Flash News

Sunday, August 31, 2014

ஊமை ஊடகங்கள்.

நேற்றைக்கு முன்தினம், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை முடிந்து, செப்டம்பர் 20 அன்று தீர்ப்பு என்று அறிவித்தார்,  சிறப்பு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. 



தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கண்காணித்துக் கொண்டிருக்கும் முக்கிய வழக்கு ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. ஜெயலலிதா சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் அல்ல.  தமிழகத்தின் முதல்வர்.    தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் ஆர்வத்தோடு தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இந்தச் செய்தி. 

ஆனால், தமிழகத்தில் உள்ள அத்தனை அச்சு ஊடகங்களும் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்தன அல்லது முழுமையாக புறக்கணித்தன. இந்து நாளேடு, 7வது பக்கத்தில் இரண்டு காலத்தில் சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியாவும் இந்த செய்தியை ஏழாவது பக்கத்தில் வெளியிட்டிருந்தது.  டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு இது செய்தியே அல்ல.  

ஏழாம் பக்க இந்து செய்தி
தமிழ் நாளேடுகளும் எந்த விதத்திலும் குறைவில்லை.    ஏழு அல்லது எட்டாம் பக்கத்தில் இந்த செய்தியை புதைத்திருந்தன.  ஜெயலலிதாவின் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை இரண்டாவது பக்கத்திலும், மூன்றாவது பக்கத்தில் இறந்த எஸ்.ஐ மனைவிக்கு 5 லட்சம் உதவித் தொகை அளித்ததையும், ஏழாவது முறை பொதுச் செயலாளராக ஆகும் ஜெயலலிதா குறித்து ஏழாவது பக்கத்திலும், வெளியிட்ட தினமணி, 11வது பக்கத்தில் ஜெயலலிதா வழக்கு குறித்த செய்தியை புதைத்துள்ளது.    மற்ற தமிழ் ஊடகங்கள் வேறுபாடு இல்லாமல் செய்தியை புதைத்திருந்தன.  தினகரன் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.  ஆனால், கேடி சகோதரர்கள் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்ததை மட்டும் ஒரு வரி கூட செய்தியாகப் போடவில்லை. 

11ம் பக்க தினமணி செய்தி

சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீதான வழக்கு என்பது மட்டுமல்ல, பல்வேறு வகைகளில் இது ஒரு வரலாற்றுப் பாடம்.    

இந்தியாவில் வேறு எந்த வழக்கும் இது போல இழுத்தடிக்கப்பட்டதேயில்லை.  சட்டத்தில் உள்ள அத்தனை துளைகள் வழியாகவும் நுழைந்து வெளியேறினார் ஜெயலலிதா.   நீதிமன்றத்தோடு மோதினார்.  நீதிமன்றத்தை வளைத்தார்.  நீதிமன்றத்தை எள்ளி நகையாடினார்.  நீதிமன்றத்தை அவமதித்தார்.  ஒரு வழக்கை 18 ஆண்டுகளாக எப்படியெல்லாம் இழுத்தடிக்க முடியும் என்பதற்கு இந்தியாவில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்கும் ஜெயலலிதா ஒரு பாடமாகத் திகழ்கிறார். 


இப்படி ஒரு வழக்கு இந்தியாவில் நடந்ததே கிடையாது.   சிறப்பு நீதிமன்றம் செல்லாது என்றார் ஜெயலலிதா. சிறப்பு நீதிமன்றம் செல்லும் என்றது உச்சநீதிமன்றம்.  1500 பக்க குற்றப்பத்திரிக்கையை தமிழில் வேண்டும் என்றார் சசிகலா.   தமிழில் தருகிறோம் என்றது லஞ்ச ஒழிப்புத் துறை.    இன்னின்ன தகுதிகள் உள்ள நபர்கள் மொழிபெயர்த்தால்தான் மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்றார்கள்.   நீதிமன்றத்தால், தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  அந்த நியமனம் அத்தனையும் தற்காலிக நியமனங்கள்.   மொழிபெயர்ப்பு முடிந்தது.  மொழிபெயர்ப்பு செய்தவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று அடுத்த மனுவை தாக்கல் செய்தார் சமூக நீதி காத்த வீராங்கனையின் ஆருயிர்த் தோழி.  இவையெல்லாம் வெறும் உதாரணங்கள் மட்டுமே.  இது போல பல்வேறு எண்ணிலடங்கா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்தனை தடைகளையும் மீறி வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றது 
2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தலைகீழாகியது வழக்கு. 

 அது வரை விசாரித்து முடிக்கப்பட்ட சாட்சிகள் மீண்டும் அழைக்கப்பட்டனர்.    திமுக ஆட்சியில் உண்மையை பேசிய சாட்சிகள் அதிமுக ஆட்சியில் பல்டி அடித்தனர்.   நாங்கள் இப்படி சொல்லவேயில்லை என்றனர்.   சாட்சிகள் மிரட்டப்பட்டனர்.   ஜெயலலிதா சார்பாக சாட்சி சொல்லவில்லையென்றால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்று உயிர் பயம் காண்பிக்கப்பட்டது.  

இந்த பிறழ் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அரசு வழக்கறிஞர் ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தார்.  இந்த அவலத்தையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய நீதிபதியோ, அதிமுக அடிமை போல தலையாட்டிக் கொண்டிருந்தார்.  இந்த அயோக்கியத்தனத்தின் உச்சமாக, வழக்கின் புலனாய்வு அதிகாரி நல்லமா நாயுடுவை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து அதிமுக வழக்கறிஞர்களும், அரசு வழக்கறிஞர்களும் அவமானப்படுத்தினர்.  மிரட்டினர், எள்ளி நகையாடினர்.  

ஜெயலலிதா ஆட்சிக்கு 2001ல் வந்ததும் ஏற்கனவே திமுக அரசால் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை மாற்றி அமைத்தார்.   இதனால் வழக்கு விசாரணை நின்று போனது.   நவம்பர் 2002ல் மீண்டும் விசாரணை தொடங்கியது.  

தகவல் மற்றும் சுற்றுலாத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற பிரிவு அலுவலர் தனது முந்தைய சாட்சியத்தில் 31.05.2000 அன்று சாட்சியம் அளிக்கையில், சசிகலாவின் கணவர் நடராஜன்  சமூக நலத்துறையில் விளம்பர உதவியாளராக 1970ம் ஆண்டு சேர்ந்தார் என்றும் 1976 வரை பணியில் இருந்தார் என்றும் அந்த பதவி 1976ல் ரத்து செய்யப்பட்டது என்றும், 1980ம் ஆண்டில் நடராஜன் மீண்டும் அதே பணியில் சேர்ந்து 1988ம் ஆண்டு துணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார் என்றும் சாட்சியம் அளித்தார்.  நடராஜன் ஸ்கூட்டர் முன்பணம் பெற்றார் என்றும், பின்னர் கார் லோன் பெற்றார் என்றும் பின்னர் வீட்டுக் கடனாக 1.84 லட்சம் என்றும் சாட்சியம் அளித்திருந்தார்.  இவரின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்தது.   ஏனென்றால், சசிகலா ஒரு ஸ்கூட்டர் வாங்கக் கூட வக்கற்று இருந்தவரின் மனைவி என்பதுதான் இதன் சாராம்சம். இதே கிருஷ்ணமூர்த்தியை 07.11.2002 அன்று மீண்டும் விசாரித்தனர்.   அப்போது மீண்டும் அவர் குறுக்கு விசாரணை  செய்யப்படுகிறார். நடராஜன் ஸ்கூட்டர் லோன் வாங்கியதோ, வீட்டுக் கடன் வாங்கியதோ தனக்கு தெரியவே தெரியாதென்றார்.  வளர்ப்பு மகன் சுதாரகனுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்த மன்சூர் அகமது தனது இரண்டாவது சாட்சியத்தின்போது, நான் ஆடைகள் தைத்துக் கொடுக்கவே இல்லை என்றார்.  

ஜனவரி 2003ல் சாட்சியம் அளித்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவஹர், தனது முந்தைய சாட்சியம், திமுக அரசு அளித்த நெருக்கடியால் கொடுக்கப்பட்டது என்றார்.  அப்போதும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர் மீது எந்த துறை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   இதை விட சிறப்பு என்ன தெரியுமா.  ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்த ஒரு ஆடிட்டர் மீண்டும் சாட்சியம் அளித்தார். அவர் தனது இரண்டாவது சாட்சியத்தில் புரட்சித் தலைவி அம்மாவிடம் 1991 முதல் 1996 வரை ஏராளமான பணம் இருந்தது என்றார். எப்படி இவ்வளவு பணம் என்றால் பணம் இருந்தது என்றால் இருந்தது. அவ்வளவுதான் என்று சாட்சியம் அளித்தார்.  இதையும் நீதிபதி பதிவு செய்தார்.     
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 76 சாட்சிகள் மீண்டும் வரவழைக்கப்பட்டு மீண்டும் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, பிறழ் சாட்சிகளாக மாறுகிறார்கள்.    
நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஜெயலலிதா மற்றும் சசிகலா
விசாரணைகள் வேக வேகமாக முடிக்கப்பட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ் கேள்வி கேட்கப்பட வேண்டும்.  இந்தக் கேள்வி கேட்கப்படும் சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதிலிருந்து விலக்கு அளிக்கவே முடியாது.  

ஆனால் 24.02.2003 அன்று ஜெயலலிதா ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். தூததுக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருப்பதாகவும், மிகவும் களைப்பாக இருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போல இருப்பதால், மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியிருப்பதாகவும், தற்போது நீதிமன்றம் வந்து கேள்விக்கு பதில் சொன்னால் உடல்நிலை மேலும் மோசமாக மாறி விடும் என்றும், அதனால் நேரில் வராமல், வழக்கறிஞர் மூலமாக கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்றும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.  

அதே நாளில் அந்த மங்குணி நீதிபதி, இந்த மனுவை அனுமதித்து, ஜெயலலிதா நேரில் வர வேண்டியதில்லை என்று உத்தரவிடுகிறார்.   

முக்கிய சாட்சிகள் அத்தனையும் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டு, வழக்கு தீர்ப்பை நோக்கி வெகு விரைவாக சென்று கொண்டிருந்த நிலையில்தான் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தை அணுகினார்.  உச்சநீதிமன்றம் 2003ம் ஆண்டு, 18 நவம்பர் 2003 அன்று இந்த வழக்கை பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறது.  

அதன் பிறகு, அந்த வழக்கில் அரசு நியமித்த அரசு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா மிக மிக திறமையான முறையில் இந்த வழக்கை நடத்தினார்.  அந்த ஆச்சார்யாவுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு தொந்தரவுகளை கொடுத்து, ஆச்சார்யாவை பதவியை ராஜினாமா செய்ய வைத்து ஓட வைத்தார் ஜெயலலிதா.  இவருக்கு ஏற்ற வழக்கறிஞரான பவானி சிங்கை நியமிக்க வைத்தார்.  அப்போது கர்நாடக அரசு, இந்த நியமனத்தை எதிர்த்தபோது, ஜெயலலிதாவின் உதவிக்கு வந்தவர், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்.   அப்போது ஓய்வு பெற இருந்த நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு அளித்து, அவரேதான் இந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.  

ஒரு குற்றவாளி, ஒரு வழக்கில் யார் அரசு வழக்கறிஞர், யார் நீதிபதி என்று முடிவுசெய்யும் ஒரு அவலமான சூழலில், அந்த மனுக்களையும் விசாரணைக்கு ஏற்று உத்தரவு பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம்.  ஜெயலலிதாவின் கைப்பாவையாக செயல்பட்ட பவானி சிங், தன் பங்குக்கு இந்த வழக்கை தாமதப்படுத்த, எனக்கு உடல் நிலை சரியில்லை, ஐ யம் சஃப்பரிங் ஃப்ரம் பீவர் என்று அவர் வழக்கை தாமதப்படுத்த, சிறப்பு நீதிபதி மைக்கேல், பவானி சிங்கின் ஊதியத்தை அபராதமாக விதித்தார்.   அப்போதும் சளைக்காமல் உச்சநீதிமன்றம் சென்றார் பவானி சிங்.   அப்போதும் உதவிக்கு வந்த சதாசிவம், பவானி சிங்கின் உடல் நிலை குணமாகும் வரை, நான்கு வாரத்துக்கு சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க உதவி செய்தார்.


உச்சநீதிமன்றத்தை பீடித்திருந்த சதாசிவம் என்ற பீடை ஒழிந்த பிறகே, சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது.  இப்படி 18 ஆண்டுகளாக பல்வேறு தடைகளையெல்லாம் தாண்டி, ஒரு வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டிருந்தால், அதுவும் தமிழக முதல்வர் குற்றவாளியாக உள்ள வழக்கில் எவ்வளவு பெரிய தலைப்பு செய்தி இது ?  எட்டாம் பக்கத்திலும், ஒன்பதாம் பக்கத்திலும் போட வேண்டிய செய்தியா இது ?

சரி.  இதே ஊடகங்கள் எல்லா ஊழல் வழக்கிலும் இதே அளவுகோலை பின்பற்றுகின்றனவா என்று பார்க்க வேண்டும்.  கனிமொழி கைதானபோது, இந்த ஊடகங்கள், கனிமொழியின் ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு முடிவு செய்யும் வரை, தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன. ஆ.ராசா ராஜினாமா செய்தபோது, தினமணி ராசாநாமா என்று முதல் பக்க செய்தி வெளியிட்டது.  ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் ஒரு நியாயம் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஏன் வேறு நியாயம் ?



தலைப்பு செய்தியாக வெளியிட்டால், ஜெயலலிதா கழுத்தை சீவி விடுவாரா ? இல்லை கோபித்துக் கொள்வாரா ?

ஜெயலலிதாவின் மனம் புண்பட்டு விடக் கூடாதாம்.  காலையில் அவர் செய்தித்தாளைப் பார்க்கையில், முதல் பக்கத்தில் இந்த செய்தியைப் பார்த்தால் கோபம் வந்து விடுமாம்.   அதனால்தான் உள் பக்கங்களில்.  

இந்த ஊமை ஊடகங்களின் நாடகத்தைப் பார்த்தால், ஜெயலலிதா வீசும் விளம்பர எலும்புத்துண்டுகளுக்காக தங்கள் ஆன்மாவை விற்கத் தயங்காத ஊடகங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.   

Sunday, August 24, 2014

Judgment day


"Now judgment is upon this world; now the ruler of this world will be cast out." says the Bible (Mathew 13:49).



Whether a devout Christian is mindful of the judgment day or not, Tamil Nadu Chief Minister Jayaram Jayalalitha is very much worried over her own judgment day, for it could be nearing.

Senior Counsel B.Kumar concluded his marathon arguments on behalf of Jayalalithaa about a fortnight ago, and the arguments on behalf of Sasikala also are over.   Now arguments on behalf of P.K.Ilavarasi and Sudhakaran alone remain to be completed.

Senior Counsel B.Kumar
Informed sources say Jayalalithaa is very nervous about the fate awaiting her in the Bengaluru Special Court.  Jayalalitha tried her mighty best to stall the trial, but apparently beyond a point her tactics have failed to work.

Besides her favourite Judge P.Sathasivam has retired. The present CJI being a non-nonsense man and the next incumbent too being tough, the possibility of prolonging the trial courtesy the intervention of the Supreme Court is virtually nil. 

Not one to give up Jayallitha kept sending feelers to Modi, with a not-so-hidden plea to bale her out of the assets case, but in vain.

Such was her desperation that even before Finance Minister Arun Jaitley could complete his budget presentation, Jayalalitha issued a press release hailing it in effusive terms. Still the BJP regime was not too very impressed, and no help was forthcoming, even as the trial proceedings seemed to proceed remorselessly to their logical conclusion.

The all too sudden sacking of Dr. V Maithreyan as the floor leader of the party in the Rajya Sabha and stripping him of all party positions, tells its own tale.


Well, in Jaya’s wonderland whose head is ordered off when and for what is all unpredictable. But the New Delhi pointsman’s plight is traced to his inability to make the best of his past RSS connections.

He had crossed over to  the AIADMK from the BJP protesting the party’s alliance with the DMK back in 1999, but nursed his contacts well, it was thought.

Apparently Amma bet on it in her hour of crisis, but unfortunately for him and his leader, RSS would not care less. In any case PM Narendra Modi is his own man. And so Maithreyan’s efforts came a cropper, and he was promptly thrown out.

If indeed she is held guilty of accumulating assets disproportionate to known sources of her income, she risks not only losing her Chief Ministership and becoming ineligible to contest elections for several years, she could also be imprisoned for up to a maximum of 7  years. It is the jail prospect that looks most forbidding to her, sources claim.

Unlike Karunanidhi, who rose from the streets to reach his political pinnacle, Jayalalitha was born with a silver spoon, as a daughter of a popular actress.    Jayalalitha would never have felt what hunger was, and in her entire life she would not have walked for more than 500 metres at a stretch.  



During the first time Jayalaitha was incarcerated for 27 days, a rodent entered Jayalalitha's cell.    A shocked Jayalalitha screamed in fright.   Probably it was the first time Jayalalitha had seen a rodent.     During her incarceration in the old Chennai Prison on the banks of the Cooum river, into which the sewage of much of the city flows untreated, Jayalalitha suffered mosquito bites and was not able to sleep for several nights.  

Old Central Prison 
An erstwhile colleague of this author, who recorded her statement when she was in detention, recalls how she could spot reddish mosquito bite marks all over her face and arms. Apparently the Iron Lady hasn’t recovered from that trauma and would do anything not to undergo the trauma ever again. But not clear though whether the stars are in her favour, never mind the endless rounds of propitiation of the gods through poojas and havans.

She is haunted so much night and day by a possible adverse verdict, the administration itself has come to a virtual standstill. Many senior bureaucrats in private believe that they are able to perceive a last minute rush among the ministers in sealing under-the-table deals.     

The minute anyone mentions a scheme, ministers shamelessly asks how much can you get from this ?  And the urgency in collecting the booty is very palpable, say senior IAS officials. Of course Amma has surprised many time and again. A senior journalist and a keen political observer said, "Jayalalitha won the 2001 Assembly elections with a thumping majority but she was not even an MLA.  All her nominations to the four constituencies had been rejected.  Yet after the victory, she went to call on the then Governor Ms.Fathima Beevi.  While we were waiting for some sort of announcement about who else was going to be the Chief Minister, to our surprise, a press note was thrust in our hands, saying that Fathima Beevi had appointed Selvi J Jayalalitha as the Chief Minister and the swearing- in ceremony was scheduled to be held later that evening.    Not many knew a deal had been struck as early as September 2000.”

The Supreme Court did quash the appointment, but she managed to clear her name in the TANSI case, went on to contest a by-election and leap back to throne.

The TANSI case, relating to sale of government property to firms owned by Jayalaliathaa and her confidante Sasikala, was widely expected to go against her. It did at one stage, but the verdict was reversed in the High Court as observers gasped in disbelief.
So will Selvi Jayalalithaa prove lucky this time too?  Michael D. Cunha, the Special Judge hearing the assets case in Bengaluru, is said to be a hard nut to crack.   He was the only Judge to personally come down to Chennai and verify all the movable properties in the custody of the Court. He also  ordered the jewellery and other items same to be transferred to Bengaluru. 

What is giving Jayalalitha and co sleepless nights is, ironically, the time the judge seems willing to give her counsels to plead her case. Jayalalitha's counsel B.Kumar was allowed to take more than 25 working days to complete his arguments, and Sasikala's counsel Manikumar was given more than a fortnight. 

Special Judge Michael D Cunha


It is actually a ‘long-rope strategy,’ argues an advocate who should know. Things are  loaded very much against the Tamil Nadu, he asserts.

Ok, what if she comes out unscathed yet again? The journalist,  quoted above, recalls that when the ‘not guilty’ verdict came out in the TANSI case,  a man, thoroughly inebriated, thrust himself before the TV cameras in the Madras High Court complex and started slapping himself on the head furiously with his own chappals.

The journalist said, “May be I would repeat what the drunkard did!” All of us too with him!!


Saturday, August 23, 2014

The New Bandit Queen

Phoolan Devi, called the Bandit Queen, is dead, of course. But there are different avatars of the dreaded Devi, haunting the society all the time.

At least Phoolan Devi was oppressed by society; suffered sexual violence; and then decided to take the gun to protect herself. Thus banditry was perhaps forced on her.

But how about highly educated well-placed IAS officials looting like Phoolaan Devi and who still strut around as VVIPs? You will now get to read of one such unedifying saga.

A key player and beneficiary in the story is the Sri Ramachandra Medical College (SRMC), founded by the late Ramachandra Udayar, a liquor baron. He was known as MGR's benaami, and a pioneer of the private college business in Tamil Nadu.

It is ironic that the first two pioneers of the education business in TN are Udaiyar and Jeppiyaar, both of whom were liquor barons in their previous incarnations.

Even though this Ramachandra Medical College was apparently founded with MGR's money, Udaiyar got close to Karunanidhi too, in the tradition of many ‘businessmen.’ The relationship flourished even after Udayar’s death.

In February 2009, when the Eelam-related protests were at a peak in the state, the DMK chief took refuge in the SRMC, to escape the heat – his party was a constituent of the ruling UPA that studiously refused to intervene in Lanka, not wanting to prevent the decimation of the LTTE rebels, whereas Karunanidhi always sought to project himself as a savior of Tamils everywhere.
Karunanidhi after his purported surgery
In order to avoid taking any position then, he got himself admitted to the SRMC. He was then said to suffer from some spinal chord problem, making his critics jibe, “Does he have a spine in the first place to suffer from any disorder thereof?”

To get back to the story, a close relationship develops. No wonder then the SRMC benefits  immensely by the munificence of the Karunanidhi regime.

As part of the Tamil Nadu Housing Board’s "Neighborhood Housing Plan," the Karunanidhi government allocates 7.44 acres of prime land in Thiruvanmiyur, Chennai, an upper class suburb, to the SRMC.



First the Tamil Nadu Housing Board proposes to sell the land to the college at the rate of Rs.7.50 lakh per ground in 1998.But a senior government official revises it downwards to Rs.6.01 lakh, the rate at which lands in a neighbouring area had been sold by the government.

Learning about the rates proposed, the SRMC management tells the government that the rate of Rs.6.01 lakh  applies only to “developed lands,” whereas land being sold to it does not belong to that category. But a TNHB official baulks, insisting on market rates, and the matter is left in a limbo for a while, to be revived in 2005, when once again the TNHB harks back to the figure of Rs.6.01 lakh per ground.

A letter from the TNHB to the government,  this time decidedly sympathetic, suggests that since the SRMC is not performing any commercial activity, but only engaged in research activities, Rs.6.01 lakh could be an eminently reasonable rate.

Still, seven years after the original proposal, the college management bargains for a lower rate. Let it be no more than Rs.4.38 lakh per ground, they pray.

But the story had acquired a Kafkaesque air already – for the college was already in physical possession of the land whose sale was the subject of endless epistolary exchanges.  It was the CAG that unearthed the racket and criticized the government over the huge revenue loss in the process. Still nothing happens.

Things seem to move again when Karunanidhi comes back to power in 2006. Citing the CAG audit, the government fixes the price at  Rs.6.01 lakh per ground. By an order passed  on 3 March 2007, the TNHB is also solemnly ordered to collect an interest of 9.5% from 1998.

But Kafka is Kafka after all. The order remains unimplemented while the SRMC continues to occupy the land in question.

The Kafka world at last is dragged into the modern times thanks to our very virtuous version of the Bandit Queen, better known as Ms Sheela Balakrishnan.
Sheela Balakrishnan IAS (retired) 

This highly resourceful and well-connected former IAS official had been a Chief Secretary of Tamil Nadu Government. Superannuation is for lesser mortals. So after her nominal retirement, she is re-engaged by the Jayalalithaa government , as an advisor.

She had been close to DMK ministers such as Arcot Veersamy, but still could ingratiate herself with Her Majesty Jayalalitha too in no time.


And it is she who swings the deal in favour of the SRMC management. It was all altruistic of course. Only on the side she ensures that her seemingly ne’er-do-well son, studying in that college, clears all his arrears at one go and  moves on to post-graduation in eye surgery.
Narayanan Balakrishnan MS (Ophthalmology) 
And only after the meaningless rules and norms in the way of the dear son of Sheela are cleared the TNHB land transaction is formalized.

So then at Ms Sheela Balakrishnan’s instance,  the Tamil Nadu Housing Board’s executive committee (?) met on 1 July 2014 and passed a resolution that 7.44 acres of land be made over to the SRMC at a rate of Rs.6 lakhs per ground.

Thus on 15 July 2014, the Tamil Nadu Housing Board sold the land to the Sri Ramachandra Medical Trust for Rs.33.46 crore.

But look at this. On 14 June 2012, a 513 sq.ft plot had been sold in Konkaiyamman Street, Thiruvanmiyur for Rs. 83,500 rupees, that is a sq ft going for Rs.5818, which, in turn, means the cost of a ground would be Rs.1,39,63,200.

By the same token for 7.44 acre sold two years later, constituting 135.2 grounds as it did, the cost should have been a whopping Rs. 188, 78, 24, 640 rupees. But instead of  Rs.188.78 crore the state government settles for a measly Rs.33.46 crore. Who is now to answer for a loss of over Rs.150 crore to the exchequer?

It may also be pertinent to note here that when the CBI raided the residence of Mr R Venkatachalam, Chancellor of the Sri Ramachandra Medical College, last year, they stumbled upon the following:
SRMC Chairman Venkatachalam
TN 07 BP 3999    BMW (3301)
TN 07 AK 3999   Jaguar Silver Grey (S Type)
TN 06 A 3999    PRADO WHITE LAND CRUISER
TN 28 AX 3999   SKODA
TN 09 AQ 5      BMW Dark Cream colour
TN 07 AM 3999   S 329 Mercedes Benz
KL 03 D 9010     S 600 Mercedez Benz
TN 07 BM 3999   BMW Light Brown
TN 06 B 3999    Mercedes Benz Silver Grey
TN 22 CT 3999   Mahindra XUV
TN 20 S 3999    Toyota Qualis   

The man obviously is rolling in the wealth of huge capitation fees collected from students year after year. It is on such a man and his institution the government takes  pity and sells precious land at dirt cheap rates.

Who all benefited in the process apart from Sheela herself is a matter of speculation. And how much Jayalalithaa herself was kept in the loop is not clear either. All that is known is it was Sheela Balakrishnan, supposed to enjoy the full confidence of the Chief Minister, who rushed deal through.

Such is Sheela’s clout the tenure of her secretary, Venkataramanan, another retired IAS official, has been extended by five years.



Sheela Balakrishnan, DGP Ramanujam and Venkatramanan are the troika in charge, we learn. Of course of the three the first one wields power most and the loot goes on unchecked.

Thursday, August 21, 2014

பான்டிட் குயின்.


பான்டிட் குயின் என்று அழைக்கப்பட்ட பூலான் தேவிதான் இறந்து விட்டாரே..... இப்போது அவரைப் பற்றி எதற்கு என்று யோசிப்பீர்கள்.  இது இறந்து போன பான்டிட் குயின் பூலான் தேவி பற்றியது அல்ல.  பூலான் தேவி இந்த சமூகத்தால் ஒடுக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, துப்பாக்கி மட்டுமே நமக்கு பாதுகாப்பைத் தரும் என்று, வேறு வழியில்லாமல் கொள்ளையடிக்கத் தொடங்கினார்.  

ஆனால் ஐஏஎஸ் படித்து விட்டு, கொள்ளையடிக்கும் பூலான் தேவிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அப்படி ஒரு பூலான் தேவியின் கொள்ளை குறித்த கட்டுரைதான் இது. 

ராமச்சந்திரா மருத்துவமனை.  இந்த மருத்துவமனையின் வரலாறு தெரியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு.  ராமசாமி உடையார் என்ற சாராய அதிபர் தொடங்கிய கல்லூரி இது.  இவர் மறைந்த எம்.ஜிஆரின் பினாமி.   இன்று தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் கல்வித் தந்தைகளுக்கெல்லாம் முன்னோடி.   முதன் முதலில் தனியார் கல்லூரிகளைத் தொடங்கிய ராமசாமி உடையாரும், ஜேப்பியாரும் சாராயத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்பது ஒரு சுவையான ஒத்திசைவு. 



இந்த ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி எம்ஜிஆரின் பணத்தால் தொடங்கப்பட்டாலும், எல்லா அயோக்கியர்களையும் போலவே, இவர் கருணாநிதியோடும் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.  கொள்ளையடிப்பவர்கள், ஊழல் பெருச்சாளிகளுக்கு எந்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன ?

நாளடைவில், எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்ததை விட, கருணாநிதியோடு மிகுந்த நெருக்கமானது ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகம். இந்த நெருக்கம் எந்த அளவுக்கான நெருக்கம் என்றால், பிப்ரவரி 2009ல், ஈழம் தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தபோது, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது, முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை என்று ராமச்சந்திரா மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் கருணாநிதி.   அவருக்கு முதுகுத்தண்டே இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அவர் அரசியல் சிக்கல்களை சமாளிக்கவே அவ்வாறு சென்று படுத்துக் கொண்டார் என்பதும், அவருக்கு அறுவை சிகிச்சை எதுவுமே நடைபெறவில்லை என்பதுமே உண்மை. இது போன்ற நாடகங்களையெல்லாம் நடத்த முழுக்க ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய அளவுக்கு ராமச்சந்திரா நிர்வாகமும், கருணாநிதியும் நெருக்கம். 

அறுவை சிகிச்சை முடித்த கருணாநிதிக்கு ஆறுதல் சொல்லும் மாலடிமை மற்றும் கோ.க.மணி
1990ம் ஆண்டு, திருவான்மியூரில் அருகாமை வீட்டு வசதித் திட்டம் என்று ஒரு திட்டத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடங்குகிறது.  அந்த இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களையும் கையகப்படுத்தி, வீட்டு வசதி வாரியம் மூலமாக விற்பனை செய்வதுதான் திட்டம்.  

அப்படி கையகப்படுத்தி விற்பனை செய்து, விற்காமல் அரசு கையிருப்பில் வைத்திருந்த எஞ்சிய நிலங்களைத்தான் நக்கீரன் காமராஜ், ஜாபர் சேட் போன்றோர் ஆட்டையைப் போட்டனர்.  

இப்படி குடியிருப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டு மனைகளை மொத்தமாக 7.44 ஏக்கரை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு கருணாநிதி அரசு 1998ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து ஒரு அரசாணையை வெளியிடுகிறது.  அதே ஆண்டில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அரசுக்கு எழுதிய கடிதத்தில், அப்போது, 1998ல் இருந்த விலை நிலவரத்தின்படி, ஒரு கிரவுன்டு 7.50 லட்சத்துக்கு ராமச்சந்திராவுக்கு கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது. அதற்கு கருணாநிதி அரசின் வீட்டு வசதித் துறை செயலர், பதில் கடிதம் எழுதுகிறார்.   பெசன்ட் நகர் விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துகையில் ஒரு கிரவுன்டு 6.01 லட்சத்துக்குத்தான் கையகப்படுத்தப்பட்டது.  அதனால் ராமச்சந்திராவுக்கும் அதே விலைக்குத்தான் வழங்க வேண்டும் என்று அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடிதம் எழுதுகிறார்.  

அந்த அரசாணை

இந்த விபரத்தை அறிந்து கொண்ட, ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர், 30.10.1998 அன்று அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில், 6.01 லட்சம் விலை என்பது, நிலத்தை மேம்படுத்தப்பட்டால் (Land development charges) மட்டுமே கொடுக்க வேண்டிய விலை.  வீட்டு வசதி வாரியம் அந்த இடத்தில் எந்த மேம்படுத்தலும் செய்யவில்லை. ஆகையால், விலையை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.   (காசே இல்லாத ஏழையல்லவா உடையார் ? )

22.12.1998 அன்று எந்த காரணத்துக்காக நிலம் ஒதுக்கப்பட்டதோ, அதற்கேற்றவாறு, வீட்டு வசதி வாரியமே நிலத்தின் விலையை நிர்ணயம் செய்யலாம் என்று அரசு, வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறது.  அப்போது ஏதோ நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக இருந்திருக்கிறார் போலும்.  வணிகப்பகுதி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சந்தை விலையின்படி, வளர்ச்சிக் கட்டணம் நீங்கலாக, ஒரு கிரவுன்டுக்கு 17.70 லட்சம் விலை நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரை செய்து, ஒரு விரிவான கடிதத்தை அரசுக்கு 7 செப்டம்பர் 1999 அன்று எழுதுகிறார்.  

அதற்குப் பிறகு இந்தக் கோப்பு என்ன காரணத்தாலோ அப்படியே கிடப்பில் போடப்படுகிறது.  மீண்டும் 2005ல், இக்கோப்பு மீண்டும் உயிர் பெறுகிறது.  ஆறு ஆண்டுகள் கழித்து, உயிர்பெறும் இக்கோப்பில் அரசு வீட்டு வசதித் துறை செயலாளர், மீண்டும் வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறார்.  அந்தக் கடிதத்தில் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வணிக ரீதியாக எந்தச் செயலையும் செய்யவில்லை.   அவர்கள் வெறுமனே ஆராய்ச்சிப் பணிகள் மட்டுமே செய்கிறார்கள்.  (கருணாநிதிக்கு முதுகுத்தண்டு இருக்கிறதா இல்லையா என்பது போன்ற ஆராய்ச்சி) ஆகையால் அவர்களுக்கு 6.01 லட்சத்துக்கே நிலத்தை வழங்கலாம் என்று வீட்டு வசதி வாரியத்துக்கு கடிதம் எழுதப்படுகிறது. ஆனால், இதற்கிடையே, சோற்றுக்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள், ஒரு கிரவுண்டை 4.38 லட்சத்துக்கே தர வேண்டும் என்று அரசை கெஞ்சிக்கெஞ்சிக் கேட்கிறார்கள். 

சர்ச்சைக்குரிய அந்த நிலம்

இதற்கிடையே மத்திய தணிக்கையாளரின் தணிக்கை நடைபெறுகிறது.  அவர்கள் தங்கள் தணிக்கை அறிக்கையில், ஒதுக்கப்பட்ட நிலம் ஏற்கனவே ராமச்சந்திரா கல்லூரியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.  ஆனால், நிலத்துக்கான விலை இது வரை அக்கல்லூரியிலிருந்து பெறப்படாமலேயே உள்ளது.  இதனால், வீட்டு வசதி வாரியத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பு எழுதினார்கள்.  இந்த தணிக்கை ஆண்டு 2002-2003. 

இதைக் காரணமாக காட்டி, அடுத்து மீண்டும் திமுக ஆட்சி வந்ததும்,  அந்த நிலத்தில் ஒரு கிரவுன்டின் விலை வெறும் 6.01 லட்சம்தான் என்று அரசு உத்தரவிடுகிறது.   உத்தரவிட்டு, 3 மார்ச் 2007 அன்று, நிலத்தை 6.01 லட்சம் என்று கணக்கிட்டு, 1998ம் ஆண்டு முதல் வருடத்துக்கு 9.5% விகித வட்டியில் நிலத்தின் விலையை நிர்ணயம் செய்து, உடனடியாக நிலத்துக்கான தொகையை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது. 

ஆனால், திமுக ஆட்சி முடிந்த மே 2011 வரை, இந்த உத்தரவு செயல்படுத்தப்படவேயில்லை.     

வழக்கமாக திமுக ஆட்சியில், ராமச்சந்திராவுக்கு சாதகமாக வேலைகள் வேக வேகமாக நடப்பது சகஜமே.  ஆனால் அதிமுக ஆட்சியில் மின்னல் வேகமாக வேலைகள் நடந்துள்ளது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். 

இந்த இடத்தில்தான் கதையின் ஹீரோயினான பான்டிட் குயின் நுழைகிறார். இது ஒரு ஆன்டி ஹீரோயின் கதை.  ஆன்டி ஹீரோயின் கதை என்றதும் ஹீரோயின் ஆன்டியா என்று அதிகப்பிரசங்கித்தனமாக கேட்கக் கூடாது. 

கருணாநிதி ஆட்சியில் செய்ய முடியாத வேலையை, ஜெயலலிதா ஆட்சியில் சர்வ சாதாரணமாக செய்து முடித்துள்ளார் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் தாளாளர் வெங்கடாச்சலம். அப்படி அவர் செய்து முடிக்க உதவியவர்தான் இக்கதையின் ஹீரோயின். 

கருணாநிதியின் வசனத்தில் வந்த பிரபலமான திரைப்படம் மனோகரா. இத்திரைப்படத்தில் வரும் வில்லியான வசந்தசேனையை சித்தரிக்க வசனம் எழுதியிருப்பார் கருணாநிதி. "வட்டமிடும் கழுகு, வாய் பிளக்கும் ஓநாய், காலை சுற்றி வளைக்கும் மலைப்பாம்பு" என்று. அந்த வசனம் முழுமையாக யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ...  இந்தக் கதையின் கதாநாயகிக்கு முழுமையாக பொருந்தும். 

போதும்டா உன் பில்டப்.  ஹீரோயின் என்ட்ரி என்று வாசகர்கள் துடிப்பது தெரிகிறது. அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல.  தமிழக அரசில் தலைமைச் செயலாளராக இருந்து, தற்போது தலைமைச் செயலாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள ஷீலா பாலகிருஷ்ணன்தான் அந்த பான்டிட் குயின் மற்றும் வசந்தசேனை. 

ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் (ஓய்வு)
தலைமைச் செயலாளராக இருப்பவர்கள் ஓய்வு பெறும் தருவாயில் வழக்கமாக பதவி நீட்டிப்பு அளிப்பார்கள்.  ஆனால் பான்டிட் குயின் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, பதவி நீட்டிப்புக்கு பதிலாக, புதிதாக ஒரு பதவியை உருவாக்கி, அந்தப் பதவியில் உட்கார வைத்து அழகு பார்த்து வருகிறார் ஜெயலலிதா.  தலைமைச் செயலாளர் பதவி என்பது, ஒரு மாநிலத்தின் உயர்ந்த பதவி.  ஐஏஎஸ் அதிகாரிகளுக்கெல்லாம் தலைவர் அந்தப் பதவி. ஆனால், அந்தப் பதவிக்கு மேலாக ஆலோசகர் என்ற பதவியை உருவாக்கி வைத்துள்ளார் ஜெயலலிதா.  அந்த ஆலோசகர் பதவியில் அமர்ந்து கொண்டு, ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆண்டு கொண்டிருக்கிறார் ஷீலா.  

கூழைக் கும்பிடு போடுவதில் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு நிகரே கிடையாது. ஓ பன்னீர் செல்வமே பிச்சை வாங்க வேண்டும். அவர் இடுப்பை வளைத்து கூழைக் கும்பிடு போடும் அழகே தனி.  இவர் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் இப்படி கூழைக் கும்பிடு போடுகிறார் என்றில்லை.  



திமுக ஆட்சியில் ஒரு சாதாரண அமைச்சராக இருந்த கீதா ஜீவனுக்கு எப்படி கூழைக் கும்பிடு போடுகிறார் என்று பாருங்கள்.  திமுக ஆட்சி காலத்தில், அமைச்சர்கள் துரை முருகன் மற்றும், ஆற்காடு வீராச்சாமி ஆகியோருக்கு ஷீலா மிகுந்த நெருக்கமானவர்.  இந்த விஷயங்களையெல்லாம் அறியாமல், இந்த ஷீலா பாலகிருஷ்ணன் சொல்வதையெல்லாம் கேட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்.  


ஷீலா மற்றும் பாலகிருஷ்ணன் தம்பதியினருக்கு இரு மகன்கள். அதில் ஒரு மகன் பெயர் நாராயணன் பாலகிருஷ்ணன். மற்றொரு மகன் அமெரிக்காவில் உள்ளான்.  

பாலகிருஷ்ணன் மற்றும் அவரது இரு மகன்கள்
சென்னையில் உள்ள மகனான நாராயணன் பாலகிருஷ்ணன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.   மன்னிக்கவும். முடிக்கவில்லை.   எம்பிபிஎஸ் படித்துக் கொண்டே இருந்தார்.  இறுதி ஆண்டில், பல பேப்பர்களில் அரியர்கள்.   இப்படி அரியரோடு இருந்தால் எப்படி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் ஆக முடியும் ?   சாதாரணமான பெற்றோர்களுக்கு பிறந்திருந்தால், படித்துத்தான் பாஸாக முடியும். ஆனால் ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பான்டிட் குயினின் மகனாக பிறந்திருந்தால் எதற்காக படிக்க வேண்டும் ?  இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்.... எதற்காக படிக்க வேண்டும் ?

மருத்துவர் நாராயணன் பாலகிருஷ்ணன்
பெயிலான தன் மகனை முதுகலை படித்து அறுவை சிகிச்சை நிபுணராக்க வேண்டும் என்று விரும்பிய பாலகிருஷ்ணன் மற்றும் ஷீலா தம்பதியினர், நான்கு மாதங்களுக்கு முன்னால் நேரடியாக ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலத்தை சந்திக்கின்றனர்.  சந்தித்து தங்கள் மகன் குறித்த விபரங்களை பேசியதும், இது உங்கள் கல்லூரி.  உங்கள் மகன் மருத்துவராகா விட்டால் வேறு யார் ஆக முடியும் என்று, நிகர் நிலை பல்கலைக்கழகம் ஆதலால், உடனடியாக எம்பிபிஎஸ்ஸில் பாஸ் போட்டு, முதுகலை கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கான சீட்டில் இலவசமாக படிக்க வைக்கிறார் வெங்கடாச்சலம்.   

பல்வேறு பரிமாணங்களில் கண் மருத்துவர் நாராயணன் பாலகிருஷ்ணன்

அம்மாவின் கார் மீது மகன்கள்

சில மாதங்கள் கழித்து, நாராயணன் படிப்பை தொடங்கியதும், ஷீலாவை சந்தித்து தன்னுடைய பிரச்சினையை எடுத்துச் சொல்கிறார் வெங்கடாச்சலம். மிக மிக கடுமையான வறுமைச் சூழலில் இருக்கும் தனக்கு சேர வேண்டிய 7.44 ஏக்கர் நிலத்தை திமுக அரசு பத்திரப் பதிவு செய்து தராமல் எப்படி ஏமாற்றி வயிற்றில் அடித்தது என்ற விபரங்களை கூறுகிறார்.  வெகுண்டெழுந்த ஷீலா உடனடியாக இதை நான் முடித்துத் தருகிறேன் என்கிறார்.   

உடனடியாக களத்தில் இறங்குகிறார் ஷீலா.  ஷீலா, ஜெயலலிதாவை விட அதிக அதிகாரத்தோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார்.  தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள மோகன் வர்கீஸ் சுங்கத், ஷீலா பால கிருஷ்ணனை ஒரு நாளைக்கு 10 முறைக்கு மேலாக சென்று, அவர் அறையில் பார்த்து, அறிவுரை பெறுகிறார்.   ஒரு ஓய்வு பெற்ற அதிகாரியின் கீழ் வேலை பார்க்கும் இந்த துர்பாக்கிய நிலை, தமிழகத்தில் ஒரு நாளும் எந்த அதிகாரிக்கும் வந்தது கிடையாது.  



இப்படி நிழல் முதல்வராகவும், ஜெயலலிதாவின் கண்களும், காதுகளுமாகவும் செயல்படும் ஷீலா சொன்ன பிறகு எதிர் கேள்வி கேட்பதற்கு தமிழகத்தில் யாராவது உள்ளனரா என்ன ?  

ஷீலா பாலகிருஷ்ணன் சொன்னதும், உடனடியாக, தமிழக வீட்டு வசதி வாரியக் கூட்டம் 1 ஜுலை 2014 அன்று கூட்டப்படுகிறது. 1998ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெறும் ஆறு லட்ச ரூபாய்க்கு 7.44 ஏக்கரை ராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளைக்கு கிரையம் செய்து, விற்பனைப் பத்திரம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றப்படுகிறது. 

வீட்டு வசதி வாரிய தீர்மானம்

14 ஜுலை 2014 அன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ அறக்கட்டளையின் பெயருக்கு 7.44 ஏக்கர் நிலத்தை 33 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. 

விற்பனை பத்திரம்

7.44 ஏக்கரில் மொத்தம் 744 சென்டுகள். ஒரு கிரவுன்ட் ஐந்தரை சென்ட் என்று கணக்கிட்டால், 135.2 கிரவுண்டுகள் வருகின்றன. 33.46 கோடியை 35.2ஆல் வகுத்தால், ஒரு கிரவுன்டின் விலை 24 லட்சத்து, 75 ஆயிரத்து 436 ரூபாய் வருகிறது. 

14 ஜூன் 2012 அன்று திருவான்மியூரிலேயே உள்ள கெங்கையம்மன் நகரில் 513 சதுர அடி மனை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.   அந்த 513 சதுர அடி வீட்டு மனைக்கு கொடுக்கப்பட்ட விலை 23 லட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாய்.   இந்த விலையை ஒரு உதாரணத்துக்காக அளவுகோளாக கொண்டால், ஒரு சதுர அடியின் விலை, 2012ம் ஆண்டு உள்ளபடி, ஒரு சதுர அடி 5818 ரூபாய் வருகிறது.  ஒரு சதுர அடி 5818 ரூபாய் என்று வைத்துப் பார்த்தால் கூட, ஒரு கிரவுன்ட் ஒரு கோடியே 39 லட்சத்து 63 ஆயிரத்து 200 ரூபாய் வருகிறது.   


அப்படிப் பார்த்தால், 135.2 கிரவுண்டுகளுக்கு எவ்வளவு வாங்கியிருக்க வேண்டும் ? 188 கோடியே 78 லட்சத்து 24 ஆயிரத்து 640 ரூபாய் வாங்கியிருக்க வேண்டும்.  இப்படி சலுகை விலையில் எதற்காக வெங்கடாச்சலத்துக்கு இந்த நிலத்தை ஷீலா பாலகிருஷ்ணன் அவசர அவசரமாக விற்க வேண்டும் ? அரசு விதித்துள்ள மதிப்பின்படியே வைத்துக் கொண்டாலும் இந்த நிலம் குறைந்தபட்சம் 189 கோடிக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  

2008ல் ராமச்சந்திராவுக்கு ஒதுக்கப்பட்ட அதே பகுதியில் அமைந்துள்ள 4756 சதுர அடி வீட்டு மனை முன்னாள் உளவுத் துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டின் மனைவி பர்வின் ஜாபர் பெயருக்கு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.   அதற்காக அவர்கள் செலுத்திய தொகை 1 கோடியே 15 லட்சத்து 9 ஆயிரத்து 520 ரூபாய்.  இந்த 2008 கணக்கின் படி எடுத்துக் கொண்டால் கூட ஒரு கிரவுன்டின் விலை 58 லட்சம் ஆகிறது.  அப்படி இருக்கையில் ராமச்சந்திரா கல்லூரிக்கு, 24 லட்சத்துக்கு (1998 முதல் வட்டியுடன் சேர்த்து, வட்டி சேர்க்காவிட்டால் ஒரு கிரவுன்ட் வெறும் 6 லட்சம் மட்டுமே) எதற்காக விற்பனை செய்யப்பட வேண்டும் ?

ஜாபர் சேட் மனைவிக்கு வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட டிதம்

எதற்காக 150 கோடியை தள்ளுபடி செய்து விட்டு, இத்தனை அவசரமாக இந்த நிலத்தை விற்பனை செய்தார் ஷீலா ?  

ஷீலா இப்படி மலிவு விலையில் 7.44 ஏக்கர் நிலத்தை வழங்கிய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம் எவ்வளவு பெரிய ஏழை தெரியுமா ?
வெங்கடாச்சல உடையார்
கடந்த ஆண்டு வெங்கடாச்சலத்தின் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், வெங்கடாச்சலத்தின் வீட்டில் இருந்து கீழ் கண்ட வெளிநாட்டுக் கார்கள் நிற்பதை கண்டறிந்தனர்.
TN 07 BP 3999    BMW (3301)
TN 07 AK 3999   Jaguar Silver Grey (S Type)
TN 06 A 3999    PRADO WHITE LAND CRUISER
TN 28 AX 3999   SKODA
TN 09 AQ 5      BMW Dark Cream colour
TN 07 AM 3999   S 329 Mercedes Benz
KL 03 D 9010     S 600 Mercedez Benz
TN 07 BM 3999   BMW Light Brown
TN 06 B 3999    Mercedes Benz Silver Grey
TN 22 CT 3999   Mahindra XUV
TN 20 S 3999    Toyota Qualis    

இவற்றில் வெளிநாட்டுக் கார்களை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இப்படிப்பட்ட ஒரு பரம ஏழைக்குத்தான் மலிவு விலையில் 7.44 ஏக்கரை சுத்த விக்கிரக் கிரயம் செய்து தந்திருக்கிறார் ஷீலா.

இந்த அவசர பேரத்தை தொடக்கம் முதலே நடத்தி முடித்தது ஷீலா மற்றும் பாலகிருஷ்ணன் தம்பதியினர்.    வீட்டு வசதித் துறை செயலர், வீட்டு வசதி வாரியம், அதன் மேலாண் இயக்குநர் ஆகிய அனைவருக்கும் சொல்லப்பட்ட செய்தி, முதல்வர் இதை முடிக்கச் சொன்னார் என்பது மட்டுமே.   இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவிடம் நேராகச் சென்று இதை சரிபார்க்கவா முடியும்.  அப்படி எளிதாக அதிகாரிகளை சந்திப்பவரா ஜெயலலிதா ?  இந்த துணிச்சலில்தான் பான்டிட் குயின் இந்த பேரத்தை நடத்தி முடித்துள்ளார். 

அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை செய்ததில், ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்கிறார்கள்.    இந்த பேரத்தில் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஒரு வீட்டு மனைக்கு 6 லட்சம் வீதம்,  கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.  வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கத்துக்கு ஒரு மனைக்கு 12 லட்சம் வீதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்,  இந்தத் தொகையை வைத்தியலிங்கம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமாரும் பிரித்துக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.  இது தவிர கட்சி நிதியாக தனியாக ஒரு தொகை பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகளுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு என்னவென்றால், இந்த விவகாரம் ஜெயலலிதாவுக்கு தெரிந்து நடந்துள்ளது என்று ஒரு தரப்பும், இல்லை, பான்டிட் குயின் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இதைச் செய்துள்ளார் என்று இன்னொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை கூறுகிறார்கள். 

ஆனால், ஜெயலலிதா இன்று இருக்கும் நிலையில், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய நிலையில் இல்லை என்பதே உண்மை.   அவரது செயலாளர் வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் சொல்வதே வேதவாக்கு என்ற நிலைக்கு தள்ளப்பட்டு கூண்டுக்கிளியாக உள்ளார் அவர். 

வெங்கட்ரமணனும் ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.  அவருக்கு ஐந்தாண்டு பணி நீட்டிப்பு அளித்து பதவியில் அமர்த்தியுள்ளார் ஜெயலலிதா. வெங்கட்ரமணன், ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவர்.  ஆனால் இவர்தான் அதிகாரம் மிக்கவர். 

இந்த வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் டிஜிபி ராமானுஜம் ஆகிய மூவரும்தான் தமிழகத்தையே ஆட்டிப் படைக்கிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள்.   இதில் மூன்று பேருமே ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   கிட்டத்தட்ட அரசு நிர்வாகம் ஒரு முதியோர் இல்லம் போல மாறியுள்ளது என்றால் அது மிகைச்சொல் அல்ல. 


காவல்துறை வட்டாரங்களில், ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ராமானுஜமே பயப்படுகிறார் என்றே கூறுகின்றனர்.  சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜின் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும், சென்னையில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ஜார்ஜ் மாற்றப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம், இந்த பான்டிட் குயின்தான் என்கிறது காவல்துறை வட்டாரம்.  ஷீலா பாலகிருஷ்ணனும் ஒரு மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது.   ஜார்ஜ் குட்டி மலையாளி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  

இந்த ஷீலா பாலகிருஷ்ணன், ஜார்ஜுக்கு ஆதரவாக, டிஜிபி ராமானுஜத்தையே மிரட்டுகிறார் என்றும், ராமானுஜம் யதார்த்த நிலவரத்தை புரிந்து கொண்டு நடந்து கொள்கிறார் என்பதும் கூடுதல் தகவல்கள்.   ஷீலா தவறு செய்கிறார் என்று ராமானுஜம் நாளைக்கே ஒரு அறிக்கை அனுப்பினாலும், அந்த அறிக்கை ஷீலாவின் கண்களைத் தாண்டி ஜெயலலிதாவை அடைய முடியாது.  அப்படி ஒரு அறிக்கையை அனுப்பி விட்டு, ராமானுஜம் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்பது முகத்தில் அறையும் உண்மை. 

நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி ஆகிய இரண்டு மட்டுமே ஊடகங்கள் என்று தன்னுடைய அறிக்கைகளையும், தன்னுடைய படங்களையும் பார்த்துப், பார்த்து புளகாங்கிதம் அடையும் ஜெயலலிதாவின் கண்களுக்கு உண்மை நிலவரத்தை கூறிப் புரிய வைக்க, தமிழகம் முழுக்க ஒரு நாதியும் இல்லை என்பதே வேதனையான உண்மை. 

ஜெயலலிதா மணலில் முகம் புதைத்துள்ள நெருப்புக் கோழியாக இருக்கும் வரை, ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற பான்டிட் குயின்களின் கொள்ளைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.