற்குப் பிறகும் தமிழ் மக்கள் கொல்லப் படுவதை தடுக்க இறுதி எச்சரிக்கை விடும் வகையில் 23ந் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளேன். சில விஷமிகளும் அந்த அம்மையாரும் அவருடன் இருக்கும் சாமரம் வீசுபவர்களும் இந்த பந்த் தேவையற்றது என்று கூக்குரலிடக் கூடும்.
ஆனால் நான் விடுத்த அழைப்பை ஏற்றுதான் ஏற்கனவே போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டார் அருமை நண்பர் ராஜபக்ஷே என்பது உலகம் அறிந்தது தான். நான் பந்த் அறிவிப்பு வெளியிட்ட உடனே என்னை தொலைபேசியில் அழைத்து அவரும் இலங்கை அரசும் நாளை அறிவிக்கப் பட்டுள்ள பந்த்தில் அவரும் பங்கு பெறப் போவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பந்த் நடந்தால் பந்த் முடியும் வரை தமிழர்கள் கொல்லப் படமாட்டார்கள் என்பதை விட இனிய செய்தி ஏதும் உண்டோ ?
ஆனால் சில நேரங்களில் தீவிரவாதியாகவும் சில நேரங்களில் என் நண்பராகவும் இருக்கும் பிரபாகரனுக்கும் நான் இந்த பந்த்துக்கு அழைப்பு விடுத்தாலும் அவர் கலந்து கொள்வார் என்பது சந்தேகமே
இந்த வேலைநிறுத்தத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டு (என் குடும்பத்தை காப்பாற்ற) வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள் நிறைவேற்றுவாயா உடன் பிறப்பே
No comments:
Post a Comment