Flash News

Monday, August 31, 2009

ஏ.கே.விஸ்வநாதன், ஐபிஎஸ் மீது ஊழல் புகார்


ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்


தமிழகத்தில் ஐஜி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியான ஏ.கே.விஸ்வநாதன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. சிபிஐன் ஊழல் ஒழிப்புப் பிரிவில் 5 ஆண்டுகள் எஸ்பியாகவும், டிஐஜியாகவும் பணியாற்றி, பின்னர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் இணை இயக்குநராகவும் பின்னர் சென்னை மாநகர கூடுதல் ஆணையாளராக பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் மீது, திடுக்கிடும் ஊழல் புகார் எழுந்துள்ளது.

பிப்ரவரி 19ல் நடந்த வழக்கறிஞர்கள் மீதான கொடும் தாக்குதலில் பங்கேற்று, பல வழக்கறிஞர்கள் படுகாயமடைய காரணமாக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், கடந்த ஜூன் மாதத்தில், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருக்கும் அழகிரிக்கு சிறப்புச் செயலாளராக நியமிக்கப் படுவதாக தகவல்கள் வந்தன.

இந்த நியமனத்திற்கு பிரதமர் தலைமையிலான நியமனக் குழுவின் ஒப்புதல் வேண்டும் என்பதால், அதன் முதற்படியாக டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப் பட்டார்.

பிரதமர் தலைமையிலான நியமனக் குழு ஏ.கே.விஸ்வநாதன் மீது, ஏராளமான நிலங்கள் வாங்கிக் குவித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, விஸ்வநாதன் நியமனத்தை தள்ளுபடி செய்தது. உடனடியாக ஏ.கே.விஸ்வநாதன் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு ஏ.கே.விஸ்வநாதன் மீது வருமானத்திற்கு அதிகமாக ஏறக்குறைய 25 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.
இப்புகாரை ஏற்று, தலைமைச் செயலாளர், விழிப்புப் பணி ஆணையர் மற்றும் உள்துறை செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழு, ஏ.கே.விஸ்வநாதன் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாக, காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணையின் பின்னணியாக காவல்துறையில் நடைபெற்று வரும் கடும் பனிப்போர் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு அப்போதைய ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு என்று ஏ.கே.விஸ்வநாதன் மனுத் தாக்கல் செய்த நிலையில், காவல் துறையில் பல அதிகாரிகள் விஸ்வநாதனுக்கு எதிராக திரும்பியுள்ளதாகவும், காவல் அதிகாரிகள் மீதான இன்னும் பல ஊழல் புகார்கள் வெளிவரும் என்றும் விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பனிப்போரில் வெற்றி பெற வேண்டும் என்று நோக்கத்தில், தங்களுக்கு சாதகமான அதிகார மையங்களை இந்த அதிகாரிகள் அணுகி காய் நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பனிப்போரின் விளைவாக இந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி குற்றம் சொல்வதிலிருந்து, இந்த அதிகாரிகள் யாரும் யோக்கியம் இல்லை, அனைவருமே கறை படிந்த கரங்கள் கொண்டவர்கள் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் பல தகவல்களோடு, மீண்டும் தங்களை சந்திக்கிறேன்.



/ஒப்பாரி/

Sunday, August 30, 2009

தமிழக காவல்துறையில் உள்குத்து....!




கடந்த பிப்ரவரி 19 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த வழக்கறிஞர்கள் மீதான கொடூர தாக்குதலை நாம் மறந்திருக்க இயலாது.




ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமும் இணைந்து, இத்தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பியும், போராடியும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராகவும் கருணாநிதி அரசு மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.



பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து, அவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் தனக்கு சம்பவம் பற்றி மாலை 4 மணிக்கு தகவல் வந்தது என்றும், அதற்குப் பிறகு மாலை 5.14 மணிக்குத் தான் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அதற்கு முன் நடந்த தடியடி மற்றும் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு அப்போதைய இணை ஆணையர் ராமசுப்ரமணியன் மற்றும் கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரும் தான் முழுப் பொறுப்பு என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.




இவரின் அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், இணை ஆணையர் ராமசுப்ரமணியன் மற்றும் கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு, இவர்கள் இருவர் மீதும் துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.


மார்ச் 18 அன்று இத்தீர்ப்பு வெளியானதும், மறுநாளே கருணாநிதி, வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன், ஆனால், பாதிக்கப் பட்ட அதிகாரிகள் நீதிமன்றம் சென்று நிவாரணம் பெறுவதற்குத் தடையில்லை என்று கூறினார்.




மார்ச் 19 அன்று தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று தங்களுக்கு நியாயம் கிடைத்து விட்டது என்று கருதி வெற்றிப் பேரணி நடத்தினார்கள். ஆனால் பனங்காட்டு நரியான கருணாநிதி, வழக்கறிஞர்களைவிட காவல்துறைதான் தனக்கு முக்கியம் என்று, ஏறக்குறைய 4 மாதங்களாக அந்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாமல், “பெண் சிங்கம்“ “சுருளி மலை“ போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதும் அதிமுக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.



இதே காவல்துறை 2001ல் நள்ளிரவில், கருணாநிதியின் கையை முறுக்கி கைது செய்து அழைத்துச் சென்றதை கருணாநிதி வசதியாக மறந்து விட்டார்.


">"
"அய்யோ கொலை பண்றாங்க" நாடகத்தில் இருந்து ஒரு காட்சி


நெடுநாட்களாக விசாரணைக்கு வராமல் இருந்த இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இவ்வழக்கு 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியம் உட்பட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த வியாழனன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது, ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.



அந்த அறிக்கையில், ஏற்கனவே ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த அறிக்கைக்கு மாறாக, தானும், உடன் இருந்த இணை ஆணையர்களும், வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டாம், இருக்கும் காவலர்களை அழைத்துக் கொண்டு வெளியே போய் விடலாம் என்று கூறியதாகவும், அதைக் கேட்காமல், ராதாகிருஷ்ணன் தடியடி நடத்த உத்தரவிட்டதாகவும், கூறியுள்ளார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்

“வித்தாரக் கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம்“ என்று.

கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஒன்றும் புனிதர் இல்லை என்றாலும், நீதியரசர்களுக்கென்று தனியான பாதை வழியாக உள் நுழைந்து நீதிமன்றக் கட்டிடத்தினுள் இருந்த நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் தாக்கியது இந்த ஏ.கே.விஸ்வநாதன் தான் என்பதை மறந்து விடக் கூடாது. இன்று இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததும், விஸ்வநாதன் ஒன்றும் புனிதராகிவிடவில்லை.

இந்த காக்கிச் சட்டைப் போட்ட பொறுக்கிகள், சமூகத்தின் அநியாயங்களுக்கும், காவல்துறையின் அத்துமீறல்களுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வழக்கறிஞர் சமூகத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து காவல்துறையினரும் ஒன்று சேர்ந்து நடத்தியது தான் இந்த தாக்குதல்.



நேற்று வரை, அரசு தங்கள் பக்கம் உள்ளது என்ற தைரியத்தில், ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்ட, காவல்துறையினர், இன்று நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தது போல், சிதறத் தொடங்கியுள்ளனர். இந்தச் சிதறலில், கருணாநிதி குளிர் காய்வார் என்பதை இந்தக் காவல் துறையினர் அறியவில்லை. தற்போதைக்கு தேர்தல் இல்லை என்பதால், காவல் துறையினரின் தயவு, கருணாநிதிக்கு அவசியம் இல்லை.


"தாக்கப் பட்ட நீதியரசர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்


ராதாகிருஷ்ணனாகயிருந்தாலும் சரி, விஸ்வநாதனாக இருந்தாலும், சரி, வழக்கறிஞர்களை இப்படி கொலை வெறியோடு தாக்கத் துணிந்த இந்த காவல்துறையினருக்கு தக்க பாடம் புகட்டும் வரை, வழக்கறிஞர்களின் போராட்டம் ஓயக் கூடாது.



/ஒப்பாரி/

Monday, August 17, 2009

கூண்டில் அடைக்கப் பட்ட விடுதலை சிறுத்தை



ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாள். தமிழகத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்து வந்தவர். பல தலித் தலைவர்கள் பெருந்தலைவர்களாக வளர்ந்ததும்,இயக்கத்தை மறந்து தங்களது சுயநலத்தைப் கவனத்தில் கொண்டு பதவி சுகத்தில், கொள்கைகளை கரைத்து விட்டு, தாங்களும் கரைந்து போன நிலையில், நம்பிக்கைக்குரிய தலைவராக திருமாவளவனை தலித்துகள் பார்த்தார்கள்.


1998 தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரும் வெற்றியைப் பெற முடியவில்லை என்றாலும், தொடர்ந்து நடந்த தேர்தல்களில், கணிசமான வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் தங்களுக்கென்று ஒரு இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது.

2008ன் இறுதியில், தமிழகமெங்கும் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி “ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில்” தன்னை இணைத்துக் கொண்டு, தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. முத்துக்குமார் மரணத்தையொட்டி, நடந்த பல போராட்டங்களிலும், தொல்.திருமாவளவன் தன்னை இணைத்துக் கொண்டு ஈழத்தமிழருக்காகவும், ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டியும் குரல் கொடுத்தார்.



தேர்தல் நெருங்கவும், தமிழகத்தின் கூட்டணி காட்சிகள் மாறுகையில், ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்த அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், கொள்கையைவிட, பதவிக்காக தமிழினப் படுகொலைக்குக் காரணமான எதிரியிடமே கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ”தொல்” திருமா ”தொலைந்த” திருமா ஆனார். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன பிறகு டெல்லி சென்ற பிறகும், தனக்கு உரிய மரியாதை கிடைக்காமல் மனம் புழுங்கினார் என்று திருமாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். தேர்தல் கூட்டணிக்காக திருமாவை இழுத்துப் பிடித்து கட்டிவைத்த கருணாநிதி, மந்திரி பதவிக்காக பேரம் நடத்தியபோது, திருமாவை வசதியாக மறந்து விட்டார்.


ஆனால், மந்திரி பதவி எப்படியாவது கிடைக்குமா என்ற நப்பாசையோடு திருமா இருந்தார் என்றுதான் தோன்றுகிறது.


இன்று ஈழ ஆதரவு உணர்வாளர்கள் மத்தியிலும், தன் நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழந்து நிற்கும் திருமா இழந்த தன் மதிப்பை மீட்பதற்காக தன் பிறந்த நாளை ”தமிழர் எழுச்சி நாளாக” கொண்டாடுகிறார். ஆகஸ்ட் 17ல் ”எழும் தமிழ் ஈழம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிட்டு, சென்னை நகர் முழுவதும் சுவர் விளம்பரங்களும் பேனர்களும் வைக்கப் பட்டிருந்தன. பல பேனர்கள், திருமாவின் படத்துக்கு அருகே, பிரபாகரன் படத்தோடு வைக்கப் பட்டு இருந்தன. வன்னியில் முள் வேலிக்குள் அடைப்பட்டிருக்கும் தமிழர்களை வெளிக் கொணர்வதற்காகவாவது இம்மாநாடு பயன் அளிக்கட்டும் என்ற வகையில் தமிழ் உணர்வாளர்கள் இம்மாநாட்டை வரவேற்கவே செய்தார்கள்.


ஆகஸ்ட் 15 அன்று இரவு, சென்னை காவல்துறையிலிருந்து திருமாவை தொடர்பு கொண்டு ”ஈழம்” என்ற வார்த்தை மாநாட்டின் தலைப்பிலிருந்து நீக்க வேண்டும், பிரபாகரன் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறினர்.

மறைக்கப் பட்ட "ஈழம்"



மறைக்கப் பட்ட "பிரபாகரன்"


போராட்ட குணம் கொண்ட தலைவர் (???) என்று நம்பப்டும் திருமா இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால், விசித்திரமாக திருமா பிரபாகரன் படங்களை அழிப்பதற்கும், ”ஈழம்” என்ற வார்த்தையை அழிப்பதற்கும், தன் சம்மதத்தை தெரிவித்துள்ளார். மேலும் தன் தொண்டர்களிடம், காவல் துறையின் பெயர் மற்றும் படம் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருமா இப்படி ”வெறுமா” ஆகியதன் பின்னணியை விசாரித்தால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன. சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம், பத்பநாபமூர்த்தி மற்றும் மூன்று நபர்களுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் ஆக்ரமிப்பு செய்து, கட்சி நடத்தி வந்தார் திருமா. இந்த இடத்தில் அலுவலகம் கட்ட, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, மேற்கு மாம்பலம் தாசில்தார் அலுவலகத்திலிருந்து அலுவலகம் கட்ட அனுமதி வேறு பெற்றிருக்கிறார். பத்பநாபமூர்த்தி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஆ‌க்‌கிர‌மி‌த்து க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விடுதலை ‌சிறு‌த்தை‌க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைமை அலுவலக‌த்தை 15 நா‌ட்களு‌க்கு‌ள் கா‌லி செ‌ய்ய செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணையரு‌க்கு உத்ததர‌வி‌ட்டா‌ர். இத்தீர்ப்பை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி திருமாவளவன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டு விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இத்தீர்ப்பை செயல்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திக்கச் சென்ற திருமாவளவன் மூன்று மணி நேரம் காக்க வைக்கப் பட்டதாகவும், செய்தியாளர்களின் கேள்விக்கு ஆணையருக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.


ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு மேலாக "எழும் தமிழ் ஈழம்" மாநாட்டுக்கு செய்யப் பட்டிருக்கும் சுவர் விளம்பரங்களை துளியும் கண்டுகொள்ளாத கருணாநிதியின் காவல்துறை, மாநாட்டுக்கு முதல் நாள் இவ்வாறு அயோக்கியத்தனமாக மிரட்டல் விடுவதும், அதற்கு திருமாவளவன் அடிபணிவதும், திருமாவளவனின் பலவீனத்தையே காட்டுகிறது.

மறைக்கப் பட்ட "ஈழம்"

இந்தப் பலவீனம் இன்னொருவர் இடத்தில் ஆக்ரமித்து கட்சி நடத்துவதாலேயே வந்தது. நேர்மை வழுவினால், எத்தகைய சமரசத்தை செய்ய வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா திருமா ?



இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உடனடியாக நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப் பட்டு, ஆக்ரமித்து வைத்துள்ள அந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் கறையை துடையுங்கள். ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள். உங்களை நம்பி இன்னும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்த, நீங்கள் சரியான வழியில் பயணிப்பது அவசியம். இன்னும் உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. பாரதியின் வரியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

"படிச்சவன் சூதும் வாதும் பண்ணால் போவான் போவான்; அய்யோன்னு போவான்."
/ஒப்பாரி/


Tuesday, August 11, 2009

சிறைக் கைதிகள் உரிமைக்கான ஒரு பேரணி !






தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில், சிறைக் கைதிகளுக்கான ஒரு கோரிக்கைப் பேரணி, 10.08.2009 அன்று நடைபெற்றது.


1) 7 ஆண்டுகள் தண்டனைக் கழித்த வாழ்நாள் சிறையாளிகளை விடுதலை செய்ய வேண்டும்

2) 10 ஆண்டுகள் தண்டனைக் கழித்த அனைத்து வாழ்நாள் சிறையாளிகளையும் எந்தவித பாரபட்சமோ பாகுபாடோ இல்லாமல் (குற்றப் பிரிவுகளைப் பார்க்காமல்) விடுதலை செய்ய வேண்டும்.

3) ஆண்டு தண்டனைப் பெற்ற சிறையாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும்.

4) ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை சிறையாளிகளை பிணையில் விடுதலை செய்ய உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.


இக்கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பதற்கான காரணங்கள்.
1) கடந்த அண்ணா பிறந்தநாள் நு£ற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, தமிழக அரசு ஏழு ஆண்டுகள் தண்டனை கழித்த சிறையாளிகளை விடுதலை செய்தது. அதே போல், இந்த ஆண்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

2) கடந்த செப்டம்பர் 15 அன்று 1405 வாழ்நாள் சிறையாளிகள் விடுதலை செய்யப் படுகையில் சில சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனைப் பெற்ற வாழ்நாள் சிறையாளிகள் விடுதலை செய்யப் படவில்லை. அவ்வாறு விடுதலை செய்யப் படாதவர்கள் 400க்கும் மேற்பட்டோர் தமிழக சிறைகளில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். அவர்களில் பலர் 15 ஆண்டுகளைக் கடந்தவர்களாகவும், ஒரு சிலர் 20 ஆண்டுகளை கடந்தவர்களாகவும் உள்ளனர்.

(i) குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வேலு£ர் பெண்கள் சிறையில் உள்ள பக்கா என்ற விஜயாவும், அவருடைய கணவரான வேலு£ர் ஆண்கள் சிறையில் அடைக்கப் பட்டுள்ள தாடிக்காரன் என்ற சுப்ரமணியன் ஆகிய இருவரும் 18 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்கள் விடுதலை செய்யப் படாததற்கு அரசு சொல்லும் காரணம், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஆதாயத்துடன் கூடிய கொலையாகும். கொலை செய்கையில் அவர்கள் பெற்ற ஆதாயம் வெறும் ரூபாய் 500 மட்டுமே.

(ii) சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள டேவிட் ராஜன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இதே போன்று ஆதாயக் கொலையில் தண்டனை பெற்று 24.02.1989 முதல் இருந்து வருகிறார்.

(iii) வாழ்நாள் சிறையாளிகளுக்கு ஆண்டுதோறும் 15 நாள் அவசர கால விடுப்பு (Emergency parole) வழங்கப் படுவதுண்டு. அவ்வாறு விடுப்பில் செல்பவர்கள் சில நேரங்களில் குடும்ப சூழ்நிலை காரணமாக விடுப்பு முடிந்து காலதாமதமாக சிறைக்கு வந்தால் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 224ன் படி வழக்கு தொடுக்கப் படுகிறது. அவ்வாறான வழக்கில் தண்டனையாக 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறைத்தண்டனையோ, ரூ.500/- அபராதமாக விதிக்கப் படுகிறது. அவ்வாறு தண்டனைப் பெற்றவர்கள் முன்விடுதலைக்கு தகுதியில்லாதவர்கள் என்று அவர்கள் விடுதலை செய்யப் படுவதில்லை. குறிப்பாக புழல் மத்திய சிறையில் உள்ள ஆறுமுகம், விடுப்பில் சென்றுவிட்டு 8 மணிநேரம் தாமதமாக வந்தார் என்பதற்காக 11 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். புழல் மத்திய சிறையில் இருக்கும் ஷா இன் ஷா ராஜா என்பவர் அண்ணாமலைப் பல்கலைப்பழகத்தில் தேர்வு எழுத விடுப்பில் சென்றவர் குறிப்பிட்ட காலத்துக்குள் சிறை திரும்பாததால் 21 வருடங்களாக சிறையில் உள்ளார்.

(iv) வேலு£ர் சிறையில் உள்ள மணி என்ற மாணிக்கம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இதே காரணத்திற்காக சிறையில் உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு, ஒரு பக்க கை கால் செயலிழந்த நிலையில் பேச்சற்றவராக, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டு, ஒரு நடைபிணமாக சிறையில் இருந்து வருகிறார்.

(v) ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் மூன்று மாதம் அல்லது ஆறு மாதங்கள் தண்டனை பெற்று, அல்லது குறைவான ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களை அந்த தண்டனைக் காலம் முடிந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, பலர் விடுவிக்கப் படாமல் பல ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். கோவை மத்திய சிறையில் உள்ள கந்தசாமி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உள்ள தென்தமிழன் என்பவரும் 16 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள்.

(vi) இவற்றையெல்லாம் விட, மிகவும் அதிர்ச்சி தரத்தக்கதான ஒரு வழக்கு, வேலு£ர் மத்திய சிறையில் உள்ள அந்தோணி குரூஸ் என்பவருடையது. அவர் கீழ் நீதிமன்றத்தில் மரண தண்டனைப் பெற்று, பின் அவரது தண்டனை உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை ரத்து செய்யப் பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப் பெற்றது. அவ்வாறு மரண தண்டனை விதிக்கப் பட்டு, ஆயுள் தண்டனையாக நீதிமன்றமே குறைத்தால் கூட, அவர்களை முன்விடுதலை செய்ய முடியாது என்று அதிகாரிகளின் தவறான போக்கால் அவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்.
அதே போல புஷ்பராஜ், முத்துராமன் ஆகியோர் 17 ஆண்டுகளாக இதே காரணத்திற்காக சிறையில் இருந்து வருகிறார்கள்.

(vii) இதேபோல், மத்திய அரசு நிறுவனம் புலனாய்வு செய்த வழக்கில் தண்டிக்கப் பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக முன் விடுதலைக்கு பரிசீலிக்கப் படாமல், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 18 ஆண்டுளாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

(viii) கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற சிறையாளிகள் 76 பேர் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகவே மதக்கலவரத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்க முடியாது என்று அரசு ஒரு உத்தரவை பிறப்பித்து அவர்களை தொடர்ந்து சிறையில் வைத்து வருகிறது.

மேலே கூறப்பட்ட உதாரணங்களைப் பார்க்கும்பொழுது, சிறு சிறு காரணங்களுக்காக ஒரு நபரின் உரிமையை பறித்து, அவரை தொடர்ந்து சாகும் வரை சிறையில் அடைப்பது என்பது மனித உரிமைக்கு எதிரானது.

1997ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பொன்விழா ஆண்டை ஒட்டி, எவ்வித பாகுபாடும் பார்க்காமல், 10 ஆண்டுகள் தண்டனை கழித்த வாழ்நாள்¢ சிறையாளிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. அதே போல இந்த ஆண்டும், தமிழக அரசு எந்த வித பாகுபாடும் இல்லாமல் 10 ஆண்டுகள் கழித்த அனைத்து சிறையாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே இப்பேரணியின் நோக்கம்.

3) கடந்த 2000 ஆண்டு முதல் ஆண்டு தண்டனைப் பெற்ற சிறையாளிகளுக்கு தண்டனைக் குறைப்பு ஏதும் வழங்கப் படுவதில்லை. ஒரு வாழ்நாள் சிறையாளி விடுவிக்கப் படுகையில் 8 அல்லது 10 அல்லது 12 ஆண்டுகளோ, தண்டனைப் பெற்ற ஒரு சிறையாளி தண்டனைக் குறைப்பு வழங்கப் படாமல் தொடர்ந்து சிறையில் வாடுவது அரசு சிறைக் கைதிகளின் உரிமைகளை சரியாக கவனத்தில் கொள்ளாததே காரணம். எனவே ஆண்டு தண்டனைப் பெற்ற கைதிகளுக்கு இந்த ஆண்டு தண்டனைக் குறைப்பு வழங்க வேண்டும்.

4) தமிழக சிறைகளில் விசாரணை கைதிகளாக தொடர்ந்து பல ஆண்டுகளாக பிணையின்றி சிறையில் இருந்து வருகிறார்கள். குணங்குடி அனீபா, அப்துல் ரகீம், முபாரக் போன்றவர்கள் 11 ஆண்டுகளாக தொடர்ந்து விசாரணை சிறைவாசியாகவே இருந்து வருகிறார்கள். நீதியரசர் கிருஷ்ணய்யர், பிணை ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்றும் சிறை என்பது விதிவிலக்கு என்றும் தீர்ப்பளித்துள்ளார். ஆனால், அதை அரசோ நீதிமன்றங்களோ கவனத்தில் கொள்ளாதது வேதனையளிக்கக் கூடியது. இதே போல, கோவை சிறையில், 7 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை சிறையாளிகளாகவே, பிணையின்றி பலர் இருக்கின்றனர்.



ஒரு வழக்கில் 60 நாட்களிலோ அல்லது 90 நாட்களிலோ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லையென்றால், அவர் பிணையில் விடுவிக்கப் படவேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் உள்ளது போல ஒருவர் விசாரணையின்றி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தால், அவரை நீதிமன்றம் பிணையில் விடுவிக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.



சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றது.



/ஒப்பாரி/

Saturday, August 8, 2009

முத்துக்கருப்பன் IPS மீதான ஊழல் வழக்குகள் மூடப்பட்டன


முத்துக்கருப்பன், IPS



2001ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் போட்டிகள் அதிகம் இருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப் பட்டார் முத்துக்கருப்பன் IPS. கூடுதல் டிஜிபி தரத்திலான அதிகாரிகள் தான் சென்னை மாநகரத்தின் காவல் ஆணையாளராக நியமிக்கப் படுவது வழக்கம். ஆனால், ஐஜி அந்தஸ்த்திலான முத்துக்கருப்பன் நியமிக்கப் பட்டது அப்போதே பலரது புருவங்களை உயர்த்தியது.



கருணாநிதியின் நள்ளிரவு கைது


முக்கிய பதவிக்கு வந்த முத்துக்கருப்பன், ஆட்சிக்கு விசுவாசமாக இட்ட கட்டளையை நிறைவேற்றினார். 2001 ஜுன் 21 அன்று நள்ளிரவு, கருணாநிதியை வீட்டுக் கதவை உடைத்து, வலுக்கட்டாயமாக கைது செய்தார் முத்துக் கருப்பன். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்து பிஜேபி அரசில் மூன்று கேபினெட் மந்திரிகளை வைத்திருந்தார் கருணாநிதி. அவர் கொடுத்த நெருக்கடியில், ஏறக்குறைய அதிமுக அரசு டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானது.



ஜார்ஜ் IPS




க்ரிஸ்டோபர் நெல்சன் IPS



முத்துக்கருப்பன், IPS



பிஜேபி அரசில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, உடனடியாக கருணாநிதி, கைது நடவடிக்கையில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன், முத்துக் கருப்பன், ஜார்ஜ் ஆகிய மூன்று அதிகாரிகளையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்ற வைத்தார். ஆனால் இந்த மூவரும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடினார் முத்துக் கருப்பன். சென்னை அண்ணா நகரில் ஒரு இடம் தொடர்பாக இரு நபர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கப் பட்டது. இதில் ஒரு தரப்புக்கு சாதகமாக முத்துக் கருப்பன் செயல்பட்டார். 30.08.2001 அன்று காங்கிரஸ் தலைவர் மூப்பனார் இறந்து அவரது உடல் அஞ்சலிக்காக காமாராஜர் அரங்கில் வைக்கப் பட்டிருந்தது. சென்னை நகரில் பல காவர்கள் பாதுகாப்பு பணிக்காக காமராஜர் அரங்கில் குவிக்கப் பட்டிருந்தனர்.

இதைப் பயன்படுத்தி, முத்துக் கருப்பன் ஏறக்குறைய 30 காவலர்களை போலீஸ் வேனில் ஏற்றி அண்ணா நகருக்கு அனுப்பி அங்கு தற்காலிகமாக கட்டப் பட்டிருந்த குடிசையை பிரித்து எரிந்து, இந்த இடம் இன்னாருக்கு சொந்தமானது என்று ஒரு பெயர்ப்பலகையை வைத்தார்.
சம்பந்தப்பட்ட நபரிடம், அந்த இடத்தை ஜெயலலிதா வாங்க விரும்புகிறார் என்று மிரட்டியுள்ளார் என்ற தகவலை அறிந்த உடனடியாக முத்துக் கருப்பனை கமிஷனர் பதவியிலிருந்து மாற்றி, தற்காலிக பணிநீக்ககம் செய்தார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ப்யூரிட்டா மினரல் வாட்டர் என்ற நிறுவனமும், ஒரு பால் பண்ணையும் நடத்தியதாகவும், அதற்காக ஏறக்குறைய 20 காவலர்களை வேலை வாங்கியதாகவும் ஒரு விசாரணையும் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப் பட்டது.

ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு மேல் பணி இடை நீக்கத்தில் இருந்தார் முத்துக் கருப்பன். ஜெயலலிதா இருக்கும் வரை பணிக்கு வரவே முடியவில்லை.

இந்நிலையில், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அக்டோபர் 2007ல் பணி இடை நீக்கம் ரத்து செய்யப் பட்டு, பணி வழங்கப் பட்டது. இது போக கடந்த வாரம், அவர் மீது இருந்த வழக்குகள் அனைத்திலும் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த முத்துக் கருப்பன், மீண்டும் திமுக ஆட்சியிலேயே செல்வாக்கு பெறுவது என்பது அதிகாரிகள் எப்படியெல்லாம் சமரசம் செய்து கொண்டு சோரம் போவார்கள் என்பது தானே.


கைது செய்யப் பட்ட கருணாநிதி சிறை வாசலில்



இதே நள்ளிரவு கைதில் தொடர்புடைய க்ரிஸ்டோபர் நெல்சன் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ளார். ஜார்ஜ் தற்போது, நாகர்கோயில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளார்.

ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும், இந்த அதிகாரிகள் காட்டில் எப்போதும் மழைதான். இவர்களுக்கு எந்த சட்டமும் பொருந்தாது.


ஒப்பாரி